BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, January 22, 2011

படர்வில் பசுமையானால்,
தென்றலாய் நீ..
வளைந்து நெளிகிறேன்,
திமிறிப்பின் தவிக்கிறேன்,
நீ தீண்டும் நொடிகளிலே..

தெளிவில் நீரானால்,
ஆகாயம் நீ..
நான் நீயாவேன்,
என் தன்மை மாறாது.. 
நீ உனை அறிய,
உன்  நிறம் மாறும் நொடிகளிலே..

உருவில் காற்றானால்,
வலுநிலம் நீ..
தோற்கும் என் வலிமை,
உன் கரை சேறும் நொடிகளிலே...

சுடும் நெருப்பானால்,
பாயும் நீர் நீ..
இயல்புகள் எமதிருந்தாலும்,
காணாமல் போகிறேன்..
நீ அணைக்கும் நொடிகளிலே.. 

விரிந்த வானானால்,
பிழம்பு நீ..
வெட்கங்கள் செம்மையாய்..
நீ என்னுள் மறைகையிலே... 

இரண்டறக்கூடிவிட
நான்கெனும் நிஜம் பொய்த்து
ஒன்றென நிழல் கண்டோம்.
இயற்கைச்சேர்க்கையிலே... 

0 comments: