BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, February 2, 2011

உன் குரல் கேட்க
விழைந்திடுவேன்,
என்றோ
நீ சொன்ன ஓர் வார்த்தை
எதிரொலிக்கும்,
மெல்லியதாய்..

உன் முகம் பார்க்க
விழைந்திடுவேன்,
கற்பனைக் குதிரையில்..
இன்று நீ,
இல்லாத இடம் தனிலும்..

உன் மடி சாய
விழைந்திடுவேன்,
தலையணைக்கு
கரம் இல்லை
கண்ணீர்தனை துடைக்க..

உன்  செவி சொல்ல
விழைந்திடுவேன்,
எனக்கு பிடித்த பல..
என் எண்ணம் போல்,
நீ உரைக்கையிலே..
காகிதங்கள் மட்டும் அறியும்
நான் சொன்ன மறுமொழிகள்..

இந்நொடி
உன் அருகாமை
வேண்டுமென்று விழைந்திடுவேன்,
நொடிகள் விழைவுடன்
கிளைத்து வளர்ந்திட,  
பசுமைப் புல்களிடை
பூட்டிவைத்த மறைபொருள்
உன்னிடம் சொல்லாத பல,
என் சலனமற்ற கண்ணீரும்
தனிமையில் அப்பசுமையுடன் பேசியதும்
சிறிதே அதில் கலந்தபடி..

விழைந்திடுவேன்...



0 comments: