BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, February 1, 2011

தேவம்..

இறையோன்றும் தோன்றவில்லை
இப்பெயரை நினைக்கையிலே...
வேறென்ன உதித்துவிடும்
புதியதாய் எனக்கிங்கு?
நீ நான்..
நாம் நமது..
உணர்ந்தேன்,
தேவம்.

சந்தித்தோம் ஏனோ?
அது, 
உணர்ந்ததும் புரிந்தது
தேவம்.

எண்ணம் உதித்தவை பல,
அவை நாம் பேசவும்,
உணர்ந்தது..
தேவம்.

ஊர்க்கூடி இருக்கையிலே,
உறவென அறிவித்தும்..
அதன்முன்பே உறவென்று..
மனமிரண்டும் உணர்ந்தது,
தேவம்..

முடிச்சுகள் தேவையில்லை,
உறவென்று சொல்வதற்கு..
உன்னிலையும் அவ்வாறென,
வேறு வழி உணர்த்தினாய்..
நாம் சேர்த்து நால்வராம்,
சமூகம் அதற்க்காய்..
முடிச்சிட்டுத்  துவக்கினாய்,
நல்லுறவு அறிவிப்பை..
அறிந்ததும் உணர்ந்தது ,
தேவம்..

கலவென்று பெயரிட்டு,
கலைகள் பலபுரிந்தோம்..
கலவும் ஒருகலையாய்
நமக்குத்தோன்றிடவே..
முதல் கலவு..
அதன் அழகை..
இன்றும் உணர்ந்திட,  
தேவம்..

 உள்ளொரு சிசுவும்,
வெளியொரு நீயுமாய்..
தாய்மை மாதங்கள்,
உணர்ந்தது,
தேவம்..

ஒற்றைப் பெருவிரலை,
பிஞ்சின் கரம் அணைக்க..
அழகாய் அணைத்தபடி..
உன் நெற்றி முத்தம்,
அவளுக்காய்..
என் நெற்றி நீ பதித்த..
முதல் முத்தம் எண்ணம் வர..
அந்நொடி மனம் உணர்ந்தது,
தேவம்..

அதிகரித்த இடைவெளியில்..
அன்பு, 
பெருகியது நம்மிடை..
விரல் சூப்பி சிரித்துறங்கும்,
சிறு உள்ளம் அணைத்தநொடி..
உணர்ந்தது,
தேவம்..

அழகாய் உன் பெயர்,
அவள் உச்சரிக்க..
புதுமொழி..
ஒரு இசையாய்,
உணர்ந்தது,
தேவம்..

அதில் நீ,
இதில் நான்,
சிறிது அவள்..
தளிர் அதன் உருவகம்,
நாமென்று ஆகிட..
உணர்ந்தது,
தேவம்..

பலரில் தனித்ததாய்,
பாதை அவளது..
அதற்காய் சிறுபடியாய்,
நம் கரங்கள் அவளுக்காய்..
அந்நொடி அதை நினைக்கையிலே..
உணர்ந்தது,
தேவம்.  

இயல்,
இசை,
அனைத்துமாய்..
இயல்பினும் இயல்பாய்,
இல்லம் முத்தமிழாய்..
அதில் உணர்ந்தது,
தேவம்.

ஊடல் சில இருந்தும், 
நம்மிருவர் அருகாமை..
நாம் காணும் ஓர் அமைதி,
அதில் உணர்ந்தது,
தேவம்.

காலம் காற்றாகி,
மூப்பின் முதல் படியில்,
நீயும் நானும்..
வந்த பாதை திரும்புகையில்,
நினைவுகள் பசுமரமாய்,
நினைக்கையில் உணர்ந்தது..
தேவம்.

கடல்அலை கால் தொட,
சொற்கள் மனம் தொட,
கரங்கள் கலந்தபடி..
இன்றுவரை இன்றுமுதல்,
உணர்ந்தது..
தேவம்..

அன்பென்று சொன்னதில்லை,
இன்றுவரை என்னிடம் நீ..
அன்பென்ற சொல் தாண்டி..
பல அன்பை உணர்கின்றேன்,
சொல்லாத உந்தன்,
அழகான அன்பினிலே..
உணர்ந்தது,
தேவாதி தேவம்..













2 comments:

Yaathoramani.blogspot.com said...

காதலுணர்வைச் சொல்ல எல்லோரும்
தேகம் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்க
நீங்கள் தேவம் குறித்து சிந்தித்து மிக
அழகான படைப்பைக் கொடுத்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்...

Aishwarya Govindarajan said...

நன்றி :-)