BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, January 5, 2011

பல பேசும் ஓவியங்களும், 
புரியாத கிறுக்கல்களும்.. 

தனை மறந்து இசையும்,
ரசித்த பிற கலையும்..

கை மறைத்து நாணமும்,
மௌனித்து வெடித்துவிடும்
பட்டாசுக்கோபமும்..

இடையற்ற பேச்சும்,
பல நேர மௌனமும்.. 

அரவணைப்பும்,
சிறு வெறுப்பும்..

நிரந்தரம் எதுவுமற்ற, 
 என்னுள்..
நிரந்தரமானது..
அன்று, 
புன்னகையும்..
இன்று,
கண்ணீரும்..
உன்னால்....

0 comments: