BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, September 2, 2009

காதலிக்க மறந்தாய் காதலிக்காக...!!!

மாலை நேரம்..
மழை மேகமும் ,
மண் வாசமும்,
காதல் பேசி கரைய
நான் எண்ணியிருந்தேன் உன்னை
என் மனதில்..
ஜன்னலிடை அமர்ந்தபடி..
தொட்டு சென்ற தென்றல் சொன்னது..
மிகவும் அவனை நினையாதே
என்று !
உனக்கு விக்கல் வருமாம் ஆதலால்..
தவிர்த்தேன் ..
உன்னை நினைப்பதை,
மறக்கவில்லை..
என் மனதை அறிந்தவன் ஆயிற்றே நீ ,
செய்தாய் அங்ஙனம்..
தவிர்க்கவில்லை..
மறந்திட்டாய்,
எனை நினைப்பதை,
முற்றிலுமாய்.. 

0 comments: