BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, September 20, 2010

நல்ல மானுடம் போல்..

ஞானிபோல் பேசும் மனம் சிலநேரம்..
நெஞ்சம் மானுடம் போல்,
ஆசை கொள்ளும் பலநேரம்..
ஆனால் பாதை அவர்தமதல்ல..
இவள் செல்லும் பாதை அவர்தமதல்ல,
கூட்டத்தினுள் மௌனம் தேடும்,
தனிமையில் இயற்கையுடன் இசைமொழியும்
இவள் மனம்,
நகைச்சுவையும் உடன் சேர்ந்த நையாண்டியும்,
காதலும் அதில் கலந்த காமமும்,
பொறாமையும் அளவற்ற கோபமும்,
சிறு சுயநலமும் சோம்பித்திரிதலும்,
இவள்..
நல்ல மானுடம் போல்..
ஆனால் செல்லும் பாதை அவர்தமதல்ல..
அவை இவள் நிரந்தரம் அல்ல..
இனமறியா ஒன்றை உணர்திடும் இவள் மனம்
தினம் தினம்..
பிறர் அடையா ஒன்றை,
இவள் புரியா ஒன்றை,
ஆன்மா, விடை தேடி...
இவள் பாதை..
புதியதாய் பிறந்ததும் அல்ல,
அந்த பாதை..  
பலர் தனியே சென்றது,
பலர் தயக்கம் கொண்டது, 
முடிவற்ற பாதையில் இவள்,
தோல்வி வெற்றி இதற்கில்லை..
அவையனைத்தும் இதை தேட..
அவையனைத்தும் இதில் அடங்க
அப்பாதை நோக்கி இவள்
ஆனால்,
இவள் பாதை அவர்தமதல்ல..
நல்ல மானுடத்ததல்ல ..

0 comments: