BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, March 7, 2011

மனம் ஏனோ
சஞ்சலித்து..
சிறுபிள்ளைக் காரணங்கள்,  
தேவையற்ற ஒன்றெனினும்,
தேவையற்றதென அறிந்தும்,
மனம் ஏனோ சஞ்சலித்து..
அதைப்
பகிர்ந்திட உனைத்தேட
செவிக்கத்தான் நீ மறுப்பாய்..
ஏனோ இம்மக்கள், ..
தாம் ஒன்றே இவ்வுலகில் என்று ..
ஏன் இந்த நிலையோ,
புரிந்துகொள் உணர்ந்துகொள் 
என்று கூறும் நட்பு , 
புரிதலின் எல்லைகளை
தன்னுள் சுருக்கிவிடல் ஏனோ?
அவ்வாறு இல்லையெனில் இவ்வாறுதானே?
இவ்வாறுதான் பிறரும் நினைத்திருப்பர்,
கற்பிதங்கள் தனக்குத்தானே,
தான் என்ற பார்வையில் உலகினைப்
பார்பதால்..
எப்பொழுதும் மனம் போலப் பேசிவிடும்
நான் ஏனோ..
தான் என்ற வார்த்தைக்கு..
மறுமொழி கூறாமல்,
மறுமொழி கூற இயலாமல்.
சுயமாய் கற்பிதங்கள்,
இப்பொழுது..
தவறனைத்தும் எனதென்று
மனம் ஏனோ சஞ்சலித்து..
சிறுபிள்ளை காரணத்திற்க்காய்
எவ்வாறு இவளுக்கு புரியவைப்பதென்று.
மனம் ஏனோ சஞ்சலித்து.     

0 comments: