BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, February 28, 2011

எனக்கென்றே  ஓர் புன்னகை,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை ,
உன் மௌனத்தில் இருக்குமென.

எனக்கென்றே ஓர் எழுத்து,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை,
உலகறியா ஒருத்தியாய்,
பலருக்கான உன் எழுத்தில் இருக்குமென...

எனக்கென்றே ஓர் கரம்,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை,
மனப்பாதுகாவல் பொய்க்கும் நொடி, 
தோன்றும் நீர்த்துளிகளிடை  இருக்குமென..

எனக்கென்றே ஓர் அன்பு,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை..
என் பெண்மைக் காலங்களில்,
இருக்குமென. 

எனக்கென்றே ஓர் உரிமை,
இருந்ததில்லை உன்னிடம்..
ஆனால்,
தேடியதுண்டு அதனை..
என்றோ  கேட்கும்,
உன் குரலிடை இருக்குமென ..

எனக்கென்றே ஓர்  உறவு,
தேடுகிறேன் உன்னிடம்..
தேடல்,
பொயித்தபடி நாள் இறந்து, 
மெய்க்குமென நாள் பிறக்கும்.. 

எனக்கென்றே ஒன்றாய் நான்,
தேடாத ஒன்றளித்தாய்..
நீர்த்துளிகள்  அனுதினமும்
நன்றிகள்,
புன்னகையாய்..

1 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக அருமை எனக்கான என்கிற
பெண்மைக்கே உரிய
தனக்கானஅங்கீகாரத்தை
,உரிமையைத் தேடும்
உன்னத குணத்தை
மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்