BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, February 10, 2011

ஒரு அழகிய நாளில்...

                       இன்று பொழுது அழகாகத்தான் துவங்கியது,அழகு என்பதை விட கலர்புல் என்றுதான் சொல்லவேண்டும்.நாள் ஒரு சிலருக்கு நான்கு மணியிலிருந்து தொடங்கலாம் பலருக்கு பத்து மணிக்கு,இன்னும் சிலருக்கு இரவு பன்னிரண்டு மணியிலிருந்தே.நாம் அந்த மூன்றாவது வகை."Biutiful" -திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்துக்கொண்டிருந்தபொழுது பாதியில் இணையம் துண்டித்துக்கொண்டுவிட சோகமாக இருந்த நொடி( மீண்டும் நன்றாகப் பார்க்கவேண்டும்,பார்த்தவரை ஜேவியர்-ஐ ஒற்றை வார்த்தையில் புகழவேண்டுமாயின் "awesome" என்ற வார்த்தை கூட குறைத்து மதிப்பிடலே),அறைக்குள் தோழி பிரசன்னமானாள் , கையில் சார்ட் அட்டை,ஸ்கெட்ச் பென் சகிதமாக. "ஐஷு!உன் கிரியேட்டிவிட்டி மொத்தத்தையும் வேணாலும் யூஸ் பண்ணு,எனக்கு வெள்ளிக்கிழமை இந்த சார்ட் வேணும்,சிவில்-லதான் ஒட்டப்போறேன்  ".புன்னகையுடன்,தமிழ் சரிவர பேசத்தெரிந்திராத அவளின் தமிழ் உச்சரிப்பை வியந்தபடி சரி என்று தலையாட்டினேன்.அவள் நகர்ந்தபின் இசையுடன் 10 -02 -2011 அன்றிற்க்கான பயணத்தை தொடங்கியது உயிர்,உடல் இரண்டும்."என்ன தவம் செய்தனை!!" செவிகளில்.மனம்,"இந்த இசையினை உணர நாம் மானுடம் என்ன தவம் செய்தோம்!" உண்மையிலேயே,வேறு எந்த உயிரினத்திற்காவது இந்த ஆட்ற்றல் உள்ளதா?.  விரல்,பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருந்தது  ஒரு நல்ல ஐடியாவிற்க்காக. ஆகமொத்தம் கலர்புல்லாகத் தொடங்கியது, biutiful-முழுதாய் பார்த்து முடிக்க இயலவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்.இடையே சிலதைப்பற்றிய எண்ணங்கள்,சிலரைப்பற்றியும் எண்ணங்கள்.மிக நாட்களாக அந்த சிலரது அருகாமையை  இழப்பது (missing என்பதை எவ்வாறு தமிழில் கூற!? )போன்ற எண்ணம் மீண்டும் மீண்டும் மனதில் உதிக்க,மனதின் ஒரு பாதி பேசு என்று கூறும் மறுபாதி வேண்டாம் என்று தடுக்கும்,கண்ணீர்?!! மிகவே .அதனால் பேஸ்புக்கிலும் பஸ்சிலும் "When You feel Like Missing SomeOne...!!U........ Record!!! (ஒன்றும் புரியவில்லையோ?!):-/"என பதிவிட்டுவிட்டு.மற்ற சில வேலைகளை முடித்துவிட்டு பெயருக்கு உறக்கம்,பெற்றோருடன் உரையாடல் என தொடங்கியது  சற்றே வெளிச்சம் நிரம்பிய காலைப் பொழுது."என்ன தவம் செய்தனை!" முனுமுனுப்புடன்.ப்ரொஜெக்டில் வேலைகளுக்கிடையே சங்கர் மகாதேவனும் ஸ்ரேயாவுமாய் "tere naina" எனப்பாடிக்கொண்டிருக்க test tube -ஆல்  தாளம் போட்டபடியே கேட்டாயிற்று. "dil ke taar mein hain sargam"-மனதிற்குள், எவ்வளவு அழகான வரி என்று கூறிக்கொண்டு மீண்டும் ப்ராஜெக்ட் வேலையில் மும்முரம்.sodium sulphate என்று பத்து முறை தவறாக கூறிய ஆசிரியரை பத்து முறையும் அது ammonium sulphate எனத் திருத்தி வேலையை மீண்டும் துவங்கும்போழுது "வைகைக்கரை காற்றே நில்லு" பாடல் நினைவில் வர அதை கேட்காமல் வெறுமனே முனுமுனுத்தபடி பேஸ்புக்கில் அவ்வரியை பதிவிட்டும் ஆகியது,பழக்க தோஷம் ஒன்றும் செய்ய இயலாது.இடையிடையே நண்பர்களுடன் பேச்சு,வேலை என அனைத்தையும் முடித்து அறைக்கு திரும்பினால் இரு மகிழ்ச்சியான விஷயங்கள் எனக்காய் அங்கு காத்திருந்தது.ஒன்று,நெடுநாளைக்குப் பின் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த அறைத்தோழி மற்றொன்று வேறு ஒரு தோழி அவள் மடி கணினியில் பாடச்செய்த "maathae mantramu"-ராஜாவின் இசை எப்பொழுதும் போல் சுண்டி இழுக்க "where from they found him re?"என்று என்னையும் அறியாமல் வாய் விட்டுக் கூறிவிட்டேன்.மீண்டும் கல்லூரி வகுப்பு எனச் சென்றாலும் இசையும் என் கூடவே பயணித்துக்கொண்டிருந்தது.அடுத்ததாக பாடல் வரிசையில் வந்தது இந்நாட்களில் அடிக்கடி கேட்கும் பாடலில் ஒன்று "unaru mizhiyazhakae"-சின்மயி பாடுவதில் உயிர் உள்ளது என்றால்,அப்பாடலின் இசைமட்டுமேயான பகுதியை கேட்டால் உயிரும் உடலும் என அனைத்தும் அதில் நிலைத்துவிடுகிறது.மீண்டும் அறைக்கு விஜயம் செய்ய,சில அருமையான கதைகளையும் பதிவுகளையும் படித்தாயிற்று.குரலில் தோன்றும் முதிர்ச்சியும்,இசையும் தொடர்பான ஒரு பதிவினை படிக்கையில் ஏனோ மனதிற்குள் "எல்லாரும் எஸ்.பி.பி மாதிரி வரமுடியுமா?" என நினைக்க அடுத்த வரியில் அதைப்போலவே அப்பதிவர் குறிப்பிட்டிருந்தது மிக ஆச்சரியம். ஏனோ மனம் இன்னும் குதுகலித்தது.உணவருந்தும் வேலையில் 1947-Earth "Ishwar allah"பாடல் என இன்று மட்டும் நான்கு ஐந்து பாடல்கள் தொடர்ச்சியாகப் பலமுறை கேட்டுள்ளேன்       கேட்டுள்ளேன்.அடுத்தது கொஞ்சம் கிஷோர் குமார்,இன்னும் கூட அவர்தான் மடிகணினியில் பாடிக்கொண்டிருக்கிறார் இதில் என்ன இனிமை உள்ளது எப்பொழுதும்போல் மற்றொரு  நாள் அவ்வளவே என்று பலர் கேட்கலாம்!.இதில் இனிமை என்று எனக்கும் தோன்றவில்லை மாறாய் மற்ற நாட்களை விட சற்று ஆழகானதாய் இருந்ததாக ஒரு எண்ணம்,ஏனோ!.எல்லோராலும் உணர இயலாத ஒன்றை,ஒரு சிலருக்கு ,அதாவது அதனை நம்புபவர்க்கு மட்டுமே தன் இருப்பை உணர்த்திடும் பட்டியலில் இறைக்கு அடுத்தது இசைதான்,அல்லது இசைக்கு அடுத்தது இறை என்று கூட வைத்துக்கொள்ளலாம் ;-).தன்னிலை மறந்து நம்மை அதனுடன் ஒன்றிவிடச்செய்திடும், மேஜிக் போல.மேஜிக் இந்த வார்த்தைதான் எவ்வளவு பொருந்துகிறது  இந்த இசைக்கு. முனுமுனுத்துக்கொண்டிருக்கிறேன் இப்பொழுது "tere bina zindagi se koyi shiqwaa tho nahin".                                                

0 comments: