BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, January 10, 2011

நீயும் நானுமாய்,
சொப்பனம் ஒன்று..
முடிவற்றதொரு சாலை..
பெருமழையில்,
ஒரு குடையில்,
அருகருகில்,

மௌனம்..
அதற்கு பொருத்தம் என, 
சிறுதுளிகள் தூது விட்டு 
எண்ணங்கள் பேசினோம்..  

இயற்கையும் நாமுமாய்,
நாழிகையில் ஓர் உலகம்..
இம்முறை கரைந்தது..
மணித்துளிகள் அல்லாது,
அருகாமை மாந்தர்கள்..
சொப்பனம் ஒன்று,
நீயும் நானுமாய்..

0 comments: