BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, July 15, 2010

என் நாசிக்குள்,
நம் இரவின் பதிவுகள்,
உன் ஆடைகாற்று  வாசமாய்..

சாருகேசியினும் மோகமிக்க,
பொழுதுகள் அவை...

 உன் தீண்டல்களில்,

உன் கெஞ்சல்களில்,

உன் கொஞ்சல்களில்,         

என் மிஞ்சல்களுக்காய் பிறந்த
உன் வலிமைகளில்,

மோகம் ஒரு நெருப்பாய்..

நல்ல சந்தங்கள் சேர்ந்ததுபோல்,
என் இடதில் நீ நெடுக, 
உன் வலதில் நான் குறுகி,

சிறு மோகனத்தில் முடிந்தது
நம் சாருகேசி..

0 comments: