BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, September 4, 2009

கடவுள் இருக்கிறாரா...??!!

சூரியன் உன் கைவசம்..
பொதி மேகம் விலக்கும்,
சக்தி உன்னில் இருந்தால்..!!
காற்றையும் தடுக்கலாம்..
வலுவுள்ள மரம் நீயானால்..!!
கடல் ஆழம் அறியலாம் ,
நங்கூரம் ஒத்த மனம் இருந்தால் ..!!
உயிர் நின்றும் உயிர் வாழ்வாய்,
பிறர் வாழ நீ விழைந்தால்..!!
இவை அனைத்தும் எட்டிடுவாய்;
உன் கனவு உயிர் பெற்றால்..
கனவுக்கு உயிர் கொடு..
உயிர் கொடுத்தால்,
நீயும் கடவுளே..!!
மனிதா..
நீயும் கடவுளே...!!

0 comments: