BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, February 15, 2011

சொல்லாமல் மறைத்தது,
அன்பல்ல..
உனை வேண்டும்,
தருணத்தையும் அல்ல..
கண்ணீரை அல்ல,
புன்னகைகளை அல்ல,
வெட்கங்களை  அல்ல,
தனிமைகளை அல்ல,
சிறிதாய் உனை வெறுக்கும்
நொடிகளை அல்ல,

பாடல் ஒன்றைப் பதித்து,
பின்னூட்டமும்  இடுவாய்..
அதுவும் சேர்த்ததாய்,
இன்னும் சில பிடிக்கும்,
"விருப்பம்" எனப்பதிக்க,
ஆவல் இருந்தும்..
செய்யாமல் தவிர்த்திடுவேன்,
அது ஏனோ!
எனை மீறி "விருப்பம்"
எனப்பதிப்பேன் ஆயின்,
விருப்பத்தின் உச்சம்.
அதுவாக இருக்கும்
அவை மீது உற்ற விருப்பம்,
அதுவாக இருக்கும்.

திரை ஒன்றைப் பார்த்துவிட்டு,
மனம் போல எழுதிடுவாய்..
என் மனம் போல்..
நானும் வரி ஒன்று எழுத,
நட்பு அது சொல்லும்..
இது அவன் பாதிப்பென..
பிறகே படித்தறிந்தேன்,
உன் எழுத்தும் அவ்வாறென,
பதில் விடையேதும் கூறவில்லை..
நட்பிடத்து ,
பாதிப்பாய் அவை இருக்கட்டுமே..
அந்நட்பின் வரையில்.

அவனுக்கும் இது பிடிக்கும்
என்று நட்பு  கூறும்
எதிர்பாராச் செயல் எனதை
நோக்கிவிட்டு,   
மனம் ஏனோ
அழகாய் சிரித்துக்கொள்ளும்
வெளியே சிறிதாய் "ஓ!"
எனக்கூறிவிட்டு..

மனம் அதற்குத்தெரியும்
உன் எண்ணத்தின் நடை பற்றி
வெளியே விடையளித்ததோ
"நான் ஏதும் ஊகிக்கவில்லை!"
எண்ணம் உனது அறிந்ததும்
பிறர் அறியாத வண்ணம்
மீண்டும் புன்னகைகள்..
ஊகங்கள் ரகசியமாய்.

ஏதோ ஒரு வரி ஈர்க்க,
அவனையும் அது ஈர்க்குமென்பேன்..
மனதிடம்,
மறுநாள்,
ஈர்ப்புகள் அங்கே,
உன் விருப்பங்களாய்..    
புன்னகைகள் அவை பார்த்தபின்பு 
மறைத்த என் விருப்பங்களுடன்..
நாட்கள் பல இவ்வாறு, 
நகர்ந்ததுண்டு .

பயணம் ஓர் பாதையில்..
அதை,
சொல்லாமல் மறைத்திட்டேன்,
உன் காத்திருப்புகள்..
அப்பாதையில்,
ஓர் தேவதைக்காய், 
என்றதும்.

படித்துவிட்டால் அழித்துவிடு..
சொல்லாததாய்,
இருக்கட்டும்..

0 comments: