BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, May 9, 2010

எமை சுமந்த பெண்மைக்கு அர்ப்பணம்..!!

தாய்,
ஈரெழுத்து  கவிதை இவள்..
இதன் பொருள் விளக்கம் யான் அறியேன்
எனினும் எமக்கொரு ஈர்ப்பு  உண்டு
இவளிடத்தில்
மொழியற்ற  மௌனத்துடன் ஏற்படும் பந்தம் போல்..
விண்ணவனின் கற்பனைத்திறம்,
காதல்...
அவனையே உணரச்செய்தது
தாய்மை...
உணர்கிறேன் என் கற்பனையை
ஆம் தாயே..!!
யாம் காதல் செய்கிறோம் உம்மை,
எமையே எமக்கு உணர்த்தியதால்..!!
                                                               -உன் அன்பு மகள் 

0 comments: