BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, October 7, 2010

எது கூறினும் வாதிடுவான் சிலசமயம்,
கூற்றை மறுப்பதற்கே பிறந்தவன் போல்,

அவளும் பேசவில்லை நான் ஏன் பேச?
இந்த சிறுபிள்ளை திமிருண்டு இவனிடம்

மழலையின் புரியா மந்திர சொல்போல்
இவன் பேச்சில் பொதிந்திருக்கும் ஆயிரம்

நினைத்ததை அடைந்திடும் குணமுண்டு இவனுக்கு
மிட்டாய்களுக்கு அடம்பிடிக்கும் பிஞ்சுகள்போல்..

அழகாய் புன்னகைக்கும் என் அழகு இது
அழகாயன் அவன் மோகனம் இதுவென்று தோன்றும்

கனநேரம் பேசிடுவான் சில நேரம் மௌனிப்பான்
மௌனத்தில் பல எண்ணம் அவன் நெஞ்சத்திலோடும்
தவழும் பாலம்அதன் மனதின் பல சிந்தை போல்..

பேசும் வார்த்தைகள் மெத்தனமாய் இருந்தாலும்,
அதில் தோன்றும் குழந்தை என் மனமிங்கு அறியும்..

இந்த வளர்குழந்தைக்கு..
எந்தன் சிறுகுறும்புக்கு 
நெற்றி முத்தமிட்டு மனம்,
ஆரிரரோ பாடும்..
உச்சந்தலை வருடி மனம்,
நல்லிரவு கூறும்..
நெஞ்சம் பூரித்து புன்னகைக்கும்,
எந்தன் பிள்ளையவன்..
மோகன உறக்கம் கண்டு.. 

0 comments: