tag:blogger.com,1999:blog-81682433902888659392024-03-04T20:47:06.846-08:00என் பேனாவிலிருந்து ...!!எண்ணச்சிதறல்கள்..Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.comBlogger153125tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-74953545862629443222014-03-08T11:35:00.000-08:002014-03-08T11:35:29.499-08:00இதை நான் இன்றுதான் கூறவேண்டும் என்று எண்ணியிருந்தேன்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
காலைத்
தொலைக்காட்சியில் மகளிர் தினம் பற்றி வியப்புடன் பேசிக்கொண்டிருந்த ஒரு
தொகுப்பாளினியிடம், அதே தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை மகளிர் தினமாக
நமக்கு நிருபிக்கும் பொருட்டு பட்டியலிடப்பட்டு பேச வைக்கப்பட்ட சாதனைப்
பெண்களிடம், அந்த தொலைக்காட்சியின் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
பார்த்து தன் தினத்தைக் கொண்டாடிய என் பாட்டியிடம், மகளிர் தினம் பற்றி
பிரஸ்த்தாபித்தபடி ரயிலில் பயணித்த சக பெண் பயணியிடம், எனக்கு மகளிர் தின
வாழ்த்துக்கள் கூறிய சக பெண் ஊழியர்களிடம், வாழ்த்துக்கள் கூற வந்த சக ஆண்
ஊழியர்களிடம், வலைதளத்தில் இன்று மட்டும் தன்னை ஒரு படி மேலாகவே
பெண்களாகக் காட்டிக்கொள்ளும் பெண்களிடத்திலும், ஒரு படி மேலாகவே தன்னை ஆண்
என்று காட்டிக்கொள்ளும் ஆண்களிடத்திலும் இதை நான் இன்றுதான் கூறவேண்டும்
என்று எண்ணியிருந்தேன், நான் தினமும் பயணிக்கும் ரயிலில் பெண்கள்
பெட்டியில் கூட்டம் ஏறஏற வார்த்தைகளும் விவாதங்களும் சண்டைகளும்
அதிகரித்துக் கொண்டிருக்கும், படியில் நிற்பவர் , உள்ளே இருப்பவரை நகரச்
சொல்லுவார், உள்ளே இருப்பவர் இன்னும் உள்ளே இருப்பவரை நகரச் சொல்லுவார்,
இப்படி ஒருவரை ஒருவர் நகரச் சொல்லி யாருமே நகராமல் அதே பெட்டியில் ஏதோ ஒரு
இடத்தில் எப்படியோ ஒரு சண்டை ஆரம்பித்திருக்கும்.அடுத்த ரயில் நிலையத்தில்
உள்ள கும்பலின் அளவைப் பொருத்து அந்த சண்டையின் அளவு நீடிக்கலாம்.அவரவர்
நாகரிகம் பற்றி சண்டையின் வழியாக விவாதிக்கப்படும்.ஆனால், யாரேனும் ஒரு
குறத்தி கையில் குழந்தை, மூட்டை சகிதம் ஏறிப் படிக்கட்டின் அருகில்
நின்றிருந்தால், அவளை உள்ளே நுழையவும் விடமாட்டார்கள், எவரும் குழந்தையை
வாங்கிக்கொண்டு தன் மடியில் வைத்துக்கொள்ளவும் மாட்டார்கள், குறத்திதானே!.
கர்ப்பிணிகள் நின்றபடி வந்தால், அவர்களுக்கு நாம் இடம்தரக் கூறினால்
'எனக்குந்தாம்மா கால் முட்டி வலிக்குது' என்பது பதிலாகக் கிடைக்கும்.பை தி
வே,நாகரிகம் சார்ந்த பேச்சுகள் அடுத்த நாள் கூடத் தொடரலாம். வலைதளங்களில்
சகபெண்கள் அவ்வளவு ஒற்றுமையுடன் ''அவ்வ்வ்'' என்று கூறிவிட்டு '':-)''
இட்டுச் செல்வதைப் பார்க்கையில் சில நேரம் ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த
அவ்வ்வும் '':-)''களும் ரயில் பெட்டிகளில் ஏன் வேலை செய்வதில்லை?.இது, இந்த
பாசம் ஏன் நம் வீட்டில், நம் அண்டைவீட்டில் , நம் தெருவில் என ஆங்காங்கே
சிதறிக்கிடக்கும் சக பெண்களுடன் ஏற்படுவதில்லை. நாம் பெண்ணியம் என்ற ஒரு
வார்த்தையை உபயோகிப்பதற்காகவே சமூகத்தில் மிச்ச சொச்சமாய்
வளர்க்கப்பட்டுவரும் அந்த பெண்களுக்கு விடுதலை அளித்துவிட்டுக் கூறுங்கள்
உங்கள் மகளிர் தின வாழ்த்துகளை.<br /> இரண்டு வாரத்திற்கு
முன்புதான் அந்தக் காய்கறி வண்டியோரம் தனது கவுனைத் தூக்கியபடி அந்த சிறு
குழந்தை நின்றுகொண்டிருந்தது அப்போதுதான் சிறுநீர்க் கழித்துவிட்டு
வந்திருக்கவேண்டும்,அந்த சிறுகுழந்தைக்குத் தெரியாது அதற்கு முந்தைய
தினம்தான் தன் வயதுடைய ஒரு குழந்தையை ஒருவன் வன்புணர்ச்சி செய்து
கிழித்துப்போட்டதை.அது தெரிந்திருந்தால் அது தனது கவுனைத் தூக்கியபடி
நின்றிருக்காது. நான் பயந்தேன், இந்தக் குழந்தையையும் அருகில் இருக்கும்
யாரவது ஒருவன் ஏதாவது செய்துவிட்டால்? தேவை ஒரு வஜைனாதானே?, இன்று
கூடப்பார்த்தேன் உயிருடன்தான் இருக்கின்றது அந்தக் குழந்தை.ஆண்கள்
நல்லவர்கள்தான் என்று கூறுவதற்கு அந்த ஒரு குழந்தையேனும் அத்தாட்சியாக
இருக்கட்டும் அதனையேனும் எதுவும் செய்யாமல் விட்டுவிடுங்கள்.அப்படிக்
காப்பாற்றப்பட்டு கடைசியாக எஞ்சி நிற்கும் அந்தக் குழந்தையிடம்
கூறிவிடுங்கள் உங்களது மகளிர் தின வாழ்த்துகளை.</div>
ஆண், பெண் என்று பேதம்
பார்க்காமல் மனிதம் எங்கோ தினமும் செத்தபடி இருக்க, எங்களுக்கு வேண்டாமே
உங்களது வாழ்த்துகள். </div>
Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-84671002551036104862013-11-05T23:24:00.000-08:002013-11-05T23:26:25.587-08:00நீ! நான்! நிமிடங்கள்..-2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: black;"><i><span style="font-size: small;">இது மழைப் பருவம்.இப்போது நம் குரல்களுக்கிடையே நிலவும் அமைதியை,
மழைத்துளியின் சிதறல்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.இந்த மழைதான் எவ்வளவு
அழகானது, இசை போல.இசையும் இசை சார்ந்தும் தன பிள்ளைகளுக்குப் பெயர்
வைக்கின்றனர் பலர்.'மழை' என்று ஏன் எவரும் பெயர் வைப்பதில்லை?.எனக்கு
என்னவோ இசையும் ,மழையும் ஒரே பெயர் போல்தான் ஒலிக்கும் என்று தோன்றுகிறது
.இலையுதிர் காலங்களில் நான் நடந்து சென்ற அதே பாதையில் எனக்கும் உன்
நினைவுகளுக்கும் குடை பிடித்தபடி நான்.குடையின் மேல் பட்டும் படாமல்
துளிர்த்திருக்கும் அந்த மழைத்துளிகளும் உன் போல்தான்,பட்டும்
படாமல்.துளிகள் ஒவ்வொன்றும் என் சிறு சிறு உலகங்களாக.மழை நின்றது.குடைமீது
துளிர்த்திருந்த என் உலகங்களும் நழுவிச் சென்று விழுகின்றன,இலையுதிர்
காலத்துச் சருகுகளின் மேல்.</span></i> </span> </div>
Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-25643713645188856522013-11-05T01:32:00.000-08:002013-11-05T23:25:22.224-08:00 நீ! நான்! நிமிடங்கள்..-1 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: black; color: white; font-family: Helvetica Neue, Arial, Helvetica, sans-serif;"><i>இந்த இயற்கையின் ஒவ்வொரு பருவமும் தன் துவக்கத்தில் ஏதோ ஒன்றை உடன் அழைத்து வருகிறது,முந்தைய பருவத்தின் தேய்பிறையில் மறைந்த உன் நினைவுகள் மீண்டும் வளர்ந்தபடியாய்,இதோ இந்த இலையுதிர் காலத்தின் சாலைகளில் கீழே உதிர்ந்து கிடக்கும் சருகுகளின் மெல்லிய உரசல்கள்,சில நேரங்களில் நம் பேச்சுகளிடையே நிலவிய மௌனங்களும் இவ்வாறுதான் இருந்தன. ஆனால் அது என்ன சட்டென இலைகள் வெவ்வேறு திசை நோக்கி நகர அங்கு ஒரு சஞ்சலம் மிக்க அமைதி நிலவுவது ஏன்?.இந்த இலையுதிர்வுகளுக்கு நடுவே அங்காங்கே முகம் கவனிக்கபடாத மனிதர்களின் குரல்களும் ஒலிக்கின்றது.எனோ உன்னைப் பற்றிய சிந்தனைகள் அவர்களது குரல்களையும் கவனிக்கத் தவிர்க்கிறது.அந்த குரல்களுக்கும் என் சிந்தனைகளுக்கும் இடையேதான் எங்கோ தொக்கி நிற்கிறது சிறு அமைதியும்.விளக்கமளிக்க முடியாத கேள்விகள் போல் விவரிக்க முடியாத இந்த அமைதி.அந்த அமைதியை தாங்கியபடி நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,இந்த சாலையில் என் கண்முன்னே சருகுகள் உதிர்ந்தபடி. </i></span><span style="background-color: white; color: #222222; font-family: arial; font-size: x-small;"><br /></span></div>
Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-79807552221548490282013-04-13T00:30:00.000-07:002013-04-13T00:34:14.341-07:00லாவண்டர் கனவுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அடர் பனிப்பாதையிலே உதிர்ந்து கிடக்கும் லாவண்டர் மலர்களை உற்று நோக்கியபடி நடந்துகொண்டிருக்கிறேன்.நடப்பது எனக்கு பிடிக்கும்.கால்கள் நடந்துகொண்டிருக்க இந்த மனது மட்டும்,கரைதொடும் புது அலைகள் போல் ஒவ்வொருமுறை எட்டித் தொடும்போதும் ஒரு புதிய உலகத்தை விட்டுச் செல்லும்.நான் என்னைத் தேடத்துவங்கி உன்னில் தொலையும் உலகம் அது.நடப்பது மிகப் பிடிக்கும்.ஒவ்வொரு லாவண்டர் மலர் உதிரும்போதும் உன்னை நோக்கி நான் எடுத்துவைக்கும் அடுத்த தடத்தை நிர்ணயித்துவிடுகின்றன.அந்த வெண்படர்தலின் வழியே உன்னைத் தேடியபடி என் விரல்கள் அலைந்துகொண்டிருக்கின்றன.மனதின் மெல்லிழை அது தொட்டுவிடும் தூரத்தில் எங்கோ நீ. <br />
என் தேடல்களிடையே அவ்வப்பொழுது நான் கடந்து வந்துவிட்ட பாதையையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.என் கடந்தகாலம் அது .உன்னுள் நான்..என்னுள் நீ... என்று கூறினாலும் நான் வேறு..நீ வேறு.. என்று நிமிடக்கணக்கில் நினைவுபடுத்தும் தருணங்கள் நிரம்பியது.நான் உன்னுள் கலந்துவிட எத்தனிக்கும் ஒவ்வொரு கணமும் அந்த கடந்தகாலம் என் நினைவுகளில் இருந்து எங்கோ கரைந்துகொண்டிருக்கிறது.இதோ நான் திரும்பிப் பார்க்கையில் இருள் படர்ந்த ஏதோ ஒரு சூன்யத்தில் அவை சுருங்கிக் கொண்டிருக்கின்றன.<br />
<span class="st">புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் இந்த மண்ணுக்கும் கொஞ்சம் புசியுமாம் என்று தோழியுடன் பாடிக்கொண்டே கட்டிய மணல்வீடுகளுக்கு இன்று விலாசம் இல்லை.அவர்கள் கண்டதிலேயே நான் சிறந்த பெண் என்று கூறி சிறிதாய் என்னை ஆணவம் கொள்ளச்செய்த அண்டைஅயல் வீட்டிலிருந்த நரைமுடிகளும் தளர்தோள்களு</span>ம், ஏனோ அந்த தாத்தாக்களும் பாட்டிகளும் இறந்து போனபோது நான் அழவில்லை.என் தாத்தாவும் அவரது ரேடியோப்போட்டியும் இருந்ததற்கான அடையாளமாய் அந்த ரேடியோவின் கொரகொரப்புகள் மட்டும் இன்னும் எங்கள் வீட்டுச்சுவர்களில் எதிரொலித்தபடி.தொலைந்த அவர்கள் இளமை நினைவுகளை என்னிடம் பகிரும் அப்பாவும் அவரது நண்பர்கள் வட்டமும்.ஒருநாள் அந்த வட்டத்தில் நானும் ஒருபுள்ளியாய்.அந்த நட்பு வட்டத்தின் மிகச்சிறிய உறுப்பினர்.நாளடைவில் எனக்கான நட்பு வட்டம்,எந்தன் நட்பு வட்டம் என் இருவேறு வட்டத்தின் இடைப்புள்ளியாய் நான் மாறியிருந்தேன்,அந்த வட்டம் உன்னையும் அணைத்துச்செல்லும் என்று நான் அன்று அறிந்ததில்லை.பாடப்புத்தகங்களின் பின்னட்டைகள் பாரதியை நான் வரைவதற்காகவும்,எதையேனும் கிறுக்குவதற்க்காகவும் எனக்காக காலியாய் விடப்பட்டிருந்தன.அப்போதெல்லாம் உன் பெயரை நான் அதில் எழுதியதில்லை.எதிர்காலம்,லட்சியம் என்ற வார்த்தைகள் என்னுள் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கும்.யாருமற்ற அந்த பூங்காவில் அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி நிறைய யோசித்ததுண்டு,அப்போது என் பின்புறம் நீ அங்கே நின்றிருந்ததில்லை.முதன்முதலில் தொலைபேசி என்ற ஒன்றைப் பார்த்து வியந்தது, உருவம் அறிந்துகொள்ளமுடியாத அதில், ஏதோ ஒரு உறவினரிடம் ஹலோ என்றது,அப்போது எனக்குத் தெரிந்திருந்ததில்லை, அலைபேசியில் உன் முகம் பார்த்துக் கொண்டு பேசாது இருக்கமுடியுமென.நான் முன்னோக்கி வந்ததில் ஆங்கங்கே சிதறுண்டு விட்ட கோர்வைகள் பல,உதிர்ந்துகொண்டிருக்கும் இந்த மலர்கள் போல். இந்த மலர்களை மீண்டும் அந்த மரங்களிடம் சேர்க்கக் கையில் எடுத்தேன்,அங்கு வேறு ஒன்று பூத்துவிட்டிருந்தது.அவைகளை ஏந்தியபடி இதோ நான் உன்னை நோக்கி.உன்னிடம் நெருங்க நெருங்க அவைகள் நிறம்மாறிக் கொண்டிருக்கின்றன.லாவண்டர் மெல்லிதழ்கள் கொஞ்சம் கடினம் மிக்க ஊதாவாக,எங்கிருந்தோ நீ அவைகளை ஸ்வாசித்துக்கொண்டிருப்பது போல.என் கடந்தகாலமும் நீயும் இரு துருவங்களைப் போல,நான் அந்த துருவங்களை இணைக்கும் கோட்டில் எங்கோ இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன் முற்றிலும் ஊதாவாகிவிட்டிருக்கும் அந்த லாவண்டர் மலர்களை பார்த்தபடி.அங்கே நீ!.மற்றுமொரு கடந்தகாலம் தான் பிறப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறது. <br />
<br />
<br /></div>
Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-43454820090948673482013-02-10T01:15:00.000-08:002013-02-10T01:16:01.093-08:00விஸ்வரூபம் - இதுவல்ல<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://cdn1.supergoodmovies.com/FilesFive/vishwaroopam-first-look-posters--cd7c83ed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://cdn1.supergoodmovies.com/FilesFive/vishwaroopam-first-look-posters--cd7c83ed.jpg" width="213" /></a></div>
<br />
<br />
'அன்பே சிவம் படம் போல் கமல் நடித்து வெளிவந்த படம் அதற்கு முன்னும் பின்னும் ஏதும் இல்லை' என்று எப்படியும் விஸ்வரூபம் படத்தை பார்த்துவிட்டு வந்து த்விட்டரிலும் முகநூலிலும் பதிவிட்டுவிடவேண்டும் என்று படத்தை பார்ப்பதற்கு இரு நாட்கள் முன்பே முடிவு செய்துகொண்டேன்,.ஏறக்குறைய எல்லா திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் நாள் மூன்றாம் காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது என் முந்தைய பிறப்பின் புண்ணிய பலன்.<br />
<br />
திரையின் முன்புறத்திலிருந்து மூன்றாவது வரிசை,'எதுக்கு பிரன்ட்ல டிக்கெட் புக் செஞ்ச' என்று நண்பர்கள் கேள்வி!.ரஜினி படங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் படத்தின் துவக்கம் முதலே விசில் பறந்துகொண்டிருந்தது தியேட்டரில்(ரஜினியின் சிவாஜி படத்திற்கு படம் துவங்கும் முன் வரும் விளம்பரங்களில் இருந்தே விசிலடிக்கத் துவங்கிவிட்டனர்). நண்பர்கள் 'இப்படி விசிலடிச்சா?! டயலாக் ஒழுங்காவே கேக்க மாட்டேங்குது'.நான், 'பின்னாடி எங்கயாவது உட்கார்ந்திருந்தா இதுகூட கேட்காது'(அவசரமாக முன் வரிசையில் டிக்கெட் புக் செய்து நான் செய்த தவறை மூடிமறைத்த பெருமிதம் என்னுள்). <br />
<br />
திரைப்படம் இரண்டு பெண்மணிகளின் விவாதங்களுடன் தொடங்கியது. நியூகிலியர் ஆங்காலஜிஸ்ட் மற்றும் மிஸ்ஸஸ்.விஸ்வநாத்தாக நிரூபமா.ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தவர்கள் போலவே சுற்றித்திரியும் பெரும்பாலான விஞ்ஞானிகளைப் பார்த்துப் பழகிய எனக்கு எழுந்த முதல் கேள்வியே ஒரு விஞ்ஞானி (அதுவும் நியூகிலியர் ஆங்காலஜிஸ்ட் வேறு)இவ்வாறெல்லாம் யோசிக்க முடியுமா? என்பதுதான்.ஆண்ட்ரியா,எம்மாதிரியான தமிழை அவர் பேசுவது என்று முடிவெடுப்பதற்க்குள்ளாகவே படம் முடிந்துவிடுகிறது. <br />
<br />
ராகுல் போஸ்,விக்ஸ்-தொண்டையின் கீச் கீச் என்பது போன்ற குரலில் பேசினாலும் ,அவரே தமிழ் பேசி நடித்திருக்கிறார்,கொடூரமாகப் பார்ப்பது கத்துவது என்ற தமிழ் சினிமாவின் வில்லன்கள் சமுதாயத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு,தனக்குள் அமைதியான ஒரு கருப்பு உலகத்தை உருவாக்கிக் கொண்ட ஒரு குரூர மனிதன் போன்ற பாத்திரம்,ஆரவாரமற்ற வில்லனாக மிகக் கச்சிதம் , பாராட்டுக்கள்!. <br />
<br />
கர்னல் ஜகன்னாத்!,விஸ்வநாத்தின் மாமாவாக,சேகர் கபூர்.ஆண்ட்ரியாவைப் போல் இவரும் இக்கதைக்குத் தேவையா? தேவை இல்லையா? என யோசிக்க வைத்தாலும்,'ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துடக் கூடாதுல்ல' எனும்போது தையற்காரன் நறுக்கென்று சீறாக ஒரு துணியைத் தைப்பதற்காக வெட்டுவது போன்ற நடிப்பு.நிருபமாவை க்ளோசப் ஷாட்களில் காண்பித்த நொடிகளில் இவரை காண்பித்திருக்கலாம் .நடிப்பை இன்னும் ரசித்திருப்போம்.ஆமாம் இவருக்குத் தமிழ் பேசியது யார்?.<br />
<br />
<br />
கமல், விஸ்வநாதனாகவும்,வசீமாகவும் ,நடனத்திலும் நடிப்பிலும் நேர்த்தியோ நேர்த்தி.கமலின் படங்களுக்கே உரித்தான நாத்திகமும் சாடல்களும் கதையின் போக்கினூடே ஆங்காங்கே நகைச்சுவையும். 'உன்னைக் காணாது' பாடல்,வாலியின் ஆனந்த விகடன் பக்கங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு எழுதிவிட்டார் போல நம் கவிஞர் கமல்.விக்ரமன் படத்தில் எஸ் .ஏ.ராஜ்குமாரின் லாலாலாக்கள் போல படம் முழுக்க ஒலிக்கிறது 'யாரென்று புரிகிறதா?'பாடல்.படம் ஹாலிவுட் தரம் என்று சொல்லும் நண்பர்களுக்கு,அமெரிக்கர்கள் எவரும் ஆப்கானிஸ்தான் அவலங்களைப் படம்பிடிக்க இன்னும் முன்வரவில்லை.ஆனால் கதையின் அந்த ஒரு பகுதிக்காக மட்டுமே அவரின் ரசிகையான எனக்கு மதிப்பும் பெருமிதமும் தோன்றுகிறது . ஒசாமாவின் உயரம் முதற்கொண்டு நுணுக்கமாகப் பார்த்து தேர்வு செய்திருக்கும் கமல் மீதமுள்ள கதையை விஸ்வநாதன் என்னும் நடனக்கலைஞன் நடனத்தினூடே சம்பந்தமில்லாமல் சமைத்த சிக்கன் போல ஆக்கிவிட்டார்.அதன் விளைவு பாஷாவிற்கு பம்பாயின் மார்க் ஆண்டனி என்றால்,விஸ்வநாதன் அமெரிக்காவில் வசிப்பதால் அவருக்கு ஒசாமாதான் சரிப்படும் என்பது போல ஆக்கிவிட்டது. கமலின் ரசிகையாக விஸ்வரூபம்-2 வெளிவருவது நல்ல விஷயம் என்று எண்ணினாலும்.ஒரு சினிமா பார்வையாளராக இக்கதைக்கு இரண்டாம் பாகம் எதற்கு? என்ற கேள்வி எழுகிறது. தொடக்கத்தில் சொன்ன அன்பே சிவம் பற்றிய குறிப்பையும் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.தசாவதாரம் வரிசையில் வந்த கமலின் வாரிசு இப்படம் என்பதால். <br />
<br />
உலகில் உள்ள அனைவராலும் உயரத்தில் தூக்கிவைக்கப்பட்டு தனித்துவிடப்பட்ட ஒருவன் தன்னை அவர்களுள் ஒருவனாக நிலையின் திரியாது திணித்துக்கொள்ள முயன்று உருபெற்ற தோற்றமே இந்த விஸ்வரூபம்.இருப்பினும் கமலின் விஸ்வரூபம் இதுவல்ல. <br />
<br /></div>
Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-91349284258525009872012-06-17T12:14:00.001-07:002012-06-17T12:15:56.164-07:00இவள் இசைக் காதலி...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஜூன் 15 மலேசியா வாசுதேவன் பிறந்தநாளாம், இணையத்தில் இருப்பவர்கள் வாழ்த்துக்களை அள்ளிச் சொரிந்திராது இருந்தால் எனக்கு தெரிந்தே இருந்திருக்காது, ஆனால் அந்த காரணம் எல்லாம் எதுவும் இல்லாமல் நான் அன்று கேட்டுக்கொண்டிருந்த பாடல் 'என்றென்றும் ஆனந்தமே!!',அந்த வயலின் ,கீ, ட்ரம் பேட் என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு அழகு என்றால் , திடீரென்று சத்தமில்லாமல் வந்துவிட்டு நம்மை ஆனந்தப் படுத்திவிட்டு செல்லும் அந்த குழலோசை மற்றுமோர் அழகு.பாடல் அமைந்த ராகம் ஸரஸாங்கி.இதே ராகத்தில் அமைந்த மற்ற சில பாடல்கள் 'மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ!', 'மகராஜனோடு ராணி வந்து சேரும்!'...இந்த ஒற்றுமை எல்லாம் விடுத்து இந்த பாடல்களில் புலப்படும் மற்றுமொரு விஷயம் அந்த புல்லாங்குழல் , அணைத்து வாத்தியக் கருவிகளும் உபயோகப் படுத்தப் பட்டிருந்தாலும், குழலினை மட்டும் ஆங்காங்கே தனித்து உபயோகித்திருப்பார் இளையராஜா. இந்த பாடல் இப்படியென்றால் 'நீ பாதி நான் பாதி' பாடல், அதே குழலிசைக்காகவே பலரின் மனத்தைக் கொள்ளையடித்த பாடல் சக்கரக் கட்டி சக்கரவாகம் இந்த பாடல் ,இதே போல் அதே வரிசையில் வரும் வனிதாமனியும்,வானிலே தேநிலாவும், குழலாகப் பிறந்து தன்னை வயலினாக இசை மாற்றிக்கொள்ளும் அந்த கருவி..என் செல்ல சாருகேசிக்கும்(காதலின் தீபம் ஒன்று,மயங்கினேன் சொல்ல தயங்கினேன்,அரும்பாகி மொட்டாகி ) , காப்பிக்கும் (சங்கத்தில் பாடாத கவிதை, சின்னத் தாயவள்,கண்ணே கலைமானே..) குழலுடன் குரல் ஜாலமாய் அந்த வார்த்தைகளற்ற ஹம்மிங் பகுதிகள், இந்த ராகங்களுக்கு புல்லாங்குழல் பதிக்கப்பட்டது என்றால். அடுத்து நரம்பினால் தொடுக்கப்பட்ட ராகங்கள் என்றால் சிம்மேந்திர மத்யமமும்(தாலாட்டும் பூங்காற்று ,ஆனந்த ராகம் போன்ற பாடல்கள்),சிவரஞ்சனியும்(வா!வா!அன்பே அன்பே! ), நம்மை எப்படியெல்லாம் ஊடுருவி உருக்கிவிடலாம் என்பதற்காகவே பயன்படுத்தப் பட்டிருக்கும் வயலின் தந்திகள்..இந்த பதிவை எழுதத் தொடங்கும் முன் நான் படித்த பக்கங்கள் இதோ இந்த பதிவும் அதன் தொடர்ச்சிகளும் தான் <a href="http://bit.ly/LSIUNe" target="_blank">http://bit.ly/LSIUNe</a> ..என்னுள் எழுந்த கேள்விக்கு இங்கு பதில் அகப்படுகிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்..பதில் கிடைக்கவில்லை எனினும் எனுள் எழுந்த கேள்வியை இன்னும் கூர்மைப் படுத்திக்கொள்ள மிகவும் உதவியது.என்னுள் வருடக்கணக்கில் அலைந்துகொண்டிருக்கும் கேள்வி இது ,ஆம் மேற்சொன்ன ராகங்களில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் அனைத்து கருவிகளையும் உபயோகித்துக் கொள்கின்றன தன்னை நளினப் படுத்திக்கொள்ளவும் மெருகேற்றிக்கொள்ளவும்,சட்டென்று கேட்பவரை ஈர்த்துவிடவும் ,ஆனால் ஏதோ ஒரு இசைக்கருவி மட்டும்தான் அந்த மெட்டிற்கு, ஆயிரம் சிப்பிகள் ஆழத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்றிடம் மட்டுமே தன்னை முழுதுமாய் அளித்துவிடும் அந்த கடல் நீர்த்துளி போல் ஆகிவிடுகிறது.இது ,இன்னார்க்கு இன்னாரென்று மனிதர்களிடை ஒருவன் தேர்வு செய்வது போல் இசையிடை இன்ன ராகத்திற்கு இக்கருவி என அவன் தேர்வு செய்ததா?. ஆனால் அந்த குழல் காற்று போல், அந்த நரம்புகள் போல் என் உணர்வுகளைச் சோதித்துக் கொண்டிருப்பது, மனிதர்களாய் இருப்பினும் இருக்காது. <br />
<br />
(பி .கு),என்னடா இவள் இசையைப் பற்றி ,நாம் புரிந்துகொள்ள முடியாவண்ணம் ராகம் அது இது எனப் பிதற்றுகிறாள் என்று எண்ணுபவர்கள்,மன்னிக்கவும்.இன்று நாம் புதியதாய் ஒரு வார்த்தை கற்றோம் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.ராகம்,தாளம்,பல்லவி, பல்வலி பற்றியெல்லாம் அறியாது வெறும் இசையை மட்டுமே
முழுதும் ரசிப்பவர்களுக்கு அது என்ன என்பதைப் புரியும்படி சொல்லவேண்டுமாயின், இந்தப் பாடல்களையெல்லாம் வரிசைப் படுத்தி
உன்னிப்பாய்க் கேட்பவராயின் ஒரே மெட்டில் அமைந்த பாடல்கள் போல் தோன்றும்,அதுவே ராகம் என்பதும் :).. </div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-62692971562451953852012-04-18T12:40:00.001-07:002012-04-18T12:42:45.076-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><span style="font-size: small;">நிறமற்ற மலரிதழின் </span><br />
<span style="font-size: small;">விரல் எஞ்சும் வாசம் </span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">காற்றுடன் காதலாகி </span><br />
<span style="font-size: small;">வண்ணம் கொஞ்சும் பட்டாம்பூச்சி</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">விண்ணின்று மண் விழும் இமைநொடியில் </span><br />
<span style="font-size: small;">ஏதொருவன் ரசனையாய் நீடூறும் மழைத்துளி </span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">தந்தி ஓலிக்கும் ஒரு இசையின் </span><br />
<span style="font-size: small;">அந்தம் தோன்றும் வெறுமை </span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">இவை யாவுடன் அடக்கம், </span><br />
<span style="font-size: small;">எந்நொடியும்! </span><br />
<span style="font-size: small;">எப்படியும்!</span><br />
<span style="font-size: small;">என்றான இவ்வாழ்வு.</span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;">இப்படியாய் முடிவிலியாய், </span><br />
<span style="font-size: small;">முடிவுகளும் காரணங்கள்</span><br />
<span style="font-size: small;">அன்புடையாள் இவள், </span><br />
<span style="font-size: small;">அவனை அன்பு செய்ய. </span><br />
<span style="font-size: small;"><br />
</span><br />
<span style="font-size: small;"><br />
</span></div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-18551636169561205872012-02-27T12:59:00.003-08:002012-02-27T13:05:43.714-08:00மௌனமே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://upload.wikimedia.org/wikipedia/en/f/f3/The-Artist-poster.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://upload.wikimedia.org/wikipedia/en/f/f3/The-Artist-poster.png" width="240" /></a></div> <br />
படம் வெளிவந்த புதிதில் ஆங்காங்கே பேசப்பட,படத்தைப் பார்க்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டேன்,கருப்பு வெள்ளை என்றனர் ஆவல் மிகுந்தது.ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது, பலபேர் பேசிவிட்டனர் ஆகையால் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியதே(!).பொதுவாக ஆஸ்கார் பிடித்ததில்லை,மிகைப் படுத்தப்படும் ஆஸ்கார் திரைப்படத் துறைக்கான உயரிய விருது அல்ல என்னும் ஒரு எண்ணத்தினால்.கிடக்கட்டும்,இதோ ஆஸ்காரையும் வென்றுவிட்டது சிறந்த இயக்குனர்,படம், நடிகர் என எப்போதும் தரப்படும் விருதுகளைத் தாண்டி .சிறந்த அசல் இசை கோர்ப்புக்கான விருதையும் வாங்கியதுதான் இன்றே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்ய வைத்தது.நான் படத்தை பார்த்த சூழல் இதுவே ,மதியம் தூங்கி எழுந்த எனது மாமா பையன்,மூன்று வயது சுட்டி.நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது அறியாது என்னிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த என் பாட்டி,அத்தை,மூன்று வயது சுட்டியின் தம்பி ,என என்றும் அமைதி மிஞ்சி இருக்கும் இல்லம் இன்று கொஞ்சம் சலசலப்பாகவே இருந்தது.இந்த சலசலப்புகளுக்கிடையில் காதுகளில் செவிப்பொறிகளை அணிந்துகொண்டு படம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அவர்களது கேள்விகளுக்கும்,கோரிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் pause பொத்தான்கள் ஈடுகொடுத்தாலும் மனது ஈடுகொடுக்காமல் "ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு என்ன யாரும் தொந்தரவு செய்யாதீங்க pleeeeeeees! " என்றபடி பார்க்கத் துவங்கினேன்.என்னுடன் பேச்சு இல்லையெனினும் அவர்களிடம் ஏதோ ஒரு முனுமுனுப்பு இருந்துகொண்டுதான் இருந்தது.நான்,படத்தை மட்டும் கேட்டிருக்கும்படி உலகம் நிசப்தமானால் எப்படி இருக்கும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.படத்தின் கதைக் கருவும் அதுதான்.தனது கலை,தான் வாழ்ந்து சுவாசித்த நடிப்புக் கலை அதை கொண்டு பின்னிய சினிமாத்துறை இதில் ஏற்படும் திடீர் மாற்றங்களை அவன் எப்படிப் பார்க்கிறான் எதிர்கொள்கிறான் என்று நகர்கிறது கதை.மௌனத்திலிருந்து வேறொரு மொழிக்கு தன்னை பக்குவப் படுத்திக்கொள்ள இயலாத ஒரு கலைஞனின் துடிப்பை மௌனம்,இசை,முகபாவம் என்ற மூன்றின் உதவியோடு செதுக்கி உள்ளார் இயக்குனர்.<br />
மௌனம்!அமைதி! என்பது பலருக்கு தனிமை என்பதில் மட்டுமே அதிகம் கிடைக்கிறது.ஒரு கலைஞன் ஏன் தனிமையைத் தேடுகிறான்.மௌனத்திலும், அமைதியிலும்,தனிமையிலும் மட்டுமே ஏன் பெரும்பாலான கலைஞர்களின் படைப்பு உருபெருகிறது.விதையிலிருந்து வளர்ந்து,மலர்ந்து,கனிந்த பழம் வேறு ஒரு வளர்தலுக்கான விதியினை கொண்டிருப்பது போல திரையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்கையில் கேள்விகள் அதிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்துகொண்டு இருந்தது. நம் மனதை அசைத்துப் பார்த்துவிடும் கலையை தன்வசம் வைத்திருப்பவனிடம் வெண்மை போர்த்தப் பட்ட ஒரு மனப்போர் நிச்சயம் உண்டு.கற்களில் நடக்கவிடும்,மலர் அள்ளி வீசிவிடும்,காற்றுக்கு உருவமிட்டும்,மண் எழும் புழுதி தற்செயலாயினும் அதற்கும் உயிர் கொடுத்து உனக்கெதிராய் திருப்பிவிடும் மனப்போர்.கலைஞன்,சுயநலவாதி கூட தன் உணர்வுகளை வெளிப்படுத்தி தன் மனச் சுமையை குறைக்க, ரசிகன் என்று சக இனத்தானையே தேர்ந்தெடுத்தானே.இவ்வரி எழுதுகையில் திரைப்படத்தில் வந்த கதாநாயகன் மீது ஒரு சந்தேகக் கேள்வி எழுகிறது, அவனுக்கு ஐந்தறிவு ஜீவனான நாயும் ஒரு ரசிகன்.அந்த கதாநாயகன் எத்தகையான கலைஞன்?. அவன் மௌனத்தில் நடிப்பை உணர்ந்த அக்காலத்து உயிர்களின் ரசிப்புத் தன்மை.ஆனால் மெய் யாதெனின் ஒரு ரசிகனின் மனப்பாங்கிற்கு ஏற்ப காலம் காலமாக தன் உண்மைத்துவத்தை அழித்துக்கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது கலை,சிறந்த உதாரணம்: நான் இப்போது எழுதி, பழகி,பேசி ரசிக்கும் தமிழ் என் முப்பாட்டனுக்கு முன் பிறந்த தமிழல்ல.இவற்றிடையில் இக்காலத்து ஜீவனாகிய நான் எவ்வகையில் என்னை ரசிகை என்று சொல்லிக்கொள்ளலாம்.அண்டை வீட்டுக்காரனின் ரசிகத்தனம் அடுத்தவீட்டு சண்டையின் ஒலி-ஒளியை ரசிப்பதோடு குன்றிவிட்டதை அளவீடாகக் கொண்டா?!.வீட்டிலிருப்போரின் ரசிகமணி புகழாரங்கள் கொண்டா?!.உணர்ச்சிகள் பொங்க புன்னகை,கண்ணீர்,ஆனந்தம்,ஆத்திரம் என எழும் நவரசங்களை அளவாகக் கொண்டா?!.யான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்தில் சிறிதில் ஒரு பங்கேனும் பெறவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்பொழுது எழுவதாலா?!.எனுள் இருப்பது ரசிகையில்லை,இருப்பதாகத் தோன்றின்?!என்றோ ஒருவர் செய்து சென்ற மாற்றங்களுக்கு தானறியாமல் அடிமைப்பட்ட ஒரு நிழல் அவள்.ஆதி கலை ஒன்று வேண்டும் எனுள் ரசிகையினை உணர என்றேன்.தேடல்கள் கண்டது மௌனம் ஒன்றையே.மௌனத்தை உணர ஏதொன்றும் தேவையில்லை அம்மௌனம் தவிர.இருப்பினும் அதன் அமைதிக்கு உருவம் தேடுகிறது மனம். <br />
</div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-33969698826920740692012-02-01T09:28:00.000-08:002012-02-01T09:31:29.440-08:00கண்டேன் கண்டேன்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">நீண்ட நெடுஞ்சாலை இல்லை, <br />
பூத்திருக்கும் கிளைகள் இல்லை, <br />
செவியனைக்கும் அமைதி இல்லை, <br />
கண்டதெல்லாம் <br />
பல உருவம், <br />
பல நிறங்கள், <br />
இரயிலடியின் சலசலப்பு ,<br />
இருப்பினும் அதில் கண்டேன் <br />
<div style="text-align: left;">நிறமொத்த கரம் இரண்டில்,<br />
பிணைவு மொழியை. </div>அவன் நோக்கி அவள் நிமிர்ந்தும், <br />
அவள் பார்த்து அவன் சாய்ந்தும், <br />
புன்னகை மட்டும் முகம் பூக்க, <br />
பேசின யாவும் கரங்கள் மட்டுமே. <br />
இல்பொருளாய் அங்கு கண்டேன், <br />
நெடுஞ்சாலையும், <br />
பூமரமும், <br />
கரங்கள் நமதும், <br />
காதல் அதிலும். </div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-76876180741517051352012-01-28T05:30:00.000-08:002012-01-28T05:30:33.738-08:00முற்றில் பாதை..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><div style="text-align: left;"><div style="text-align: left;">முற்றற்று இருக்கலாம், </div>தொடுதல் தீண்டலன்றி,<br />
கதை பிறக்கும் கணங்கள்.<br />
விழிமை மலர,<br />
செவிமடுத்த சேதிகள்.<br />
<br />
பேச்சற்ற பொழுதில்,<br />
பாடலாய்,<br />
உரை நிகழ்வாய்,<br />
தமிழ் வரியாய்,<br />
நீளம் கொள்ளும் <br />
நம்மிடை இழைகள்.<br />
<br />
முற்றற்று இருக்கலாம், <br />
அப்புறம் என்று சொல்லி,<br />
அக்கம்பக்கம் பார்க்கையில்,<br />
நமக்காய் கிடைத்துவிடும்<br />
பேசுபொருள்.<br />
<br />
முற்றற்று இருக்கலாம், <br />
வயலின் தந்திகளை,<br />
இசைக்காய் கரம் இசைத்திருக்க,<br />
இதழோரம் மென்னகைத்து,<br />
காதலின் மேல் எழும் காதல்.<br />
<br />
முற்றற்று இருக்கலாம்,<br />
நீயும் நானும், <br />
நமது என்றான எதுவும்.<br />
<br />
</div></div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-45809202293160790292012-01-18T11:49:00.000-08:002012-01-18T11:52:59.059-08:00காத்தோட தூத்தலப் போல..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"> உலக அளவில் கொலவெறியை வெறியோடு ரசித்துக்கொண்டிருப்பவர்களிடையே ,அதே உலகில் அதே வெறி கருவான நாட்டில் உள்ள அதே ஊரில் அக்கொலையை வெவ்வேறு கொலைகளத்தில் வெவ்வேறு ஆயுதங்களுடன் நிகழ்த்தியவர்களிடையே அமைதி தேடி அமர்ந்தபோது இந்த இரு பாடல்களும் கிடைத்தன.அவ்வாறு கேட்டுக்கொண்டிருந்த ஒரு விடுமுறை நாள் மதியத்தில் அருகில் வந்து அமர்ந்தான் என் குட்டித் தம்பி.எப்போதும் அவனைத் தூங்க வைப்பதற்காக அவனுக்குப் பிடித்த பாடல்வரிகளை முனுமுனுப்பது வழக்கம்.இல்லையெனில், ஐபாடின் செவிப்பொறிகளை நான் ஒன்றும் அவன் ஒன்றுமாக காதினில் அணிந்துகொண்டு உறங்குவதும் உண்டு.அன்று மதியம் நான் கேட்டுக்கொண்டிருக்க எதேச்சையாக அவனாகவே காதினில் ஒரு பக்கத்துச் செவிப்பொறியை எடுத்து அணிந்துகொண்டு கேட்கத்துவங்கினான்.அன்றிலிருந்து இரவு நேரங்களில் பெரும்பாலும் இவ்விருபாடல்கள்தான் அவனுக்கு "ஆரிராரோ!".நான் இங்கு ஒரு பக்கம் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்க பின்னிரவு வாக்கில் அவன் பக்கம் நோக்கினால் அந்த பிஞ்சுக் கரத்தில் இந்த ஐபாடினை கரத்தில் அடக்கமாய் வைத்தபடி உறங்கிவிட்டிருப்பான்.கேட்டபொழுதுகளில் அவனுக்கு ஒரு சில வரிகள் கற்றுத்தர அழகாய் பாடவும் முயற்சிக்கிறான் மழலைத்தமிழில்.அந்த மழலையின் தமிழ் கூட காற்றோடு</div><div style="text-align: justify;">தூறலைப் போலத்தான் இருக்கின்றது பாடிக் கேட்கும் ஒவ்வொரு முறையும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் குளுமை,காற்றாலா? நீர்த்தூறலினாலா?! என்பது போல. அழகு,மழலையாலா?! அல்லது அந்த பாடல்களினாலா?! எனப்புரியாமல்.</div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;"> <object height="81" width="100%"> <param name="movie" value="https://player.soundcloud.com/player.swf?url=http%3A%2F%2Fapi.soundcloud.com%2Ftracks%2F33797399"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed allowscriptaccess="always" height="81" src="https://player.soundcloud.com/player.swf?url=http%3A%2F%2Fapi.soundcloud.com%2Ftracks%2F33797399" type="application/x-shockwave-flash" width="100%"></embed> </object> <a href="http://soundcloud.com/music-and-beyond/shaams-version">Shaam's Version</a> by <a href="http://soundcloud.com/music-and-beyond">Music and Beyond</a> </div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-24644975433135909672011-12-13T10:45:00.000-08:002011-12-14T06:30:27.385-08:00கற்றதனாலாய...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> சிறுபிள்ளைக் காலங்களில் நான் படித்த பள்ளியில் ஒரு செயல் நடைமுறையில் இருந்தது.தினமும் பள்ளியின் இறைவணக்கக் கூட்டத்தில்,இடையே ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் எவரேனும் ஒருவர் வந்து ஒரு திருக்குறளையும் அதற்கான பொருள் விளக்கத்தையும்,உடன் ஒரு பொது அறிவுத் துணுக்கையும் அங்கு கூடியிருக்கும் சக மாணவர்களிடையே பகிர்ந்துவிட்டுச் செல்லவேண்டும்.தன் முறை வரும்போது பலர் வேண்டுமென்றே நழுவி எங்கேனும் சென்றுவிடுவர்.அத்தகைய சமயங்களில் அன்று வானொலியில் கேட்ட செய்திகளை வைத்ததும் நினைவில் இருக்கும் ஏதேனும் ஒரு குறளைக் கூறியும் ஒப்பேற்றிவிடுவதுண்டு.அதனாலேயே வேறு பள்ளி மாறும் வரை G.Aishwarya என்ற பெயர் GK Aishwarya என்று அழைக்கப்பட்டதுண்டு(இதில் கொடுமை இந்த கோவிந்தராஜனும் & குடும்பத்தாரும்,அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவ்வாறு விளித்ததுதான்).இவையெல்லாம் நிகழ்ந்து பலபல வருடங்கள் கடந்தாயிற்று.<br />
<br />
அப்போது என் செயல் எனக்கு நல்லதுதான் செய்தோம் என்ற எண்ணத்தை அளித்தாலும்.அதை இப்போது யோசித்தால் அது எனது சுயநலத்தை மட்டுமே வெளிப்படுத்தியதோ?,என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒருவேளை நான் முன்சென்றிராது,வேறு ஒருவருக்கு நான் அறிந்துகொண்டவற்றை கற்பித்துவிட்டு முன் அனுப்பியிருந்தால் இத்தகைய உணர்வு இப்போது எழும்பி இருக்காதோ?!.கற்க எவரேனும் முன்வந்திருபபரா?!.நான் எவ்வாறு அதைக் கற்றேன் எப்படி?எவ்வாறு? என்ற கேள்வி என்னுள் எழுந்ததாலா?.நம்மில் எத்தனை பேருக்கு அகரத்தின் ஆதி பற்றி தெரியும்?.எத்தனை பேரில் எப்படி? எவ்வாறு? ஏன் ? என்ற கேள்வி எழுந்திருக்கும்,அது இசையாயினும் சரி ,இலக்கியமாயினும் சரி.அண்மையில் நட்பு ஒன்றிடம் புத்தகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நட்பின் பதில் இதுவாக இருந்தது,"புத்தகம் எல்லாம் நமக்குப் புரியற மாதிரி எழுதணும்,பலது நமக்குப் புரியறது இல்ல அதனால அவ்வளவா படிக்கறது இல்ல".ஆனால் புத்தகங்களைப் புரிந்துகொள்ள ஆர்வத்துடன் எத்தனை பேர் எத்தனித்து இருக்கிறோம் என்பது ஐயமே!.பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் தம்பி குனிந்தபடி ஒரு வரியை புத்தகத்தைப் பார்த்து படித்துவிட்டு,நிமிர்ந்து சுவற்றை நோக்கியபடி அதனை பத்து முறை மனனம் செய்கிறான் .அவனைப் பொறுத்தவரை கற்றல் என்பது அவனோடு நின்றுவிட்ட ஒன்று,தான் மட்டும் புரிந்துகொண்டால் போதும் என.பாட்டி மார்கழி மாதமானால் தொலைக்காட்சி முன் அமர்ந்து அதில் ஒளிபரப்பப்படும் "பிபரே ராமரஸங்களை" தலையை அசைத்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் ,பொருள் எதுவும் புரிந்திராது.பின்பு அந்த தலையாட்டல்கள் எதற்கு?, "ராமர்" என்ற பெயர் கொடுக்கும் ஒரு உருவற்ற பிடிப்பினாலா?,மெச்சிமைத்தனத்தாலா? அல்லது அச்சத்தாலா?.அதே பொருள் பற்றி தன்னிடம் வேறு எவரும் கேள்வி எழுப்பிவிடமாட்டார் என்ற அவநம்பிக்கை.<br />
தவறு எவரின்பால்? கற்பவர்,கற்றல் என்பதன் பொருள் சரியாக உணராததாலா?!, கற்பிப்பவர் கற்பித்தலின் பொருள் உணராததாலா?!..திருக்குறளை பிறமொழியாளர்கள் உணரவேண்டும் என அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சிலர்.பிறமொழிக் களஞ்சியங்களை நம் மக்கள் புரிந்துகொள்ள ஏன் வழிவகை செய்வதில்லை?!."ஸ்வாகதம் கிருஷ்ணா!",என்றதும் "அருமையாப் பாடியிருக்காங்கய்யா!" என்னும் சிலர் "அலைபாயுதே கண்ணா!" என்பதைத்தான் மனதாரத் தாமும் பாடுகின்றனர்.<br />
மூன்றாம் வகுப்பில்தான் முதன்முதலில் ஹிந்தி கற்பதற்காக சிறப்பு வகுப்பு சென்றது.அப்போது தூர்தர்ஷனில் "மிளே சுர் மேரா துமாரா!" அடிக்கடி ஒளிப்பரப்பபடும் ஒன்று.ஹிந்தி கற்ற ஒரு ஆர்வக் கோளாறில் அப்பாடல் வரியை தமிழில் மொழிப்பெயர்க்க எத்தனித்ததுண்டு(ஒரே பொருள் கொண்ட வரியையே பல மொழியில் பாடி இருப்பர் என்று அப்போது எனக்குத் தெரியாது).இசைக்காதலை அழகாய்த் தாய் மொழியில் வெளிப்படுத்திய வரிகள் அவை.உணர்ச்சி மிக்க வரிகள் பொதிந்த ஒரு கதை,எங்கோ அப்பட்டமாய் ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.தன் உள்ளார்ந்த உணர்வுகளையே மிகையாய் வெளிப்படுத்தும் அவ்வரிகள் சுயநலங்கள் என்றே தோன்றும், அத்தகைய எழுத்துக்கள் படிப்பவரை ஈர்த்து அவர் மனம் சிந்திக்க வைத்து ,ரசிக்க வைத்தாலும். கற்பவர் கற்பிப்பவர் என்று இரு நிலையைப் பார்த்தால், "மகாகணபதிம்!" மேல்தட்டின் அடையாளம் போலவும் ,எட்டுக் கட்டையில் எங்கோ கேட்கும் "கணபதியே வருவாய்" மார்கழி மாதத்துப் பொங்கல் சேர்க்கை போலும் ஆகிவிட்டது.இத்தகைய நிலையில் இவர்களுக்கு ஏன் "why this kolaveri"-யும் "evandi unna peththaan"-னும் பிடித்திருக்கிறது என்று கேட்பவர்களிடம், "நீ எத்தனை முறை உமது "வைஷ்ணவ ஜனதோ"-க்களை இவர்கள் புரிந்துகொள்ளுமாறு உரைத்திருக்கிறாய்?",என்று கேட்கத் தோன்றுவதை தடுக்க இயலவில்லை(இரண்டுமே இதை தட்டச்சிக்கொண்டிருப்பவர்க்கு பிடிக்கவில்லை என்பது அவரது தனிப்பட்ட விருப்பெனினும்!).இந்த கற்றல் என்பது இயற்கை,இசை, இலக்கியம் எனத்தொடங்கி ஆழ்கடலின் அடிவாரம் போல் ,புதிரான வாழ்க்கையில் பாய்ந்து நிற்கிறது.<br />
கடல்!,கடலின் ஆழம்தான் எவ்வளவு அத்தனையிலும் இருப்பது உயிர்கள் மட்டுமா?!,எழுப்பப்படாது நம்மில் பொதிந்திருக்கும் கேள்விகள் பலவற்றிற்கான விடைகளும் கூட. கேட்டுவிடுவோமே கேள்விகளை கடற்பக்கம் திருப்பப்பட்ட சுனாமிகள் என.மனிதனோடு அவன் மனமும் பிழைத்திருக்கும் இக்கரையில்..</div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-47295162981883074202011-12-10T21:58:00.000-08:002011-12-10T21:58:49.133-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="font-family: arial;">கதர் கச்சம் அணிந்ததனால் </span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;">காந்தி மகான் என்று ஆகிவிட்டான்,</span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;">மனிதப் பித்தம் தெளிந்தவன் நீ </span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;">பித்தென்று தூற்றப்பட்டாய்!..</span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;"><br />
மகான் வழி சென்றார், </span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;">மக்கள் அடிமைதான் இன்றும்,</span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;">கவி நீ மட்டும் சுதந்திரம் எய்த!..</span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;"> </span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;">மனம் கற்றது உன் தமிழை, </span><br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;">அது </span><span class="Apple-style-span" style="font-family: arial;">ஒவ்வாது </span><span class="Apple-style-span" style="font-family: arial;"> இவ்வுலகை, </span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;">அது </span><span class="Apple-style-span" style="font-family: arial;">ஒவ்வாது </span><span class="Apple-style-span" style="font-family: arial;">அம்மகானை.. </span><br />
<br style="font-family: arial; text-align: -webkit-auto;" /><span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto;"> </span><br />
<div style="text-align: -webkit-auto;"><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: x-small;"><br />
</span></div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-12102349391998060892011-09-24T23:11:00.000-07:002011-09-24T23:11:41.237-07:00சுஜாதாவும்..! சுஜாதாவும்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;"><br />
அர்த்தங்களைத் தேடித் துவங்கும் வாரநாட்கள் வார இறுதியில் அந்த அர்த்தங்களாகவே மாறிவிடும்.அட! வாழ்வு என்பது இவ்வளவுதானா?!,என்று உறங்குவதற்குக் கண்களை மூடும் சமயம் தோன்றும் ஞாயிறு இரவுகள்,திங்கள் அன்று அடுத்த பிரம்மாண்டத்தை நோக்கிக் கண்களைத் திறக்கும்வரை.இந்தவாரம் கூட அப்படித்தான் துவங்கியது தோழி ஒருத்தியின் குறுஞ்செய்தியுடன். "And thr starts another week :(" என்று. அதற்கு "and thr awaits one happy end too,Lolita morning :),Adventurous n pleasant day(s) ahead " என்று பதில் அளித்துவிட்டு காலையைத் துவக்கினேன்.சொன்னதுபோல்தான் இருக்கவும் செய்தது வார இறுதி. சத்யமில் "எங்கேயும் எப்போதும்"-மா அல்லது நந்தம்பாக்கத்தில் தோழி ஒருத்தியுடன் சூப்பர் சிங்கரா என்ற இரு தேர்வுரிமையில், நான் கண்டிப்பாக அப்படத்தை ரசிப்பேன் என்று என் மாமா </span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">சொல்லி,முன்னமே டிக்கெட் புக் செய்திருந்த </span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">காரணத்தால் </span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">முதலாவதைத் தேர்வு செய்தேன்.பயிற்சி காலங்களில் விடுப்பு தர இயலாது என்ற மேனேஜரிடம் "சார்!படம் பார்க்கச் செல்ல அனுமதி வேண்டும்",என்று நேரடியாகக் கேட்டதும் முதலில் முறைத்தாலும் பின் சிரித்துவிட்டு அனுமதி தந்தார்.ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தை விட்டுத் துவங்கியது வெள்ளிக் கிழமை வார இறுதி.</span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> "எங்கேயும் எப்போதும்"- இசை இன்னோரு முறைக் கேட்டால் பிடித்துவிடும் என நினைக்கிறேன்.மற்றபடி வாழ்வின் யதார்த்த நிகழ்வுகளை யதார்த்தமான பாத்திரங்களின் யதார்த்தமான நடிப்புகளோடு நகர்த்திச் சென்றுள்ளார்.fox-உம் ஏ.ஆர் முருகதாசும் சேர்ந்து தயாரிக்கும் அளவிற்கு படத்தில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்போடு சென்றேன்.ஆனால் படம் துவங்கிய நொடிமுதல் அந்த இருவருமே நினைவில் வரவில்லை.பார்த்து வெளியேவருகையில் ஒரு திருப்தி மட்டும்.நடுநிசி நாய்கள் படத்தை GVM இறுதியில் ஒரு டாகுமெண்டரி கதையாக மாற்றியது போல் சரவணன் தவறு செய்யாது அழகாக காட்சிக்குக் காட்சி நகர்த்திச் சென்றுவிட்டார்.அஞ்சலி தன் காதலை வெளிப்படுத்திய விதம் கண்டு.கல்லூரிக்கு சான்றிதழ்கள் வாங்கச் செல்லுகையில் பேருந்தில் அருகில் அமர்ந்திருந்தவர் ரத்ததான அட்டை ,கண்தான அட்டை தன் கையில் வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக அவரைக் கேள்வி கேட்டு துளைத்ததுதான் நினைவில் வந்தது.பாவம் அம்மனிதர்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> படம் முடித்து வீடு திரும்ப,பூஜா தொலைக்காட்சியில் "அன்பே இது நிஜம்தானா?!" என்று பாடத் தொடங்கி இருந்தார்",பலருக்குப் பிடித்த பாடல் எனினும், பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தை கவரும் அளவிலான பாடல் அது இல்லை."நல்ல பாட்டுதான்.ஆனா லார்ஜர் மாஸ்-க்கு இது ஒத்துவராதே மாமி இவோ ஏன் இந்த </span></span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;"> பாட்ட </span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">எடுத்துருக்கா?!",என வீட்டு வாசலில் இருந்து சொல்லிக்கொண்டே வந்தேன். "தெரில!முதல் ரௌன்ட்ல நல்ல பாட்டு,மன்னவன் வந்தானடி! பாடினா" என்று பதில் அளித்தார் அவர்.அந்த பதிலை முதலில் என்னால் நம்ப முடியவில்லை, காரணம். நான் வியாழன் அன்றே அலுவலக நண்பர்களிடம் "பூஜா மன்னவன் வந்தானடி பாட சான்சஸ் நிறையா இருக்கு" ,என்று கூறிக் கொண்டிருந்தேன்.ஏனெனில் சென்ற முறை அல்காவின் "சிங்கார வேலனே" ,மக்களைப் பெரிதளவில் சென்றடைந்தது.அதற்கு நிகராகத் தரவேண்டும் என்றால் அது போன்ற பாடலைத் தான் பூஜா பாடுவார் என்ற எண்ணம்."மறைந்திருந்து பார்க்கும்",பாடலை அவர் முதலிலேயே பாடிவிட்டதால் இப்பாடலைப் பாடுவார் என்று ஊகித்தேன்.மேலும்,"மயக்கம் என்ன?" படப் பாடல் கேட்டு பிடிக்காவிடினும் அதனை </span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">முணுமுணுத்துக் </span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">கொண்டிருந்தேன் அதிலிருந்து மீள்வதற்காக , ஐபாடில் "மயக்கம் என்ன?! இந்த மௌனம் என்ன?!" பாடலை கேட்டுவிட்டு அதற்கு முன்பிருந்த "மன்னவன் வந்தானடி!" பாடலை வியாழன் மதியம் யதேச்சையாய் கேட்கத்துவங்க,"கண்டிப்பாய் இதைத் தான் பாடுவார் பூஜா!".என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துவிட்டது.கௌஷிக்கும் இல்லை ஸ்ரீநிவாசும் இல்லை,சத்யாவையும் சந்தோஷையும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று தெரியும்,சாய் பாடுவது பிடித்தாலும் அவரைப் பிடிக்கவில்லை.ஆனால் கண்டிப்பாக பூஜா அல்லது சாய்தான் தேர்வு செய்யப் படுவார்கள் என்று இருவேறு காரணங்களுக்காக தோழியிடம் கூறி இருந்தேன்.</span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">கௌஷிக்</span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">கை</span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;"> </span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">விடுத்து சாய்-யை வைல்ட் கார்ட் ரௌன்டில் தேர்வு செய்தபோதே அதை முடிவும் செய்துவிட்டேன்</span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">.விஜய் டிவி வரவர, தன் முந்தைய படங்களில் நடித்தவர்களைத் தன் அடுத்த படத்தில் ஆங்காங்கே சிறுசிறு பாத்திரத்தில் நடிக்கவைக்கும் வெங்கட்பிரபு போல் ஆகிவிட்டது.கௌஷிக்கை அக்கூட்டத்தில் ஒருவராகப் பார்த்ததும் மனசு ஆறவில்லை சார்!.</span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">பாடல்களைப் பாடுபவர்களுக்கும் நிகழ்ச்சியாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் முதலில் இந்த trademark பாடல்களைவிட்டு வெளியே வாருங்கள்.இந்த ஸஸ ரிரி உடைய பாடல்கள் எல்லாம் அரைகுறை இசைஞானம் உள்ள பாமரத்தால் மட்டுமே ரசிக்க முடியும். </span></span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">பாமரர்களில் </span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">பலர்,பாடல்கள் பிரபலம் என்ற ஒரே காரணத்திற்காகவே அதற்குக் கைகளால் அபிநயம் பிடித்துவிட்டு நகர்ந்துவிடுகின்றனர்.</span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> சனிக்கிழமையும் அலுவலகம் உண்டு ஆனால் பணி மட்டும் வேறு.பணி என்று சொல்லுவதை விட,விலைமதிப்பற்ற தருணம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். சென்னை வரும் நாட்களில் முன்பெல்லாம் நேரம் கிடைக்கையில் அன்னை இல்லம் செல்வதுண்டு.இப்போதுள்ள அலுவலகத்தில் சனிக்கிழமைகளில் அன்னை இல்லம் அல்லது வரதப்பர் சிறுவர்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் அவர்களாகவே எங்களை அனுப்பி வைக்கிறார்கள்.கேட்கவா வேண்டும்?!.வார இறுதியிலோ அல்லது வார நாட்களிலோ கூட அங்கு சென்றுவிடுவது உண்டு.இந்த வாரம் வரதப்பரில்,வெளி உலகம் ஆச்சரியப் படும் அளவிற்கு திறன் உள்ள பிள்ளைகள் அனைவரும்.இந்த வாரம் சந்தித்தது இரண்டு சுஜாதாவையும்,ஒரு ஜோதிகாவையும்,ஒரு ஈஸ்வரனையும்.அப்பிள்ளைகளின் பெயர்கள்.முதலில் பெயர் கேட்கையில்,"அவ பேர் ஜோதிகா கா,அவன் பேர் ஈஸ்வரன் கா,எங்க பேறு சுஜாதா கா",பேருக்கு ஏத்தமாதிரியே "அளகு" பண்ணிட்டே இருக்கும் கா அது" என்றால் ஒரு சுஜாதா.ஈஸ்வரன் தன் பெயருக்கு ஏற்றார் போல் நடனம். ஆடிக்கொண்டே இருந்தான்,"புலி உறுமுது புலி உறுமுது" என்று.மற்றவர்களைத் தவிர்த்து அவன் மட்டும் கடந்த இரு வாரங்களாகப் பழக்கம். </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"><br />
நான்: daaaai! வேற ஸ்டெப் மாத்தி ஆடுடா. </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">ஈஸ்வரன்: akkaa!நீங்க அதுகூட ஆட மாட்டிங்க போங்க.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">நான்: daaaai!அதெல்லாம் இல்ல கத்துகிட்டேண்டா சின்னவயசுல,ஒரு நாள் என் பக்கத்துல ஆடிட்டு இருந்த பொண்ண என் கூட compare பண்ணி மிஸ் திட்டினாங்களா அது பிடிக்கல.நின்னுட்டேன்.அதுக்கு அப்புறம் ஆடறதும் இல்ல.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">(அதற்குள் வேறு ஒரு பெண்,அக்கா எனக்கு இங்க வெச்ச பேறு சுப்பலக்ஷ்மி ஆனா பாதர் வெச்ச பேருதான் சுஜாதா என்றாள் )</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">நான்:அப்படியா! எனக்கு சுஜாதா பேறு எவ்ளோ! எவ்ளோ! பிடிக்கும் தெரியுமா?!எனக்கு தெரிஞ்ச சுஜாதானு ஒருத்தர் நல்லா நல்லா எழுதுவாரு! இன்னொருத்தவங்க நல்லா நல்லா பாடுவாங்க! எனக்கு அவங்கள அவ்ளோ அவ்ளோ பிடிக்கும். </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> (இரண்டு சுஜாதாவும் கண்கள் விரிய )</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">சுஜாதா1:அக்கா அக்கா அந்த ரெண்டு பேரையும் கூட்டிடுவாங்ககா என </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">நான்:</span></span>அச்சோடா!ரெண்டு பேருமே முடியாதேடாமா!? :O<br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">சுஜாதா2: ஏன்கா?!</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">நான்:அவரு வானத்துக்கு டாடா பை பை போயிருக்காரே.</span></span>இன்னொருத்தவங்க,அவங்கள எனக்குத் தெரியும் ஆனா என்ன அவங்களுக்குத் தெரியாதே <br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">சுஜாதா1:அப்ப அவங்க போட்டோவாவது எடுத்துட்டுவாங்கக்கா.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">சுஜாதா2:அப்ப நானும் அவரமாதிரி நல்ல எழுதுவேனா அக்கா </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">நான்: ஹ்ம்ம் எடுத்துட்டுவரேன்,.ஏன்!?அவரவிடவே நல்லா எழுதப் போற பாரேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">ஜோதிகா:அக்கா அடுத்தவாட்டி வரப்போ எனக்கு இன்னிக்கு போட்ட மாதிரியே hairstyle போட்டுவிடுங்கக்கா.அப்டியே ஒரு பட்டாம்பூச்சி கிளிப்பு வாங்கிட்டுவாங்கக்கா. </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">நான்:ஹ்ம்ம்! சரி,ஜோ குட்டிக்கு ஒரு கிளிப் பார்சல்.சரி இன்னிக்கு என்ன படிக்கலாம்?!வெளையாட்டுக் கணக்குப் போடலாமா என்று மரத்தடிக்கு அழைத்துச் சென்றுவிட்டேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">ஐந்து மணிக்கு வீட்டிற்குப் பயணம். வீட்டில் இருப்பவர்கள் ஷாப்பிங்கிற்குத் தயாராகிக் கொண்டிருக்க அப்படியே கிளம்பியாயிற்று.சுஜாதாக்களுக்கு சிறுவர்கள் புத்தகமும்.ஜோதிகாவிற்கு க்ளிப்பும் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">வாரத் தொடக்கத்தில் அனுப்பிய குறுஞ்செய்தி முதலில் சரியாக சென்று சேராததால் ட்ராப்டில் சேமிக்கப்பட்டு, இன்னும் இருக்கிறது. </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> </span></span><br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> </span></span><br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: arial;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"> </span></span></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-34827674555427401172011-08-28T03:19:00.000-07:002011-08-28T03:19:05.740-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">பெட்டிகளில் குச்சி தட்டி,<br />
கைச் சில்லரைகள் மெட்டு கட்ட,<br />
தன் பசி மறக்கப் பாடும் குருடனுக்கு,<br />
நம் பதில்...<br />
மௌனங்களும்,<br />
நிராகரிப்பும்,<br />
செவிப்பொறியில் அலை வீசும்,<br />
பொருள் புரியா பாடல் ஒன்றும். <br />
</div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-62999671521995620602011-08-11T21:58:00.000-07:002011-08-11T21:58:29.477-07:00கொஞ்சம் மழை நேரம்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"> இந்த மழைக்குத்தான் ஏன் இந்த அவசரமோ?! பொறுமையா பெய்யவேண்டியதுதானே.மொத்தமா கொட்டித்தீர்த்துட வேண்டியது.அப்புறம் மொத்தமா காணாம போயிடவேண்டியது.மாலினியின் புலம்பல் இது.வீட்டின் முற்றத்து கட்டையில் அமர்ந்தபடி.இடப்பக்கம் உள்ள அறையில் ரிக்கார்ட் பிளேட் பாடிக்கொண்டிருந்தது.அந்த பிளேட்டில் இருந்த கீறல்களுக்கு அது புலம்பிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மழையின் சலசலப்புகளுக்கு இடையே அது பாடலாகவே கேட்டது.அதை இயக்கிக் கொண்டிருந்த ப்ளேயர் மாலினியின் மாமனார் நாக்பூர் சென்றபோது வாங்கியது.முப்பது வருடங்களுக்குப் பின் அவர் அடிக்கடி உபயோகித்தப் பொருள்களில் அவரது ஊன்றுகோலுடன் இதுவும் ஒன்று.அவரது இறுதிக்காலங்களில் அவரது தோழமை கூட.அவரது இறப்பில் சவஊர்தியுடன் ஊன்றுகோலைக் கட்டியவர்கள் விண்ணுலகில் டெக்னாலஜிக்கு மதிப்பில்லாததால் அப்பொட்டியை அவர் உபயோகித்த அறையிலேயே விட்டுவிட்டனர்.மாலினியின் கணவன் பத்ரி தன் அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம் அந்த ப்ளேயரைத் தடவிப் பார்த்துக் கொள்வான்.பத்ரியுடன் திருமணமாகி இருபது வருடங்கள் அவ்வீட்டில் இருந்திருப்பினும் மாலினிக்கு தன் மாமனாரிடம் அந்த தந்தைக்கு நிகர் என்ற உணர்வு ஏனோ தோன்றியது இல்லை.அதனால் மற்றவர்கள் போல் அவள் கொடுமைக்காரி என்றில்லை,பேசுவாள்,மரியாதை தருவாள் கேட்ட உதவிகளைப் புரிவாள் ஆனால் அவளைப் பொறுத்தவரை அவர் பத்ரியின் அப்பா,தன் மாமனார்...மாமனார் மட்டுமே.தந்தைக்கு நிகர் இல்லை.ஆனால் நீண்ட நாள் கண்முன்னே ஒருவர் இருந்து திடீரெனக் காணாமற் போனால் ஏற்படும் பதற்றம் கலந்த தவிப்பு அவளுள்ளும் இருந்தது.ஆனால் அதையும் சிறிது நாளைக்கு பிறகு வந்த ஒரிஸ்ஸா புயல் பலி எண்ணிக்கை,தன் பெண்ணை வெளியூர்க் கல்லூரியில் சேர்க்கும் பொறுப்பு,ஜப்பான் சுனாமியெல்லாம் மறக்கச் செய்துவிட்டது.</div><div style="text-align: left;"> இன்று அந்த ப்ளேயரை ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பது பத்ரிதான்,அவரது ஊன்றுகோல் நாட்களில் வாங்கிய ப்ளேட் அது.எம்.எஸ்.வி-யின் இசையில் பழைய பாடல் ஒன்று "வான் நிலா,நிலா அல்ல!".ப்ளேட்டை எடுக்கும்போது அதில் உள்ள பாடல் பற்றிய விவரங்களைப் பார்ப்பதோடு சரி,ஒவ்வொரு பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அவன் தந்தை நினைவே வந்துவிடும்.அந்த ஊன்றுகோல் வளைவின் மேல் அவர் பாடலுக்கு ஏற்றாற்ப்போல் தன் ஆள்காட்டி விரல் கொண்டு தட்டுவது.அவன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் அவர் அமர்ந்தபடி தலையை மெதுவாகப் பாடலுக்கு ஏற்றவாறு அசைப்பது,அனைத்தும் அவன் கண்மூடி அமர்ந்திருக்கும் அந்த விழித்திரை நிழலில்.இந்த நினைவுகள்தான் எத்தனை வலியது,எத்தனை வேகமாகப் பயனிப்பது.அப்படியே அவனது நினைவுகள் தன் தந்தையிலிருந்து ,திருமணம் முடிந்து மாலினியுடன் தான் சென்ற முதல் பயனத்திற்குப் பறந்தது.இதே பாடலைத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என அதனை முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.காலப்போக்கில் அவளது முனுமுனுப்புகள் குறைந்து புலம்பல்களே அதிகரித்ததாக அவனுக்குத் தோன்றியது.அவளுக்குத் தான் பாடியது நினைவில் உண்டா என்று தெரியவில்லை.ஆனால் இவனின் பசுமரத்தாணி நினைவுகளில் அதுவும் ஒன்று.எவ்வளவு அழகானது நினைவுகள்.இந்த நினைவுகள் என்பது எதற்காக?,தேவையா?தேவையற்றதா? எனத் தெரியாமல் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் நினைவுகள்.நாம் ஏன் கடந்த காலத்தை தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் போல அவ்வப்பொழுது உயிர்க்கச் செய்து அதனுள் அதிலேயே அதனை கரையச் செய்துகொண்டிருக்கிறோம்.ஒருவகையில் இதுவும் இயற்கை மீதான மற்றொரு சுயநலம்தானோ?.சிரித்துக்கொண்டான் தன்னுள். </div><div style="text-align: left;"> இன்னும் மழை விட்டபாடில்லை.தன் வளர்ச்சிக்காக மழை நீரில் உழைத்துக்கொண்டிருக்கும் அந்த முற்றத்துக் கட்டையோரச் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.திருமணத்திற்கு முன்பு அவளது அதன் மீதான பார்வையே வேறு.அதைப் போன்ற செடிகளின் மேல் மழைத்துளி இருப்பது வெறும் அழகு என்ற அளவில் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.இப்போது அந்த பார்வை பரிணாம வளர்ச்சி அடைந்த ஒன்று.அழகு என்ற ஒரு அத்தியாயத்தை மறக்கத் தெரிந்த ஒரு பரிணாம வளர்ச்சி.அதை எண்ண,சிரிக்கத்தான் தோன்றியது அவளுக்கு.நினைவுகள் எந்தத் திரையிலும் எந்த நடிகனாலும் வெளிப்படுத்த இயலாத ஒரு வகை ஹாஸ்யம் மிக்கது.மணவாழ்வின் புதிதில்தான் பத்ரி எவ்வளவு நகைக்கும்படியாகப் பேசுவான்,சற்றே ஒரு ஏளனம் தோன்றும் அதில்.அந்த பத்ரி இப்போது இல்லை.இவன் வேறு.பலர் பயனித்த சாலையில் தன் பயனத்தையும் தொடங்கி அதிலிருந்து பிரிந்து வேறு வழியில் செல்லவும் முடியாமல்.அப்பாதையிலிருந்து திரும்பிவிடவும் முடியாமல் தத்தளிப்பவர்களில் இவனும் ஒருவனாகிவிட்டான்.சுவாரசியமற்றதாய் தோன்றிவிடும் பயனப்பாதையில் ஆங்காங்கே தோன்றும் மலர்களையும் இலைகளையும் கண்டு மகிழ்ச்சிப் பெருமூச்செறியும் ஒரு பயனி.அந்நிலையை உணர்ந்ததால்தான் அதற்குப் பிறகான அவனது அத்தகைய பேச்சுகளில் தன்னால் ஈடுபாடு காட்டமுடியாமல் போனதோ.உன்மையான அவன் இல்லையே!,என்று ஒருவகை ஏக்கம் கலந்த ஈடுபாடற்ற தன்மை.இப்போது அந்த அறையில் அமர்ந்தபடி எதனை எண்ணிக் கொண்டிருப்பான் என்று இவள் மனம் நன்கு உணரும்.அப்பாடல் வழியே அவன் மனதில் ஒடும் நினைவலைகளும்,அதை சார்ந்த அவனது எண்ணங்களும்.ஆனாலும் அவளால் இப்போது இவ்வாறுதான் தன்னை வெளிப்படுத்த இயலுகிறது.உள்ளிருக்கும் வேறோரு தன்னை பொய்ப்பித்துக் கொண்டு.இருளுக்குக் கரும்போர்வைப் போர்த்தும் தேவையற்ற வேடம்.மழை அடுத்து வரும் அந்த குளிர்ந்த காற்று இப்போது.அந்த இலைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன,பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருந்த நீர்த்துளிகள்.அந்த ஒசை மட்டும் இச்சமயம் காதுகளுக்கு. </div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-6418477908121374562011-08-06T11:04:00.000-07:002011-08-06T11:05:58.813-07:00அவரும் அப்படித்தான்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
தனக்குப் பிடித்ததில்தான் <br />
அதன் உலகம் சுற்றுமாம்,<br />
உலகை உணராச் சிறுபிள்ளைகளுக்கு<br />
<br />
விருப்பம் வெறுப்பு என<br />
அதற்கு அனைத்தும் அதனுள்ளே<br />
<br />
நெருக்கமாய் தான் உணரும்<br />
உள்ளத்துடன், <br />
சொல்லாமல் தானே <br />
நெருங்கிவிடும் அவ்வுள்ளம்.<br />
<br />
கோபம் வந்தால், <br />
மௌனம் கொள்ளும்<br />
கொஞ்சல் புரிந்தால், <br />
சிரித்து நகரும்<br />
<br />
தான் பிடித்த முயலுக்கு <br />
மூன்று கால் என்றால், <br />
முயலே அது அல்ல <br />
மூஞ்சூறு என்றிடும்.<br />
<br />
சுற்றங்கள் வியந்திடக் கதைகள் பல பேசும்,<br />
அச்சுற்றமே கோபிக்கும், <br />
கருப்பொருளும் அச்சிசுவாகும்.<br />
<br />
தன் பொருள் தமதென்ற, <br />
எண்ணம் கொள்ளும் சில நேரம்.<br />
பிறர் மகிழப் பகிர்ந்தளிக்கும், <br />
உள்ளம் உண்டு சில நேரம்.<br />
<br />
யாரும் தேவை இல்லை என, <br />
உடல்மொழி கூறினாலும்.<br />
எவரும் அல்லாது இயங்காது, <br />
அதன் மனமொழி.<br />
<br />
பொதுவரிகள் இவை யாவும், <br />
சிறுபிள்ளைகளுக்கு மட்டுமல்ல.<br />
<br />
அவரும் அப்படித்தான்.</div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-68864176646548950852011-08-01T23:06:00.000-07:002011-08-02T06:03:31.849-07:00எழுத எண்ணினேன்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5_IBHJM34pRdpi_kB8xsf5glT2eL48qcGRI_8UrGaP5Vq3Fkq54X26Ex0Lg10kyHQv3UJ9YoXsMcuyoMSWNiuOExURUCQftVe3aL07ncfP5uaoxXcyJLBb4E8lOkdQ8evuiLPieKmSG8/s1600/pen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5_IBHJM34pRdpi_kB8xsf5glT2eL48qcGRI_8UrGaP5Vq3Fkq54X26Ex0Lg10kyHQv3UJ9YoXsMcuyoMSWNiuOExURUCQftVe3aL07ncfP5uaoxXcyJLBb4E8lOkdQ8evuiLPieKmSG8/s320/pen.jpg" width="320" /></a></div> <br />
<br />
இதோ எழுத அமர்ந்துவிட்டேன்,பாடல்களை இந்நொடியில் கேட்கத் தோன்றவில்லை ஆனால் இதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு பாடலை நானே இனம் கண்டுகொள்ளாமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன்.பார்க்கும் வெளி உலகிற்கு இங்கு நான் எழுதுவது மட்டும்தான் தெரியும்.சுவரில் சாய்ந்தபடி எழுத்துப் பலகையின் மேல் இக்காகிதங்களை வைத்துக் கொண்டு கிறுக்குவது மட்டுமே தெரியும்.எழுத வேண்டும் என்ற மனதிற்கு நானே இட்டுக்கொண்ட கட்டாயத்தில் அமர்ந்து, என்ன எழுதுவது என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.இசை பற்றி?!சூழ்நிலை அதற்கேற்றவாறு இல்லை.நடனம் பற்றி எழுதலாமா?!வாழ்வின் ஒரு சில கசப்பான அனுபவங்களை அது நினைவு படுத்துவிடும்,ஆக இங்கு அது பற்றியும் மையிட எண்ணமில்லை.உச்சத்தில் தனியாய்ச் சுழலும் மின் விசிறி என்னை வெறுமை பற்றி எழுதச் சொல்கிறது.வெறுமைகளால் உந்தப்படும் நேரமில்லை இது.மணமான மறுநாள் அந்த மணமகளிடம் தோன்றும் ஒரு ஆனந்த அழகு போல்தான் இந்த அந்தி மாலை தென்றல் காற்று வேளை.இயற்கை அழகைப் பற்றி எழுதலாமா?!,வேண்டாம் என்கிறது நெஞ்சம்..ஒரு சில ரசனைகள் ரசனைகளாக மட்டுமே சிறந்தது,அதற்கு எழுத்துருவோ வேறு எந்த கலை உருவோ எடுபடாது.எடுபட்டாலும் வெளிப்படாது.இந்த எண்ணங்கள்,இதைப் பற்றி எழுதலாமா?! வேண்டாம்,எப்படியும் இறுதியில் அது சுய வர்ணனையாய் முடிந்துவிடும்,என்னவன் தானாய் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றை முரசு அறைவித்தாற் போல் ஆகிவிடும்.என் சுயம்,என்னுடன்.பிறரது எண்ணங்களைப் பற்றி?,அது அனுமானங்களே தவிர அவர்களைப் பற்றிய முடிவுரை அல்ல.அன்மையில் பார்த்த ஒரு அழகுக் கதை பற்றி?,சிலாகிக்கலாம்,ஆனால் தற்பொழுது நான் தேடும் நிறைவினை அது தரப் போவதில்லை.இந்த எழுத்து பற்றியே எழுதினால் என்ன?!.வீட்டுச் சுவரில் வெறும் பல்பக் கோடுகளாக முதன் முதலில் அறிமுகமான இந்த எழுத்துக்கள் பற்றி,ம்ஹும்..புன்னகை பற்றி?!,"கே.பி சார் படம் ஜெமினியின் பாத்திரப் படைப்பிற்க்காகவே பார்க்கலாம்".. என்று நான் துவக்கினால்,நீங்கள் புன்னகைத்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.என் குடும்பம் பற்றி?!அவர்களுக்கே அவர்களைப் பற்றி சரிவரப் புரிவதில்லை.ஆக,நான் புரிந்துகொண்டேன் என்று எழுதினாலும் மறுப்புகளே அதிகம் கிடைக்கும் எனக்கு.நான் செய்த தீயவைகள் பற்றி?!..பொறுமையுடன் படிக்க இங்கு எவரும் இயேசுபிரான் இல்லை.நன்மைகள் பற்றி?!..நானும் இயேசுபிரான் இல்லை.என்னவன் பற்றி?!,அது தேவை இல்லை படிப்பவர்கட்கு.கவிதை என்ற பெயரில் கிறுக்கினேன் என்றால் பலருக்குப் புரிந்திருக்காது எனும் அசட்டு தைரியத்தில்.ஏன்?!,அவருக்கே கூட புரிந்திருக்காது எனும் எண்ணத்தில்.வாழ்க்கை பற்றி?! பிறந்த தேதி மட்டும் அறிந்துகொண்டு பயனத்தைத் தொடங்கி,எப்போது முடியும் என்று தெரியாவிடினும்,என்றேனும் முடிந்துவிடும் என்று அறிந்துகொண்டு பிறருக்காய்,நமக்காய் என பலருக்காய் ஒரு பிறவி முழுதும் செலவிடும் வாழ்வு பற்றி?!.<br />
தந்தையுடன் அடிக்கடி சதுரங்கம் விளையாடுவது உண்டு.அந்த 64 கட்டங்களைப் பார்க்கையில்,நாமே முடிவு செய்துகொண்ட வரையறையாகவும்,அந்த 64-கையும் அடக்கிய பெரிய கட்டம் நமக்காய் அளிக்கப்பட்ட வாழ்க்கையாகவும் தோன்றும்.இந்த சிறுகட்டத்தையும் பெருங்கட்டதையும் எங்கோ ஒரு கோட்டில் இனைப்பது "விதி".நமது வரையறைகளை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும்,நம்மால் பெயரிடப்பட்ட விதி.மார்கழி முன்பனியை ரசித்தாயா?!,வசந்தத்தில் ஓர் நாள் என்று ஏதேனும் யோசித்தாயா?!,குழந்தைகள் சிரிப்பினில் நீயும் சிரித்தாயா,சமைப்பதிலும் கலை கண்டாயா?! என்று கேட்கப்போவதில்லை.அந்த கிறுக்குத்தனமெல்லாம் என் ஆழ்மனதோடு.நீ அன்றாடம் செய்யும் செயல் என்ன?,பல் துலக்குவது தொடங்கி,நாளிதழ்களைப் புரட்டுதல்(?),இடையே பேச்சுக்கள்,பரவசங்கள்(இரண்டுமே சிலநேரம் பெயரளவில்).அதற்குப் பின் பிறருக்காய் நாம் உழைக்க ஆரம்பிக்கும் வாழ்வின் துவக்கம்.அனுதினம் இது தொடர்வது.எத்தனை பேர் அதனை மனதாரச் செய்கின்றோம்.முரண் எதிலும்,பிறக்கையில் அது அழ ,பிறர் சிரிக்கும் இவ்வுலகைப் பார்த்துப் பழகி நாளடைவில் அதனோடு ஒத்து தானும் சிரிக்கப் பழகிவிடும் ஒரு சிசுவின் மனநிலை அதன் இறுதி வரைக்கும் அதனைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.ஒருவேளை குழந்தை தானும் சிரித்துக் கொண்டே பிறந்திருந்தால் இந்த முரண் தோன்றி இருக்காதோ?.ஒரு செயல் ஒருவருக்கு ஆத்மார்த்தமாய்ப் படுவது மற்றவருக்கு கடமையாய் சில நேரங்களில்,வெறும் நேரச் செலவாய்ப் படுவது,முரண்.இந்த முரண்களுக்கு பயந்துதான் வாழ்வின் இந்த வரையறைகள் எவ்வாறு மாறுகின்றன?.உனக்கு முக்கியமான வேலை,இதை உனக்காகச் செய்யவேண்டும் அல்லது அதில் உனக்கு உதவ வேண்டும் காரணம் அது என் கடமை அல்லது அதைப் பொருத்துதான் நான் உன்னிடம் நற்பெயர் பெற முடியும் அல்லது உன் மனதில் எனக்கெனத் தனி இடம் போட்டு அமர்ந்துகொள்ளமுடியும் அல்லது அச்செயலைத் தவிர்ப்பதால் தோன்றும் பல பிரச்சனைகளில்/எதிர்ப்புகளில் இருந்து விடுபட முடியும்,ஆக இதோ செய்து முடித்துவிட்டேன்.இந்த நான்கு மதிப்பற்ற வரையறைகள்.வாழ்வில் அமைதி தேடுகிறேன் என்று அமைதி என்பதன் பொருள் மறந்து நாம் தற்காலிகமாய்த் தேடுவன.இதைப் பற்றி எழுதுகிறேன்,ஆனால் நான் கானும் பலர் (பலர் என்ன?!,என்னையும் சேர்த்து முக்கால்வாசி உலகம்) இப்படித்தான் இயங்குகிறது ,ஆக குறியற்று சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மண்ணில் புதைவதுபோல் புதையுண்டு விடுகின்றன வார்த்தைகள்.ஒவ்வொன்றுக்கும் நாம் அர்த்தம் தேடுவதுபோல் பலரும் தேடுவரோ?!.தேடினால் இந்த முரண் ஒழிந்துவிடுமா?!.சதுரங்கத்து பெரிய கட்டத்தினுள் 64-கின் பொருள் உணர்ந்து,தன்னை ஒரு கட்டத்தினுள் சுருக்கிக்கொள்ளாமல்,தனக்கு உகந்தது எது என்று உணர்ந்து அதனுள் பறப்பதுவும்,மலர்வதுவும்,போரிடுவதும்,சிரிப்பதுவும்,கதைப்பதுவும்,"வாழ்வதுமான" அந்த அமைதி.சதுரங்கம்தான்,வாழ்க்கை என்பது,சிக்கலானது அல்ல,பல நிறங்கள் கொண்ட சதுரங்கம்.ஒன்று நீ,மற்றொன்று நீயற்றது.எறியப்பட்டுவிட்டன குண்டுகள்,அதை உரியவர் கையால் எடுக்கும் வரை மண்ணில் புதையூண்டவையே.</div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-82976157596830020872011-07-26T10:51:00.000-07:002011-07-26T20:46:49.961-07:00எப்பொழுதும் உன் கற்பனைகள்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnsc6qnMnqIZiuOVxgPSc1JKgvkJrDX1SB5ZPsIbcKYVMT2QDYW-bpUktfYSnVdNux1G6NrUjf9SApyV1CMqbPyufxWHX_HBNSVozEiLsNlw5yI0vWy_DwxoVEpPe0Aal4CQx3NBx2_0Q/s1600/eppozhudhum+un+karppanaighal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnsc6qnMnqIZiuOVxgPSc1JKgvkJrDX1SB5ZPsIbcKYVMT2QDYW-bpUktfYSnVdNux1G6NrUjf9SApyV1CMqbPyufxWHX_HBNSVozEiLsNlw5yI0vWy_DwxoVEpPe0Aal4CQx3NBx2_0Q/s400/eppozhudhum+un+karppanaighal.jpg" width="400" /></a></div><br />
<div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 0.0001pt;"><span style="font-size: small;"><span style="font-family: "Latha","sans-serif";">இரவுகள் இங்கு உண்டு <br />
கரங்களை குவித்தபடி, <br />
அதனை இதழ்மேல் சாய்த்தபடி, <br />
நிலா முற்றத்தில் நடந்தபடி, <br />
வான் தாரகைகளை நோக்கி,<br />
அதை எண்ணுவதாய் நடித்தபடி, <br />
முழு நிலவு அதனில், <br />
பிரிந்திருக்கும் உந்தன் <br />
முகத்தினைத் தேடிய<br />
இரவுகள் இங்கு உண்டு <br />
<br />
விடியல்கள் இங்கு உண்டு <br />
நீராடி நல்லுடை சூடி, <br />
உன் விழிப்புக்காய் உன் அருகே அமர்ந்திருக்க,<br />
மார்கழியாய் உரைந்துபோன கன்னங்களில், <br />
ஆடித்தென்றலாய் உன் விரல் தீண்ட,<br />
அதிகாலைக் கனவுகள்,<br />
நாணத்தில் முடிந்த <br />
விடியல்கள் இங்கு உண்டு. <br />
<br />
காலைப் பொழுதுகள் இங்கு உண்டு <br />
அளவாய் சமைத்துவிட்டு, <br />
இடையே சிறு சண்டையிட்டு, <br />
கொஞ்சலிட்டு, <br />
வம்பும் செய்து, <br />
இறுதியில் அவசரமாய் அலுவலகம் கிளம்பும், <br />
தாயிலும் தந்தையிலும், <br />
உன்னையும் என்னையும் தேடிய, <br />
காலைப் பொழுதுகள் இங்கு உண்டு<br />
<br />
பகற்ப் பொழுதுகள் இங்கு உண்டு <br />
புத்தகத்தின் மெலிதான பக்கங்கள் சேருமிடம், <br />
வரிகளைப் படித்தபடி, <br />
எனையும் அறியாது, <br />
மையற்ற விரல்கொண்டு, <br />
உன் பெயரினை எழுதச் சென்ற <br />
பகற்ப் பொழுதுகள் இங்கு உண்டு <br />
<br />
நன்மாலைகள் இங்கு உண்டு <br />
இசையொன்றே சர்வமாய் உணர்ந்திருக்கும் கணத்தில்,<br />
ஏதோ ஒரு பாடலை, <br />
மனதில் எண்ணி முணுமுணுக்க,<br />
காதலும் இருக்காது அதில், <br />
காமமும் இருக்காது, <br />
இருப்பினும், <br />
வரியடுத்து வரும் உயிரொத்த இசைத்துளியில் <br />
உன் அருகாமையைத் தேடிய <br />
நன்மாலைகள் இங்கு உண்டு.<br />
<br />
</span></span></div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-64157238811769228892011-07-25T10:45:00.000-07:002011-07-25T19:22:10.968-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><div style="text-align: left;">மதப்போரால் ஈனமான </div>மண்ணின் சிசுவொன்று,<br />
மரத்திடா வலிகள், <br />
அதன் விழியோரம், <br />
கசிவது கண்ணீர் அல்ல,<br />
கோரிக்கை.. <br />
<br />
மறுபிறப்பற்ற மதத்தில் பிறந்த அவன்,<br />
இந்திய மதங்களில் சாத்தியம் உண்டென்றால், <br />
இன்னொரு மகாத்மாவை.. <br />
பிறந்திடச் செய் என..<br />
<br />
</div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-42767982797526399922011-07-24T00:33:00.000-07:002011-07-24T00:41:48.509-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><div style="text-align: left;"><div style="text-align: left;"><div style="text-align: left;"> <span style="font-size: small;">"நீங்க வாழ்க்கைல இது வரைக்கும் உருப்படியா என்ன சார் செஞ்சுருக்கீங்க?!".இதைத் தான் கேட்டேன்,அவரிடம்.உறவினர் வீட்டு வைபவம் ஒன்றிற்க்கு நானும் என் தந்தையும் சென்றிருக்கையில்தான் இது நிகழ்ந்தது.சிறு பிள்ளை ஒருவனின் பூனூல் வைபவம்.நெருங்கிய உறவினர்தான்,ஆனால் காலமாற்றத்திற்கேற்ப,ஆசாரம்,சூழல் என்னும் பெயரால் நாங்கள் அவர்களிடமிருந்து தூரமாகிவிட்டோம்.அந்த சிறுவன் எப்போது பிறந்தான் என்று தெரியாத அளவு தூரம்.குடும்பத் தலைவர் என்ற மட்டில் உறவுகளை எங்களுக்காய் வலுப்படுத்தித் தருவது அப்பாவின் பொறுப்பு என்று அவர் கருதியதால்,என்னையும் அவருடன் அங்கு அழைத்துச் சென்றிருந்தார்.நன்றாகத்தான் இருந்தது,இதுவரை நான் பார்த்தே இராத தூரத்து உறவினர்களும்,இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையினால் பார்க்க முடிந்திராத சில நெருங்கிய உறவினர்கள் என அனைவரையும் அங்கு சந்திக்க முடிந்தது.வயதான முதியவர்கள் முதல் நேற்று கல்லூரிப் படிப்பை முடித்த ஒருவர் என அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தோம்.இதற்க்கிடையே விழா வீட்டார்க்கு வேலைகள் இருந்ததால் அவர்களுக்கு உதவுவதற்க்கு சென்றுவிட்டேன்.ஒரு அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்த பொழுது,அப்பா நான் இதுவரை பார்த்தேயிராத யாரோ ஒரு உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார்.உன் தாத்தாவின் அத்தான் பிள்ளை என்று அப்பா கூறினார்.புன்னகைத்துவிட்டு அப்பாவின் அருகில் அமர்ந்தேன்.</span></div></div></div><span style="font-size: small;"> அவர்,"என்னடா பண்றா உன் பொன்னு?!"<br />
நானே பதிலளித்தேன், பயோடெக் முடிச்சுருக்கேன்,இப்பொதைக்கு ஜாப் கிடைச்சுருக்கு,கால் லெட்டர்க்கு காத்துண்டு இருக்கேன், ஃபர்தர் படிக்கனும்.<br />
அவர் அப்பாவிடம்,"எப்போ பையன் பாக்கபோறே?!கைவசம் ஜாதகம் இருக்கு ஃபர்ஸ்ட் க்லாஸ் பையன் நாலஞ்சு பேர் இருக்கா?!,பொன்னும் பாந்தமா இருக்கா,முடிக்சுடலாம் என்ன சொல்லறே?!,<br />
அப்பா,"அவ இஷ்டத்துக்கு விட்டுட்டோம்,படிக்கனும்னு ஆசைப்படறா!",என்றார்.<br />
அவர்,"இல்லடா!நான் என்ன சொல்லறேன்னா?!"<br />
நான் இடையே குறுக்கிட்டு,"இல்ல uncle நான் ஃபர்தர் ஸ்டடிஸ் பண்றதாதான் இருக்கேன்,ம்யுஸிக் எனக்கு இன்டிரஸ்ட் ஆக அதுல எதாவது செய்யனும்,வேற எதுவும் இப்போதைக்கு மைண்ட்ல இல்ல". <br />
நான் ஏன் என்னைப் பற்றி அவரிடம் கூறினேன் என்று மனதிற்க்குள் என்னையே வைதுகொண்டேன்.<br />
பிறகு அவரிடம் எனக்குத் தெரிந்தே இராத அவரது குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.<br />
அடுத்தது அப்பாவின் அக்கா முறை என்று ஒருவரை சந்தித்தோம்.'என்னடா பொன்னு புடவைலாம் கட்டிண்டு வளர்ந்துட்டா?! இதுக்கு காது குத்தச்சே பார்த்தது",என்று கூறிக்கொண்டிருந்தார்.அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு 12த்து படிக்கவிருக்கும் அவர்களது பிள்ளை பற்றிய அவரது அங்கலாய்ப்புகளையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.இடையே அவர்,"கல்யான சாப்பாடு எப்படா போடபோறே உன் அக்காக்கு என்று என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு கேட்டார்.அப்பாவிற்கே உண்டான அந்த ஆர்வம் பொங்கும் சமயங்களில் அதிகப்படியாய் பேசும் இயல்பு அங்கே மீண்டும் உதித்தது "அப்படி ஏதாவதுனா,கண்டிப்பா உங்களுக்குத்தான் முதல் பத்திரிக்கை சந்தேகமே வேண்டாம்",என்று விஜய் பாணியில்,தானே பல வருடங்களுக்கு ஒருமுறை பார்க்கும் அந்த தூரத்து அக்காவிடம் ,எக்கச்சக்க பிட்டுகளை சேர்த்து போட்டுவிட்டு நகர்ந்தார்.<br />
"கடவுளே!நான் எங்க போயி முட்டிக்கறது!",என்று மனதில் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு அவருக்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தேன்.<br />
அடுத்து,பாட்டி வழி உறவு என்று ஒருவரை சந்திக்க நேர்ந்தது,அந்தக் குட்டிச் சிறுவனுக்கு ஒன்று விட்ட பெரியப்பா என்னும் பெயரில் அந்த மண்டபத்தையே ஒரு வழி செய்துகொண்டிருந்தார்.<br />
"ஏன்னடா கோவிந்தா?! பொன்னு நன்னா சமைக்கறாளா,என்ன பாக்கலாமா சொல்லு?!காலாகாலத்துல இதெல்லாம் செஞ்சுடனும்",என்று. ஒருபடி மேலே சென்று என் ஜாதக விபரம் என அனைத்தையும் கேட்கத் துவங்கிவிட்டார்.எழுந்த எரிச்சலில் "நீங்க இதுவரைக்கும் வாழ்க்கைல உருப்படியா என்ன சார் செஞ்சுருக்கீங்க!".என்றேன்.சற்றும் அவர் அதை எதிர்ப்பார்க்கவில்லையோ தெரியவில்லை.<br />
அப்பா உடனே,"ஜில்லு!,அங்க போ,அத்தை ஹெல்புக்கு கூப்பிடறா பாரு",என்று நகர்த்திவிட்டார்.நானும் நகர்ந்துவிட்டேன் ,அப்பா அவரிடம் என் ஜாதகம் பற்றிய விவரங்களை தந்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்.<br />
"என்னடா! உன் பொன்னு இப்படி பேசறா?!" என்று கூறியது என் காதில் மெலியதாய் வந்து சேர்ந்தது.<br />
வைபவம் முடிந்து விடைபெற்றுக் கொண்டு ரயிலிற்க்காக காத்திருந்தோம்."என்ன பாத்துடலாமா?!" என்றார் அப்பா என்னை வெறுப்பேற்றுவதற்க்காகவே.<br />
ஏற்கனவே கோபத்தில் இருந்த நானோ "பா!சொல்லிட்டேன் கேட்டுக்கோ,இனிமே அந்த கேஸையெல்லாம் எங்கையாவது பார்த்தேன்னா உன்னோட சேர்த்து இந்த தண்டவாளத்துல தள்ளிவிட்டுடுவேன்".<br />
தெரியாம கேட்கறேன்,சீரியஸ்லி!இவங்களலெல்லாம் வாழ்க்கைல என்ன சாதிச்சுட்டாங்கன்னு இந்த கல்யாணம்,குடும்பம்,குழந்தைங்கனு அதே லைஃப்?!.அப்பா அதற்கு பதில் அளிக்கவில்லை.பேச்சும் வேறு ஏதோ ஒன்றைப் பற்றி மாறிவிட்டது.<br />
ஆனால்,கல்லூரிக் சென்றுவிட்டு சான்றிதழ்கள் சிலவற்றை பெற்றுக் கொண்டு வருகையில். ஒருவர் பெண் என்னைக் கேட்ட கேள்வி,வைத்தீஸ்வரன் கோவிலில் இறங்க வேண்டியவர் அந்த இடம் வரும் வரை என் வாழ்வு திருமணம் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.எப்படி இருந்தாலும் நீயும் அந்த வட்டத்தில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பது போன்ற அவரது ஏளனமான பார்வை வேறு.சென்ற வாரம் வீட்டிற்க்கு வந்திருந்த வேறு ஒரு உறவினரின் அதே போன்ற பேச்சு என மீண்டும் அந்த கேள்வி மனதுள் எழுந்தது.நமது வாழ்வை நாம் முடிவு செய்யாது நமது பெற்றோர் முடிவு செய்யாது யாரோ ஒருவர் அமர்ந்து முடிவு செய்து கொண்டிருக்கிறாரே என்ன இது என்று?!. <br />
ஒருவேளை திருமணம்,பிள்ளைகள் என்பதுதான் வாழ்வின் தலையாய குறிக்கோளோ?.அப்படியாயின்,"நான் டாக்டராக வேண்டும்,நான் பொறியியல் வல்லுனர் ஆக வேண்டும்",என்பது போன்று அதுவும் ஒன்று அவ்வளவுதானே.ஆனால் சிறு மாற்றம் இது பலரால் அவர்களே விரும்பியும் விரும்பாமலும் அடையப்படும் குறிக்கோள்.உன் குறிக்கோள் அதுவாயின் நான் அதை எதுவும் தடுக்கவில்லை.மாற்றிக் கொள்ளவும் சொல்லவில்லை.ஆனால் எனைப் பொருத்தவரை அது ஒரே சக்கரத்தில் உழல்வது போன்று,அபத்தம்.என் குறிக்கோள் வேறு,அதே சக்கரத்தில் தானும் சுழல்வதாயின்,தன் ஆன்மா,தன் வாழ்வு என்று ஒன்றிர்க்கு அர்த்தமே இல்லாது போய்விடும்.ஏதோ ஒரு ஆன்மாவின் குறிக்கோளை நீ சாதிக்க முற்படுகிறாய்,அவ்வளவே.தான் பிறந்ததிலிருந்து வாழ்வில் என்ன செய்தோம் என்று யோசித்தால் <br />
1.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,பள்ளி சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.<br />
2.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,கல்லூரி சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம். <br />
3.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,வேலைக்குச் சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.<br />
4.நாம் ரேஷன் கார்டில் ஒரு பெயராக இருந்தது மாறி நாம் ஒரு ரேஷன் கார்டில் தலைவர்/தலைவி என்று முன்மொழியப் பட்டிருப்போம்.<br />
இதையேதான் 6000 சம்பளத்திற்கு வேலை செய்பவனும் செய்கிறான்.60000 சம்பளத்திற்கு வேலை செய்பவனும் செய்கிறான்.இருவருக்கும் என்ன வேறுபாடு,டி.என்.ஏ-க்களைத்தவிர.<br />
நட்பு ஒருத்தியின் வலைப்பூவில் அவள் அன்மையில் பதிவிட்ட ஒன்றைப் படித்தேன் நேற்று,சிறு சிறு ஆசைகள்,எண்ணங்கள் என்றுதான் அதைப் படிக்கும்ச்ச்ச் எவருக்கும் முதற்கண் தோன்றும்.ஆனால் அப்படித் எண்ணும் எவருக்கேனும் அவ்வாறு சிந்திக்கத் தோன்றி இருக்குமா?!,என்பது சந்தேகமே.என் இந்த எண்ணம் பற்றி சொன்னபொழுது தோழி ஒருத்தி நீ சாதிக்க நினைப்பதை அவர்கள் சொல்வது போல் மணம் செய்துகொண்டபின் செய்யலாமே என்றால்.<br />
ஆம் செய்யலாம்தான் ஆனால்,அவர்களதும் நமதும் எண்ணம் ஒத்ததாக இருக்கும் அல்லது அவர்களால் அதை அனுமதிக்க முடியும் எனும்பட்சத்தில் மட்டுமே,அது சாத்தியம்.<br />
ஒரு ச்சாரிட்டி துவங்க சிறுவயதிலிருந்து ஆசை,பெயர் கூட முடிவு செய்துவிட்டேன் ஆறு மாதங்களுக்கு முன்பு,"கரு அல்லது கருவறை"என்று.ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க எண்ணம்,என சிறு சிறு விருப்பங்கள்.இதெல்லாம் நிறைவேற்ற முடியுமா?!ஒரு வட்டத்தினுள் தானும் சுழலத்துவங்கியபின்.நான் அன்று கோபப்பட்டு அந்த பெரியவரிடம் அவ்வாறு கேட்டதாகத்தான் அவரும் எண்ணி இருப்பார்,அது அவர்களது இயல்பே.ஆனால் அவராய் என்றோ தனக்குக்தானே கேட்டுக் கொண்டிருக்கவேண்டிய கேள்விகளையே நான் கேட்டென்.முதலில் வாழ்வதற்கான அர்த்தத்தை தேடு அதில்தான் உனது இயல்பும் உள்ளது உனது இயல்பு வாழ்க்கையும் உள்ளது,திருமணம்தான் உன் வாழ்வின் அர்த்தமென்றால் அதை செய் ஆனால் அதை உன் போல் அதே எண்ணம் கொண்டவருடன் மட்டுமே செய்.நம் எண்ணப்படி நாம் வாழ வேண்டும் அதை நாம் மட்டுமே வாழ வேண்டும்,பிறர் மீது தினித்தல் தவறு என்று அனைவ்ரும் தாமாக உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.சுதந்திரம் என்ற ஒரு வார்த்தை அதில்தான் எங்கோ உள்ளது.லைஃப்னா,சும்மா இல்ல சார்!. </span></div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-32724344831937916882011-07-20T04:21:00.000-07:002011-07-20T04:31:03.064-07:00கன்னத்தில் முத்தமிட்டா(ள்)ல், அமுதமாய்!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1-OCd-hVuPnJHkJaerjhd_pG5TSdLnIMi5Y7dg8Lkxb-Ya_Jek2pfQECeQzVzg7nYQuA6jYAx6uQUEChS1zDH1nZ030i8pf7FPu1MveJobpPhB3EbyKEafIBga9_2Ug1LBugPZsWdfsc/s1600/27kana2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1-OCd-hVuPnJHkJaerjhd_pG5TSdLnIMi5Y7dg8Lkxb-Ya_Jek2pfQECeQzVzg7nYQuA6jYAx6uQUEChS1zDH1nZ030i8pf7FPu1MveJobpPhB3EbyKEafIBga9_2Ug1LBugPZsWdfsc/s1600/27kana2.jpg" /></a></div> பள்ளி காலத்திலிருந்தே இருக்கும் ஒரு பழக்கம்,எங்கு சென்றாலும் பையில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை உடன் எடுத்துச்செல்வது.ஏன் என்று தெரிந்ததில்லை, பாரதியின் மீதான காதலா?! அல்லது அந்த எழுத்தில் உள்ள ஒரு வேட்கையா,முதன் முதலில் அப்பா எனக்கு அதை வாங்கித்தந்தது உள்ளூரில் நடந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்க்காக, பாரதியார் பாடல்களைப் பாடுவதுதான் போட்டியே,எங்கள் பள்ளியிலிருந்து ஐவர் கலந்து கொண்டோம் நான் பாடிய பாடல்கள் மூன்று,காணி நிலம் வேண்டும்,முரசு பாடல் மற்றும் மனதில் உறுதி வேண்டும்,பரிசு கிடைக்கவே,அப்படி நாம் என்னதான் பாடினோம் பரிசளித்துவிட்டார்கள் என சிறுவயதில் தோன்றுமே நம்மை நாம் செய்யும் ஏதேனும் ஒரு செயலே வெற்றி கொள்ளச் செய்து ஊக்கப்படுத்தினால் ஏற்படும் தனி ஈர்ப்பு,அது அன்று தொடங்கியது அவ்வரிகள் மீதான கவனம்,கலத்தல் என அனைத்தும்.வீட்டுமாடிப்படியில் அமர்ந்து அப்பக்கங்களைப் புரட்டிய ஞாயிறு மதியங்கள் பல.அதிலிருந்து அதில் வரும் வரிகளை எங்கு எதில் நோக்கினாலும் அதற்கு தனி முக்கியத்துவம் அளிக்கத்தோன்றும்.அப்படித் தோன்றியதுதான் கன்னத்தில் முத்தமிட்டால் என்னும் வரியின் மீதான ஈர்ப்பும், அப்படத்தின் சுவரொட்டிகளை அது வெளியான புதிதில் எங்கள் ஊர் தியேட்டர்களில் கண்டபோதும்.இளமைப் பருவத்தின் துவக்க காலம் அது என்று உணர முடியாததான சிறுபிள்ளைப் பருவம் அப்பொழுது,ஆக அது மாதவனின் படமாகவும் எனக்குத் தோன்றவில்லை.சிம்ரனைப் பிடிக்கும் அதில் அவர் மூன்று குழந்தைக்கு தாயாக நடிக்கிறார் என்று அச்சமயம் வீட்டிற்க்கு வந்திருந்த சித்தி கூறிக்கொண்டிருந்தார்.கீர்த்தனா,ஆனந்த விகடனில் தன் அப்பா அம்மாவுடன் ஃபோட்டோவிற்க்கு போஸ் தந்த அதே கீர்த்தனா.இதையெல்லாம் கவனித்துவிட்டுதான் மேலே "மெட்ராஸ் டாக்கீஸ்" என்ற பெயரைப் பார்த்தேன்.கண்கள் மீண்டும் அந்த படத்தின் பெயரைப் பார்த்தது.மனதிற்க்குள் "பாரதி!" என்ற வார்த்தை மட்டும் எங்கோ பாதாளத்தின் அடியிலிருந்து பல பாதைகள் கடந்து வரும் குரல் போல ஒலித்துக்கொண்டிருந்தது.ஆனால் பல காரணங்களால் படத்தை இவர்கள் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" திரையிட்டபோதுதான் காணமுடிந்தது.சில நேரங்களில் பாடல்கள் மட்டும்தான் மனதை வருடும்,வலிக்கச்செய்திடும்,மனதிற்கு நெருக்கமானதாகச்செய்திடும்,சிரிக்கச்செய்திடும்,புரட்சி கொள்ளச்செய்திடும்.பத்து நிமிடப் பாடல்கள் செய்வதைப் பல நேரங்களில் இரண்டரை மணிநேரப் படங்கள் செய்வதுண்டு.அத்தகைய படங்களில் ஒன்றாகத்தான் ஆனது இந்த கன்னத்தில் முத்தமிட்டாலும்.பார்த்த முதல் தடவைமுதல்.பார்த்த முதல் கனமே ஒட்டிக்கொண்ட ஒரு அவா "இந்த அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால் அப்புறம் இன்னும் பல படங்கள்,இதைப் பற்றி மட்டும் மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வடிக்க வேண்டும்"என்று.வருடங்கள் கடந்து அதற்குப் பிறகு பார்த்து மனதிற்கு மிகவும் நெருக்கமாகிபோன சில படங்களைப் பற்றி எழுதினாலும்.இந்த இரண்டு படங்களைப் பற்றி எழுத நினைக்கும் பொழுது மட்டும் வார்த்தைகள் அடுத்து அடுத்து கரைதொட்டுச் செல்லும் அலைபோலத் தொட்டுவிட்டு மறைந்துவிடும்.இப்படங்களில் எல்லாம் அதைப் பற்றி எழுதுவதையும் தாண்டி என்னமோ ஒன்னு இருக்கு சார்!".அதற்குப் பிறகு மற்றதைப் போல இப்படத்தையும் பலமுறைப் பார்த்தாகிவிட்டது.அன்று இருந்த அதே நிலையே இன்றும். <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZfemZw7T05kELlGdXFePHjQrXR-kHOGgP9uX142dFSCFZCBojPybQgdI8jTN9OyPvtkxoy1ypyxwnEShB7_8YH-wTQy7u8TTalHe7WT9svxHwGQbFblLg6QUj6-mFJUBTYLADm3DilPs/s1600/7569.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><br />
</a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZfemZw7T05kELlGdXFePHjQrXR-kHOGgP9uX142dFSCFZCBojPybQgdI8jTN9OyPvtkxoy1ypyxwnEShB7_8YH-wTQy7u8TTalHe7WT9svxHwGQbFblLg6QUj6-mFJUBTYLADm3DilPs/s1600/7569.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZfemZw7T05kELlGdXFePHjQrXR-kHOGgP9uX142dFSCFZCBojPybQgdI8jTN9OyPvtkxoy1ypyxwnEShB7_8YH-wTQy7u8TTalHe7WT9svxHwGQbFblLg6QUj6-mFJUBTYLADm3DilPs/s320/7569.jpg" width="320" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZfemZw7T05kELlGdXFePHjQrXR-kHOGgP9uX142dFSCFZCBojPybQgdI8jTN9OyPvtkxoy1ypyxwnEShB7_8YH-wTQy7u8TTalHe7WT9svxHwGQbFblLg6QUj6-mFJUBTYLADm3DilPs/s1600/7569.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"></a> <br />
<br />
பாரதியின் கண்ணம்மா போல் அவள்-ஷாமா வீரமும் காதலும் கருனையும் எல்லையற்றதாயும், அளவற்றதாயும் உள்ளவள்.பட் பட் என்று வெடிக்கும் எழுத்தாளர் திருச்செல்வன்.மிகவும் உணர்ச்சிவசப்படும் பெண்ணாக தாயாக இந்திரா,புரட்சி புரட்சி என்று வெடிக்கும் தம்பிக்கு தமக்கையாக "ஊருடன் ஒத்து வாழ்" கொள்கையைக் கடைபிடிக்கும் ஒருத்தி,கிராம நகர வாழ்க்கைக்கேற்ப தன் வாழ்விலும் உருவிலும் தோன்றும் மாற்றத்தை அழகாய் வெளிப்படுத்தும் தாத்தா.சுற்றி நிகழும் அவலங்களை கண்டு அந்நேரம் மட்டும் மனதிற்குள்,ஒரு மாற்றத்திற்க்காக ஏங்கும் ஒரு குடிமகனாக,டாக்டர்.கடவுள் யாரென்று தெரியும் ஆனால் அவனைப் பற்றிப் படித்ததில்லை,தெரிந்ததைவைத்துக் கொண்டு அவனைத் தேடுகிறேன் என்னும் மனநிலை கொண்ட குழந்தை அமுதா,நிஜமாகவே அமுதம்.படம் நெடுக நறுக்கென்ற வசனங்களில் இயல்பாக ஆனால் சுருக்கென்று தோன்றும் மணிரத்னம் படத்திற்கே உரிய அழகு,சுஜாதாவைத் தவிர யாரால் தரமுடியும்.வசன உச்சரிப்பிற்க்கு தகுந்தவாறு அந்த பின்னனி இசை.இளையராஜா இசை மட்டுமல்ல ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் அந்த ஆன்மாவினை உணர முடியும் என்று உணரவைத்த படங்களில் இதுவும் ஒன்று.ஆன்மாவைத் தேடுகிறாயா?!அதோ,அந்த குழல் ஓசைதான் அதன் தொடக்கம்.இருளும் வெண்மையும்,வெறுமையும் முழுமையும் போல்தான் இப்படத்தில் பல இடங்களில் தோன்றும் குழலும் அதைத் தொடர்ந்து வரும் கீபோர்டும்.அத்தகைய ஆன்மாவிற்கு உருவம் அந்த கேமிரா எனலாம்.போரும் பேசுகிறது,புத்தமும் பேசுகிறது.<br />
<a href="http://www.123musiq.com/images/kanathil%20muthamittal.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://www.123musiq.com/images/kanathil%20muthamittal.jpg" width="320" /></a><br />
தாய் என்பவள் யார்?,அனைத்திலும் முதிர்ச்சி மிக்கவள் இல்லை அவள்,தியாக உள்ளத்தின் மொத்த உருவம் இல்லை அவள்.அன்னை இல்லை அவள்,அம்மா!.திருமணம் குடும்பம் என்று தான் கண்ட சுழலில் தானே முக்கியப் பாத்திரமாகிவிடும் ஒருத்தி.தன் சரிபாதியை விட தன் பிள்ளைகளிடமே அதிகம் அன்னியோனியத்தை உணருபவள்.அதுவும் பெண் பிள்ளையாயின் அவளே இவளுக்கு தோழி, ஆதி முதல் அந்தரங்கம் வரை அனைத்தும் பகிர்ந்துகொள்ளும் தோழி,ஒரு காலத்தில் தானும் மகளாக இருந்தவள்,அந்த பிஞ்சு மனம் இறுதி வரை மாறாதவள்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4k1z_FCZGTFbkJ5tczw9kNE8m-cxsuEn3FMtZHlL61e9-p465WxgiO3p1tg26nIXoRODvlDYAxiLhsfbHpxxvUnlhKfKlj00ofKDKtMfzPI1VLJIZ18i-IqCpWGVtE5inHGYKSPUmdwA/s1600/peckonthecheek_72+v2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="188" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4k1z_FCZGTFbkJ5tczw9kNE8m-cxsuEn3FMtZHlL61e9-p465WxgiO3p1tg26nIXoRODvlDYAxiLhsfbHpxxvUnlhKfKlj00ofKDKtMfzPI1VLJIZ18i-IqCpWGVtE5inHGYKSPUmdwA/s320/peckonthecheek_72+v2.jpg" width="320" /></a><br />
தந்தை மகள் உறவு?!,அதன் அழகு,வெளிப்பாடு,புனிதம் அனைத்தையும் உணர்ந்துவருபவள் நான்,அதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம்,தந்தைக்கே உண்டான அந்த முதிர்ச்சி,தாயன்பை விட எதோ ஒரு விதத்தில் பெரியதாகவே தோன்றும் அந்த பாசம்.இவற்றை தன் வரிகளால் பக்கங்களில் அழகாய் அளந்துவிடும் வைரமுத்துவின் பேனா ,அதைத் தன் குரல்களில் அளந்துவிடும் சின்மயீயும்,ஜெயச்சந்திரனும்;என்ன ஒரு உணர்வு அந்த இரு குரல்களிலும்,அதைக்கேட்டுக்கொண்டு கண் மூடி ஒரு ஓரமாய் அமர்ந்துவிடத்தோன்றும்,தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த குரல்களில் சின்மயீயினதும் ஒன்று எனலாம்.கதைக்கரு வேறாயினும் காதலை மேலோட்டமாகத் தொட்டு செல்கிறது,பறவைகள் பறக்கும்பொழுது அந்த சிறகுகள் அதன் உடல் தொட,தோன்றும் ஒரு மென்மை போல,நான்-எண்ணம் நீ-உருவம் என்பது போன்ற மென்மை.சட்டெனத் தான் நனைந்து விடுகிறது நெஞ்சம் அந்த மென்மையில்.இது அனைத்தையும் தாண்டி மண்ணுடன் மனம் கொண்ட உறவைப் பேசும் இடங்களில் மனமும் காணும் விழியும் இனைந்து இளகிவிடும்.வெள்ளைப் பூக்கள் பாடல் ஒரு அமைதி உணர்வையும்,என்றேனும் ஒரு நாள் அவ்வரிகள் மெய்யாகாதா?! என்ற ஏக்கத்தையும் விட்டுச்செல்லும் கேட்கும் ஒவ்வொரு முறையும்,நூற்றாண்டின் மிகச் சிறந்த வரிகளுள் இப்பாடல் வரிகளும் ஒன்று எனலாம் .இறுதிகாட்சி உடல் என்றால் பின்னணி இசை அதற்கு உயிர்,கலங்கவைத்துவிடும்.<br />
<a href="http://www.tamilpix.com/uploads/3bab083a02.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="144" src="http://www.tamilpix.com/uploads/3bab083a02.jpg" width="320" /></a><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNG8u5FF_4nbgyeYp5EKq3t17VtVB5zEeLD9jdCI01zVDnzrDpZz4GlWrA5Di7WnKQbTEfU4ZtOHHdm3KVKfXupUxe5u58RSTxA5Kl06KAVr5db0jHQ7nNLy5bsobxVgK2bOEQV4ZUorI/s1600/kannathil1.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"></a><br />
ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றுவது என்றால் என்ன?!,எண்ணிப் பார்த்ததுண்டு.ஒரு மனிதரைச் சந்திப்பதைப் போல்தான்,முதல் சந்திப்பில் அவரிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்று,மீண்டும் பல முறைச் சந்தித்தாலும் அத்தருனத்தில் எதோ ஒன்றைப் புதிதாய் கற்றுணர்ந்து வருவது போன்று.இதோ இந்தப் படமும் அவ்வாறுதான்,ஒவ்வொரு முறையும் பலதை உணர்த்துகிறது,கடையக் கடையக் கிடைத்த அமுதம் போல்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNG8u5FF_4nbgyeYp5EKq3t17VtVB5zEeLD9jdCI01zVDnzrDpZz4GlWrA5Di7WnKQbTEfU4ZtOHHdm3KVKfXupUxe5u58RSTxA5Kl06KAVr5db0jHQ7nNLy5bsobxVgK2bOEQV4ZUorI/s1600/kannathil1.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="143" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNG8u5FF_4nbgyeYp5EKq3t17VtVB5zEeLD9jdCI01zVDnzrDpZz4GlWrA5Di7WnKQbTEfU4ZtOHHdm3KVKfXupUxe5u58RSTxA5Kl06KAVr5db0jHQ7nNLy5bsobxVgK2bOEQV4ZUorI/s320/kannathil1.jpeg" width="320" /></a><br />
<b> <br />
கண்ணத்தில் முத்தமிட்டால்-கண்ணம்மா<br />
அமுதம் சுரக்குதடி! </b>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-63366497261130315522011-07-15T08:50:00.000-07:002011-07-18T00:55:44.378-07:00<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggFJKh1HYUjHEHD0x7m41CtEMZUZwZQ2x6C2gVvbuFc0I19CddKjsxbEr5Obc4H8lpeuiVsxXcT4_14m-6atrfZB6wImcJoTdKHAy4AbqCiunl9GConNcceByTrseJsHvOVDADPve0Nhw/s1600/The+Beauty+of+a+Note+-+Cool.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggFJKh1HYUjHEHD0x7m41CtEMZUZwZQ2x6C2gVvbuFc0I19CddKjsxbEr5Obc4H8lpeuiVsxXcT4_14m-6atrfZB6wImcJoTdKHAy4AbqCiunl9GConNcceByTrseJsHvOVDADPve0Nhw/s320/The+Beauty+of+a+Note+-+Cool.png" width="320" /></a></div><span style="font-family: Latha;">செவிவழி பரவும் சுவாசம் நீ,<br />
நாளம் நடமிடும் </span><span style="font-size: small;"><span style="color: #231f20; font-family: arial,sans-serif; line-height: normal;"><span><span><span style="color: silver;">செவ்வணு</span></span></span></span></span><span style="font-family: Latha;"><span style="color: #cccccc;"> </span>நீ,<br />
கருவிழிகொள்ளும் நாணம் நீ,<br />
மூடிய விழி மறை பொருளும் நீ,<br />
விரல்கள் வரையும் அலைகள் நீ,<br />
இதயம் ஜனிக்கும் இருள் இம்சையும் நீ, <br />
பெண் அவள் சொல்லாத சொற்கள் நீ,<br />
ஆண் அவன் மறைத்த ஏக்கங்கள் நீ,<br />
மழலை மனதின் புரிதல்கள் நீ ,<br />
அண்டம் பேசும் அனைத்தும் நீ,</span><br />
<span style="font-family: Latha;">புலப்படாது </span><span class="Apple-style-span" style="font-family: Latha;">உணர்ந்ததில் தலையாயது நீ, </span><br />
<span style="font-family: Latha;">நீ..<br />
இசை..</span>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-66310458616594956002011-07-03T06:59:00.000-07:002011-07-03T06:59:33.452-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">பரிபூரணங்களில்தான்,<br />
<div style="text-align: left;">குறை உள்ளவளாகிறேன்.. </div></div><div style="text-align: left;">அங்குதான் எனது எல்லைகள்,<br />
தீர்மானிக்கப் படுகிறது. </div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8168243390288865939.post-6374741642130259172011-06-20T09:02:00.000-07:002011-06-20T20:01:01.849-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><div style="text-align: left;"><div style="text-align: left;"> இசை,புத்தகம்,Interior designing,ஒவியம்,அவ்வப்பொழுது சினிமா,எழுத்து,சமையல்,எப்பொழுதாவது வெட்டி சிந்தனைகள் என அதே போல்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது,நேரமும் காலமும்,கூடுதலாக நண்பரகளுடன் தொலைபேசியும்.நான்கு வருடங்களுக்கு முன் கல்லூரியில் சேர்ந்தபொழுது எப்படி இருந்ததோ?!,அவ்வாறே.பொன்னியின் செல்வனை மீண்டும் படித்து முடித்தாயிற்று.கல்கியின் படைப்புகளிலேயே மிகவும் சுமாரானதாக நான் கருதும் மகுடபதியையும்.The monk who sold his ferrari-யின் தமிழ் பதிப்பையும் சேர்த்து முடித்தாயிற்று.பொழுது போக இளையராஜாவின் இசைகளை பாடல்களிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.முன்பெல்லாம் தொலைபேசி என்றால் "இந்த தூத்துக்குடி பக்கம் திருநெல்வேலி பக்கம் இருக்கும்" என்றிடுவேன்,இப்போதோ?! ப்ராட்பேண்டின் அதிவேக இணைய இனைப்பு அருளால் நண்பர்களைப் பிடிக்க இயலாததால் அதற்கு உதவும் வொடஃபொனும்,BSNL தொலைபேசியும் புதிய நண்பர்களாகிவிட்டார்கள்.BSNL-ற்கு அதிக வருமானம் ஈட்டித் தந்ததற்க்காக அனேகமாக இம்மாத இறுதியில் எங்கள் வீட்டிற்க்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.நண்பர்களுடன் குற்றாலம் அல்லது திற்பரப்பு செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தேன்."நீ எங்க கூட இருக்கப்போறதே இன்னும் கொஞ்சநாள்தான்,அப்புறம் வேலை கீலைனு வந்துட்டா எங்க கூட இருக்க முடியாது" என்று அம்மா எதற்கெடுத்தாலும் ஒரே வசனத்தைக் கூற இப்போதைக்கு எங்கும் செல்வதில்லை என்று முடிவுசெய்துவிட்டேன்.இந்த sentiment எங்கே?!எப்பொழுது?! பிறந்ததோ.இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு வாசலில் சென்று அமர்ந்தேன் இந்த ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் சிறார் கூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா?! அவர்களைச் சேர்ந்தவர்கள் போல,ஒரு சிறுமி,எண்ணெய் தடவாத தலை,வலைந்த சிறு கம்பியாலான ஒரு மூக்குத்தி அணிந்திருந்தால்.என்னைக் கடந்து செல்லுகையில் திரும்பிப் பார்த்து அழகாக சிரித்துவிட்டுச் சென்றாள்,சட்டென்று அது ஏனோ மனதில் பதிந்துவிட அதை பென்சிலால் கிறுக்கியும் ஆகிவிட்டது.அதற்க்கேற்ற வண்ணம் கொடுப்பதற்குள் தம்பியுடன் சிறு சண்டை அதனால் கோபத்தில் அதனை அப்படியே விட்டுவிட்டேன்.அந்த சிறு பெண்ணின் சிரிப்பு மட்டும் மனதில் இப்பொழுது கூட இருக்கிறது சார்.</div></div> <br />
சென்ற வாரம் "ஆரண்யகாண்டம்" பார்த்து விட்டு தலைப்பு வைத்தது படத்திற்கா அல்லது தமிழ் சினிமா சென்றுள்ள அடுத்த கட்டத்திற்க்கா?!என்று வியந்து கொண்டிருந்தது இந்த வாரம் அவன்-இவன் பார்த்ததோடு சென்றுவிட்டது.பக்கத்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த கோ-வையே இன்னும் ஒரு முறை பார்த்திருக்கலாமோ? என்று எண்ணும்படி ஆகிவிட்டது.கதையே இல்லாமல் வெறும் கதாப்பாத்திரங்களையே கடைசி வரைக் காண்பித்து ஏமாற்றிவிட்டார்கள்.மறக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்,படம் பார்த்ததையும்,படத்தையும்.<br />
அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால்,புன்னகை,kuch kuch hota hai,one flew over the cuckoo's nest என்று கையில் கிடைத்த படங்களை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் படமே இல்லை சார்,அதையும் தாண்டி,திரைப்படம் என்ற சிறுவார்த்தையில் அதனை எல்லாம் சுருக்கிவிட முடியாது.புன்னகை ஜெமினியின் பாத்திரப்படைப்புக்காகவே பார்க்கலாம்.</div><div style="text-align: left;"> வெரைட்டி ஊத்தப்பம் செய்துபார்த்தேன்(as a result of innovativeness).ஐந்து வகையில்,வீட்டிற்க்கு வந்திருந்த குட்டீஸ்களுக்காக,எழுந்து செல்லவில்லை அவர்கள் ஆக அதுவரையில் முயற்சி நன்றாக வந்தது என்றே வைத்துக் கொள்ளலாம். சிறுவயதில் நான் வீட்டுச்சுவற்றில் கிறுக்கியதை எல்லாம் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தாகிவிட்டது.அம்மாவின் "நல்ல பொழப்பு" என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு.சிறுவயதில் மாதக் காலண்டரின் பின் புறம் வரைந்த ஒரு தவழும் க்ருஷ்ணன் ஒவியத்தை தேடிக் கொண்டிருக்கிறேன் இன்னும் கிடைத்தபாடில்லை.மிகவும் பிடித்த ஒவியம் அது :( ஒரு ஃபைலில்தான் சார் வைத்திருந்தேன் நோட்டு அட்டையில் இருந்த குந்தவையுடன் சேர்ந்து இவரும் காணாமல் போய்விட்டார்.<br />
ஜூலை 1 நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செல்கிறேன். அந்த லிட்சிப் பழ ஜூசிர்க்காகவும் ;).இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டம் தீட்டியாகிவருகிறது.நானும் அப்பாவும். <br />
இப்படியெல்லாம் எவ்வாறெல்லாமோ கவனம் எப்பொழுதும் போல் எங்காவது திரும்பினாலும், காலையில் விழிக்கையில் இன்று நாம் எட்டு நாப்பதுக்கு வகுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை.அந்த வகுப்பறையில் உள்ள இருக்கையில் இன்று அமர வேண்டிய நிலை இல்லை.காலையில் எழுந்ததும் காபி குடிக்கச் செல்லுகையில் அந்த புல்வெளியைக் காணமுடியாது ,அந்த வார்டனின் அனுதின வசவுகளைக் கேட்கத்தேவை இல்லை என்று இது போன்ற சிறு சிறு ஆனால் அழகான விஷயங்களை இழக்கும் உணர்வை மனதால் வெளிப்படுத்தாமல் இருக்கமுடியவில்லை.இந்த உணர்வு சிறிது காலத்திற்க்கு மட்டுமே இருக்கலாம்.வருங்காலத்தில் Nostalgic என்று பேசப்படுவதில் ஒன்றாகவும் மாறலாம்.ஆனால் இப்பொழுது,இந்நொடி அது ஒரு இழப்பே.ஒரு நாளைக்கே மொத்தம் 86400 தருணங்கள் இருக்கு சார்.நான்கு வருடங்கள்!, நினைத்துப் பாருங்கள் எவ்வளவு தருணங்கள் இருக்கும் என்று.<br />
<br />
</div></div>Aishwarya Govindarajanhttp://www.blogger.com/profile/11109783692001289009noreply@blogger.com0