கண்ட நாள் முதல் ,
ஓய்வில்லை என் கண்களுக்கு
கனவிலும் தேடுகிறது உன்னை;
கண்ட நாள் முதல்,
செல்லபெயர் இடுகிறேன்
சிறு எறும்புகளுக்கு கூட ;
கண்ட நாள் முதல்,
என் நண்பர்கள்
தபால்காரர்கள் ;
கண்ட நாள் முதல்,
உன் வீட்டு ஜன்னலோரம்
தேவி தரிசனத்திற்கான என் கோவில்..;
கண்ட நாள் முதல்,
மிளகாயில் இனிப்பு
சற்றே குறைவு..;
மருத்துவனும் அறியவில்லை
இந்நோயின் நிலை
கண்ட நாள் முதல் ..
Tuesday, November 10, 2009
கண்ட நாள் முதல் ..!!
Posted by Aishwarya Govindarajan at 8:56 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment