BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, January 29, 2011

எண்ணம்- சுயம்,எழுதத்தோன்றியது ..

      
                     இதனை நீண்டகாலமாக எழுதவேண்டும் என்ற எண்ணம்.இன்று ஏதோ ஒரு விவாதத்தின் பொழுது இந்த எண்ணம் மீண்டும் நினைவுக்கு வர, இதோ எழுதிவிட்டேன் .எதை பற்றி என்று கேட்பவர்களுக்கு, இதோ இந்த "எண்ணம்" என்பது பற்றிதான்!.அதற்காக நான் இங்கே  உளவியல் பற்றிப் பேசப்போவதில்லை போதுமான அளவிற்கு அதை பற்றி, படித்தவர்கள் , படிக்காத மேதைகள் என உளவியலுக்கே உச்சந்தலை காயும் அளவிற்கு அலசி ஆராய்ந்துவிட்டோம்.மாறாய் தமது எண்ணம் சரி ,தமது எண்ணம் மட்டுமே சரி என்று கூறும் இயல்பு,அதற்காக வாதிடும் நிலை அங்கே நாம் தவறவிடும் யதார்த்த நிலை.அதை விட பிறர் பற்றிய தமதான அனுமானம் சரியாக இருப்பின் ஒரு சாசிக்கப்பட்ட வரி ஒன்றை கூறிவிடுவது "யு சி! நான் அப்பவே சொன்னேன் அது ஹுமன் டெண்டேன்சி, சைக்காலஜி!".அதாவது இவர்கள் அதை அதாவது தமது எண்ணத்திலிருந்து அனைத்தையும் யதார்த்தமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்களாம். இவ்வாறும் பேசுகிறார்கள்  ,ஆனால் அது ஏனோ சுயம் என்று வந்துவிட்டால் மட்டும்  இந்த யதார்த்தம் பதார்த்தமெல்லாம் பரண் மேல் ஏறி அமர்ந்துகொண்டுவிடுகிறது, என்னையும் சேர்த்துதான்.என் சிறு வயதிலிருந்தே நானும் என் தந்தையும் வாதம் செய்யும் விதம் ஒரு உதாரணம். பல நேரங்களில் விவாதமாய் இருப்பது சிற்சில நேரங்களில் வாதமாய் மாறிவிடும்,அது சில மாதங்கள் பேசாமல் இருந்த நிலைக்கும் கொண்டு சென்றதுண்டு.அந்நிலையில்  இருவரும் பிறர் கருத்தை ஒத்துக்கொண்டு விட்டுக்கொடுத்தபாடில்லை என்றால்  அம்மா அங்கிருந்து வந்து  "அட என்ன? குழந்தைங்களா நீங்க?!!போய் வேற வேலைய பாருங்கோ ரெண்டு பேரும்!!" என்று  சபையை கலைத்துவிட்டு செல்வார்.அதாவது நடுநிலை வகிக்கும் அம்மாவின் யதார்த்தத்தனம் அங்கே முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளப்படவேண்டும்.பின்னொருநாளில் அவள் மனம் சிறிதேனும் சோகம் கொண்டிருந்தாள் அந்த யதார்த்தநிலை தவறிவிடுகிறது.ஒரு பொருள் பற்றியதான நமது பார்வை சரி, ஆனால் பிறரது தவறு என்று தோன்றும்பொழுது வாதம் செய்யாது புன்னகைத்துவிட்டு அமைதியாக இருக்கலாம் என்று தோன்றினாலும் நாம் ஏன் அதை பின்பற்றுவதில்லை.யாராவது சோகமாக இருந்தால்"இந்த உலகில் உனக்கென்று நீ மட்டும்தான் துணை!",என்பேன் (அட்வைஸ்லாம் பலமாத்தான் இருக்கு),அடியேனும் அதை பின்பற்றினாலும் அதீத சந்தோஷத்திலோ அல்லது மிகுந்த துக்கம் பொங்கிவரும் வேலையிலோ உறவுகள் நெருக்கங்கள் போன்ற சொற்கள் நிரம்பிய வரிகளே மிகவும் பிடித்துப்போகிறது.எவ்வளவுதான் யதார்த்தமாய் நாட்களை நகர்த்தினாலும் அதில் ஒரு சில மணி நேரங்களாவது அந்தத்தன்மை தகர்ந்துவிடுகிறது  இவ்வாறு நான் மட்டும் அல்ல பலர் உள்ளனர் வரிசையில்.அது ஏன் அந்த சுயத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் ,அடிக்கடி தோன்ற்வது கூட ,இந்த சரி,தவறு என்பதெல்லாம் தனியொருவன் கண்ணோட்டத்தை பொருத்தது என்று .அதாவது இந்த சுயத்தை பற்றிய எண்ணத்திற்கு ஏற்றவாறு.சரி,தவறு என்று மாற்றிக்கொள்வது. ஆடை உடுத்துவது சரி,ஆடை உடுத்தாது இருப்பது தவறு என்று அன்று தொடங்கி,உயர்ந்த ரக ஆடை உடுத்துவோர் சரி,தாழ்ந்த ரக ஆடை உடுத்துவோர் தவறு என்ற மத்தியம காலமும், (அதிக)ஆடைகள்  உடுத்துவது தவறு,(அதிக)ஆடைகள் உடுத்தாதது சரி என்று கூறும் இக்காலம் முடிய அனைத்திலும் இந்த சுயம்,சுயத்தின் எண்ணம்.யதார்த்தங்களும்,மெய் நிலைகளும்,புரிந்து  உணர்தல்களும் அங்கே எடுபடுவதில்லை.இதற்கும் நமக்கு ஒரு விடை உண்டு "மனித இயல்பு!".இவ்வாறெல்லாம் பேசிவிட்டால் அது முதிர்வடைந்த மனது என்று தனக்குள்,தனக்குத்தானே பட்டம் வேறு.இந்த எண்ணம்,வண்ணம் இதற்கெல்லாம் இந்த  மெச்சுரிட்டி என்கிற வார்த்தைதான் தான் சார் பிரச்சனையே, அனுபவமும் மெச்சுரிட்டியும் இரட்டைப்பிறவிகள் என்று நமக்கே ஒரு எண்ணம்,யோசித்துப்பார்த்தால் குழந்தையாகவே இருந்துவிட்டால் இவை எதுவுமே தேவை இல்லை.குழந்தைகளின் எண்ணப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை ஒருபோலத்தான் இருக்குமாம்,எங்கோ படித்தது. சொல்ல மறந்துவிட்டேன் மெலிதாக இப்பொழுது மடிகணினியில் ஒரு பாடல் (உண்மையாகவே )ஓடிக்கொண்டிருக்கிறது "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..குணம் குணம் அது கோவிலாகலாம்".அதனால்தான் இன்னும் இறை என்பது கண்டுபிடிக்கப்படவில்லையோ.

பி.கு: நான் கூறியதை யதார்த்தமாகவும் உளவியல் ரீதியாகவும் நோக்கினால் நூறு சதவிகிதம் சரியே ஏனென்றால் அது மனித இயல்பு  :P  :P :D .                             

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அனுபவங்கள் உள்ளவர்கள்
முதிர்ச்சி கொண்டவர்களாக
தம்மை எண்ணிக்கொள்வதாலேயே
பல பிரச்சனைகள்.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

Rachana Raghavan said...

lol... I know it is true... :)