BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, February 25, 2011

பொய்யென நெருங்கிப் 
பைய அணைத்து ..
மெய்யதை உருக்கி,
கையடக்கச் சிலையாய்..  

அழகியல் ஆய்வில்,
அவிழ்ந்திடும் நாணம்.. 
இருளில் ஒளியாய்,
அச்சப்புன்னகைகள்..

கூடல் முடிவில்,
கூடும் கரத்தில்..
தோன்றும் நெருக்கம்,
நிலைத்திட நெடுநாள்..

காணும் கண்கள்,
ஒரு திசை நோக்கி..
கலைகள்  பற்றி,
காதல் பேசும்..

மௌனித்து தொடங்கி,
மௌனம் முடிய..
சிணுங்கல் சிறிதாய்,
நொடிகள்  களவ..

தீண்டல் தோன்றும்,  
கண்ணீர்த்துளிகள்..
கலவில் ஜனிக்கும்,
முதற்க் கரு அதுவோ..!













1 comments:

Ahamed irshad said...

க‌விதை சீண்டல் அருமை..