மண்ணில் விழும் சிறுதுளிகள்
படர்கின்றன..!!
என்னுள் நீ படர்ந்ததுபோல்
மன்வாசமென்ன,
நாணும் சிறு பெண்மையோ?!
வான் மழை நீரதனை ,
தன்பால் ஈர்க்க...!!
உன்னுள் எனை ஈர்த்ததுபோல்..!
சந்திக்கும் வேலை சிறிதாயினும்..
இரண்டறக்கலக்கிறது..!!
நீ,
நான் என்று ஆனது போல்..!!
Sunday, November 15, 2009
சிறுதுளிகள் ..
Posted by Aishwarya Govindarajan at 8:53 AM 0 comments
Tuesday, November 10, 2009
கண்ட நாள் முதல் ..!!
கண்ட நாள் முதல் ,
ஓய்வில்லை என் கண்களுக்கு
கனவிலும் தேடுகிறது உன்னை;
கண்ட நாள் முதல்,
செல்லபெயர் இடுகிறேன்
சிறு எறும்புகளுக்கு கூட ;
கண்ட நாள் முதல்,
என் நண்பர்கள்
தபால்காரர்கள் ;
கண்ட நாள் முதல்,
உன் வீட்டு ஜன்னலோரம்
தேவி தரிசனத்திற்கான என் கோவில்..;
கண்ட நாள் முதல்,
மிளகாயில் இனிப்பு
சற்றே குறைவு..;
மருத்துவனும் அறியவில்லை
இந்நோயின் நிலை
கண்ட நாள் முதல் ..
Posted by Aishwarya Govindarajan at 8:56 PM 0 comments
Thursday, November 5, 2009
விடைபெறுகிறேன் நட்பே ...!!!
எவன் சொன்னான் கவியவன்
காதல் தோல்வி கவிதை தருமென..
இதோ என் கவிதைவரி..
காதலல்ல மூடனே..
நட்பிற்காக..!!
இழந்த என் நட்பிற்காக,
கண் வழி சிறுதுளியாய்
ஆனால் இன்று மட்டும்
கரிக்கவில்லை ,
ஏனோ கசக்கிறது..
புல்வெளியில் இருவர்,
கைகோர்த்து நடக்க..
ஏனோ உன் ஞாபகம்
மனதிடையே வந்து செல்ல
கவி வரைகிறேன் நான்
விழி வழியே..
-சமர்ப்பணம் என் நட்பிற்கு..
Posted by Aishwarya Govindarajan at 6:17 AM 0 comments