BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, March 6, 2011

                                                                                                                                                   
பொறு
படித்துவிடாதே இப்பொழுது..
விதியும் உனைப்போல்தான்,
சுயம் நிரந்தரமன்று..
அதனால்,
எழுதிவிட்டேன் இந்நொடியே
பொறு ,
படித்துவிடாதே இப்பொழுது...
                                                   -- நிற்க--


உன்னவளாய் இருந்தபடி,
உனை எண்ணி இருந்தபடி,
எதுவென்று யான் அறியேன்
விதியும் உனைப்போல்தான்..

உனை எண்ணி இருந்தபடி
காகிதமலர்கள் இருக்கிறது..                                        
என் நூலகத்தில் நூலொன்றாய்,
உரையாடல் முடிவொன்றில்..
உனக்காய் வாங்க முடிவெடுத்தது,
திறக்கப்படாமல்,
திறந்தால் தர இயலா..
அதுவும் நீ அறிவாய்..

நான் என்றும் போல்தான்..
அவர்களும் என்றும் போல்,
இன்றும் என் செயல்களுக்கு,
உனைவைத்து,
நியாயம் கற்பிக்கின்றனர்.. 
புன்னகைகள், 
விடை எமது..
நீ புரியாததுபோல்,
தவறாய் புரிந்ததுபோல்..
அவர்களும்,
புன்னகைதான் விடை எமது இன்றும்
முட்டாள் இவன் என்று,
நீயும் குறுக்கிக் கொண்டாய்..
உன் பார்வையினை அதனால்,
அன்று போல் இன்றும்.


நீண்டநாளைக்குப் பிறகு,
செவித்தேன் ..
உயிர் உருக்கும் இசை ஒன்றை,
என்றும் போல் இன்றும்..
அருகில் நீயில்லை,
உணர்வினைப் பகிர்ந்திட.
இன்றும் எழுதுகிறேன்,
கடிதங்களில் அதனை,
வரிகளைப் பார்த்தால்..
சிரித்திடுவாய் சில நேரம்..
ஊன் உருகலும் இருந்ததில்லை
உயிர் துளைத்தலும் இருந்ததில்லை,

புலன் அங்கு உணர்வதைப், 
பட்டென எழுதிடுவேன்,
வரிகளைப் பார்த்தால்..
சிரித்திடுவாய் சிலநேரம்..
சில இடத்தில் இருந்திருக்கும்
பெண்மை வரிகள்,
கடுமை வரிகள்,
அன்பு வரிகள்,
வரிகளைப் பார்த்தால்..
சிரித்திடுவாய் சில நேரமேனும்.

அருகிருப்பவளின்,
சரிபாதிக் கதைப்புகள்..
உன்னிடம் தான் நினைவு செல்லும்,
அவனைப் பற்றி அவள் பேசவும்.
அவள் பேசாதிருக்கையிலும்.                         

நீ ஏன் வேறு போல்,
இன்றும் அன்று போல்..
இருப்பவர்கள் கேள்விகள்
என்னைத் நோக்கியதாய்..
நீ மட்டும் அறிவாய்,
சாதாரணம் அதுவென்று..
நீ மட்டுமே அறிவாய்,
அன்று இல்லையெனினும் இன்றேனும்.

தனித்துதான் செல்கிறேன் ,
இன்றும் திரைக்கு..
எவருக்கும் தோன்றவில்லை,
என்னுள்ளம் தோன்றுவது ,
உன் மொழியில் தோன்றுவது ,
எவருக்கும் தோன்றவில்லை..
உன்னிடம் சொல்லத் தோன்றும்,
அலைபேசி ஏனோ,
விரல்களிடை மறைந்தபடி..
அன்று போல் இன்றும்..

கடற்கரை அலைமணலில்,
அமர்ந்தபடி அமைதி நொடி..
புல்வெளியில் எனக்கென்று, 
கிடைத்ததுபோல்..  
திரு உனதும்  அமைதி அதும்,
ஒன்றியதாய்..
அன்று போல் இன்றும்..

பக்கங்களை படிக்கையில்,
பிடித்தவரி கோடிடுவேன்..
பிடிக்காத செயலெனினும்,
உன்னிடம் சொல்வதற்காய்,
பேசலாம் சில நேரம்,
அவ்வரி பற்றி என்று..
சொன்னதில்லை,
சொல்லவில்லை,
அன்று போல் இன்றும்..

சில இங்கு கற்பனையே,
நிஜமாகும் நொடி வரை..

விதியும் உனைப்போல்தான்,
நிரந்தரமற்றது..
பதித்துவிட்டேன்,
இந்நொடியே.

உன்னவளாய் இருந்தபடி

கண் மூடி மாயை போல்..
காலம் நகர்ந்ததோ,
இசையினும் மாயை போல்..
தெரியவில்லை எவ்வாறென.
என்று தொடங்கின இவை?
எங்கு தொடங்கியது இது?
என் வரிகளில்தான் தேடவேண்டும்,
நம் எண்ணம் ஒன்றியதோ ..
நமக்கு அது சாதாரணம்.. 
வாழும் நொடிகள்,
இருவர் நிலையும் நாம் அறிவோம்..
அதனால் அது சாதாரணம்,
புதிதாய்த் தோன்றாது எதுவும்,
வெளியின்று பார்ப்போனுக்கோ, 
நவரசம் பொங்கிவிடும்.. 

நேரடியாய்க் கூறமாட்டாய்,
அன்பென்ற ஒன்றை,
அழகாய்த்தான் இருக்கும்..
ஏனோ அது எனக்கு..
எனக்கும் சேர்த்ததாய்,
சிறு பிஞ்சிற்க்காய் உனது அன்பு..
எனக்கோ,
சிறிது கோபமும்,
சிறிது பொறாமையும்,
சிறிது புன்னகையும் ,
சிறிது பெருமிதமும்,
திட்டங்கள் ஏதும் இல்லை..
நடப்பவை நடக்கட்டும்..
நடந்தவரை அழகியதே,
ரசிக்கின்றோம் இருவரும் அதை..
துன்பங்கள் பற்றி நான்,
விளையாட்டாய் கூறினாலும்..
பெரிதாய்த் தெரிவதில்லை,
அடுத்த நொடி அது எனக்கு..

என்றும் போல் அன்றும்..
ஏனோ அழகாய் உலகம் நமது,
முன்பு,
வரிக்கு சொந்தம்..
நீயென்று அறியாமல்,
ரசித்தும் சிரித்தும்..
அதனுடன் ஒன்றியும்..
உறவாடிச் சென்ற பலர்,
உனக்காய் என்றறிந்ததும்..
இன்னும் குதூகலித்து ,
இதில்..
ஏனோ அழகானது உலகம் நமது..
என் எழுத்தில் எனக்காய்,
சிறிதே கரம் கொடுத்தபடி..
உன் எழுத்தில் அனுமதித்தால்,
உனக்காய் அதில் வரி சேர்த்து ..
ஏனோ அழகாய் உலகம் நமது,
நாளை எவ்வாறு..
அறியேன் நான் இங்கு,
நேற்றோ எனக்கு..
அழகாய்த்தான் இருந்தது,
பதித்துவிட்டேன் இந்நொடி..
விதியும் உன் போல்தான்,
சுயம் நிரந்தரமன்று.                                          

0 comments: