BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, March 7, 2011

மூன்றாமவன்..


நட்பு வட்டாரம் மட்டில்,
நீ அவ்வாறு..
மூன்றாமவன்!..
மறைமுகமாய் நட்பு கூறும்
வார்த்தைகளிடை,  
நீ அந்த மூன்றாமவன்.
நட்பிற்கு முதன்மை தந்து.. 
அவ்விடம் மௌனித்தாலும்,
அவ்வாறு இல்லையே.
எனைப் பொறுத்தமட்டில் நீ..
நட்பும் கலந்ததாய் நீ எனக்கு, 
துன்பங்கள் இன்பங்கள்
செவி மறுத்து இருப்பினும்
அவ்வாறு இல்லையடா!
நீ எனக்கு,
மூன்றாமவனாய்..  
உன் இன்பத்தின் ஆதிகள்,
நான் இல்லாதபோதினும்.. 
துன்பத்தின் கரை சேர்தல்,
நானாய் இருப்பேனோ? 
மனம் வலிக்கும் நொடிகளில்
சிரம் வருடும் கரம் போல்...
உன் துன்பம் கரை சேர்தல்
நானாகி இருப்பேனோ ?!
எல்லைகள் எனது,
ஆகிய அம்மனதிற்கு.





0 comments: