BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, April 14, 2010

கடவுளும் அறிவியலும்..

 இது ஆச்சரியமாகக்கூட  இருக்கலாம்.கவிதை என்னும் முகவரியில்,விவாதம்,கடவுளையும் அறிவியலையும் பற்றி.இது கடவுளின் இருப்பு இல்லாமை பற்றிய விவாதம் அன்று.மாறாக  கடவுளைப்போலவே விஞ்ஞானமும் ஒரு  மறைபொருளாக இருந்து வெளிப்படையாக நம்மை ஆக்கிரமித்து கொண்டிருப்பது பற்றி.வீட்டிலிருக்கும் வாஷிங் மெஷினுடன் பேசும் நமக்கு,பக்கத்துக்கு வீட்டு  அம்புஜம் மாமியும்,எதிர் வீட்டு மிலிட்டரி அங்கிள்-உம் ஒரு நுண்ணுயிரிகளாக மாறிவிடுகின்றனர் .மார்கழி மாதங்களில் பிள்ளையார் கோவில் வாசலில் பொங்கல் பிரசாதத்திற்க்காக நிற்கும் கும்பல் இன்று அதை ஆன்லைன-இல் முன்பதிவு  செய்து பெற்றுக்கொள்கின்றனர்.தெருவுக்கு தெரு இப்போது பகோடா பஜ்ஜி கடைகளை விட இந்த பிள்ளையார்.காம் மற்றும் வெங்கடாஜலபதி.காம்-களே அதிகம். ஒரு புத்தகத்தில் படித்ததாக நினைவு,
டாஸ்மாக்கில் இருவர் சந்தித்து நட்பாகின்றனர்.
முதலாமவர்:சார்! நீங்க எங்க இருக்கேங்க?! 

இரண்டாமவர்: இதே ஊருதான் சார்,
முதலாமவர்:அட நாணும் இதே ஊருதான்
இரண்டாமவர்:அட,எந்த ஏரியா சார் நீங்க!!?
முதலாமவர்:காவேரி நகர் ,முதல் கிராஸ் .
இரண்டாமவர் :அட நானும் அங்கேதான்,அங்கே எங்க?!
முதலாமவர்: 7-ஆம் நம்பர் வீடு 
இரண்டாமவர்:அட நானும் அங்கேதான்,அங்கே மேல் வீடா ? கீழ் வீடா?
 முதலாமவர்:கீழங்க!!
இரண்டாமவர்:அட!! நானும்,
(தூரத்தில் ஒருவர்: இந்த அப்பனும், பையனும் தண்ணிய போட்டுட்டு பன்ற ரவுசு தாங்களே?!)
தற்போது நாம் அனைவரும்  அந்த இரு குடிமகன்களின் நிலையில்தான் உள்ளோம்.அறிவியலின் படைப்பான விஞ்ஞானம் என்பது ஒரு "உட்கொள்ளப்படாத"   போதை என்று வகுக்கபட்டுவிட்டது. பிரிட்டன் -இல் முருகன் கோவிலுக்கு  எலிசபெத் ராணி  எலெக்ட்ரிக் மணியை அர்ப்பணம் செய்தார் என்பது தலைப்பு செய்தி.ஆனால் அந்த ஆண்டவனுக்கு புரியுமா? அதன் மெக்கானிசம்?!முற்காலங்களில்  கோவில் கருவறையில் வெறும் ஒற்றை விளக்கு ஏற்றப்பட்டிருக்கும்  ஆனால் இப்போது  வோல்டாஸ்  ஏசிக்கள் கருவறையில் கடவுளை விட பெரிதாக தெரிகிறது. கடவுளுக்கு ரேய்மாண்ட்ஸ்  அணிவிக்காததுதான் நம்மவர்கள் விட்டுவைத்த ஒன்று.அதற்காக நான் முற்றும் துறந்து தற்போது இமயமலைச்சாரலில் அமர்ந்து  இருக்கிறேன் என்று கூறவரவில்லை,மாறாக நம்மில் ஏன் இந்த உயிரற்றவைகளுக்கான   அடிமைத்தனம்? .உணவை வாழையிலையில் இருந்து தட்டுக்கு மாற்றம் செய்தனர்.அந்த தட்டும் இப்போது அடக்கம் செய்யப்பட்டு நமக்கு தேவையான கார்போஹைட்ரேட்களும்  புரதமும் இப்போது  மூன்று வேலைக்கு தேவையான அளவுக்கு சரிவிகிதம் செய்யப்பட்டு சாக்கலேட்கள்   போல வரத்துவங்கிவிட்டன. நம் மனிதம் கடின உழைப்பில் அலுத்து "மூன்று வேளையும் வேலை செய்யாமல் இருப்பது எப்படி ?!" என்ற புத்தகத்தை படித்ததின் விளைவே நம் விஞ்ஞானத்தின் காம்ப்ளான் வளர்ச்சி. சுஜாதா-வின் சிறுகதை ஒன்றில் 25 -ஆம்  நூற்றாண்டில்,வேற்றுக்ரகத்தில் உள்ள மனிதர்கள்  நம்  உலகில் உள்ள திமிலாவிற்க்கு  வந்து தரிசிப்பது போல் குறிப்பிட்டிருப்பார்.அதாவது தற்போதைய திருப்பதி.அது முற்றிலும் கற்பனை ஆயினும்.சிறிது சிந்திக்கும்படியாகவே தோன்றும்.எதிர்காலத்தில் என் வீட்டில், என் பேரன் பேத்திகள் மார்ஸ்-இல் "பூமியியல்-மற்றும் அம்மிக்கல் நாகரிகம்" படிக்கிறார்கள் என்று நான் சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.      


 

0 comments: