BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, April 30, 2011

புரிகோடுகள் .......



வைஷு,ரயில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே கண்களால் நோட்டம் விட்டபடி மீண்டும் அந்த காகிதத்தில் தன் பார்வையை செலுத்தினாள்.அவளுடைய கையெழுத்துதான்,என்றோ எழுதியது.பெறுனர் பகுதியும் ,அனுப்புனர் பகுதியும் எதுவும் எழுதப் படாமல். எழுத்து தொடங்குகயிலும் இறுதியிலும் மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு.பழைய கடிதம் என்பதை குறிக்கும் விதமாக அதன் மடிப்புகளில் தங்கி இருந்த கரை,எழுதுகையில் கண்ணீர் சிந்தி இருக்கலாம் என்று ஊகிக்கும் அளவிற்கு ஆங்காங்கே கரைகள் போல் களைந்து இருந்த எழுத்துக்கள். 

                                                                                                                                                     கார்த்திக்,                                             
                எப்படி இருக்கீங்க ?!.இத கேக்கற மனநிலைல  நான் இல்லேனாலும் கேட்டாகணும்,இந்த லேட்டர வேற எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல.அதுவும் நேற்று   ரச்சனா கிட்ட பேசின பிறகு ..!.உங்க ரெண்டு பேருக்கிடையில இந்த திடீர் பிரிவுக்கு நான் சொன்ன வரிகள்தான் காரணம்னு நெனச்சா ,அது மைன்ட்ல திருப்பி திருப்பி  வேவ்ஸ் மாதிரி வந்துட்டு போகறது ,கார்த்திக் !.ஒரு நல்ல பிரெண்ட்ஷிப்  நடுல இப்படி ஒரு விரிசல் விழ நான் காரணமா இருந்திருக்கேன் .ரச்சனா சொல்லிதான் நான் சொன்ன  வரிகள் இவ்ளோ தாக்கத்த ஏற்ப்படுத்திருக்கு  அப்படின்னு என்னால  உணரமுடிஞ்சுது . நான் அந்த வரிகள அங்க chat-ல  உபயோகப் படுத்தி இருக்க கூடாதுதான்.ஐ நோ  யு ஆர்  மச் மோர் சென்சிடிவ்.பட் அது ஏன் எனக்கு அங்க ஸ்ட்ரைக் ஆகாம போச்சு. ஒருத்தவங்க இப்படிதான் அப்படின்னு புரிஞ்சுக்கறது  ஒரு பெரிய விஷயமே இல்ல கார்த்திக்.ஆனா அப்படி புரிஞ்சதுக்கப்புறம் அவங்ககிட்டக்க நாம எப்படி ரியாக்ட் பண்ணறோம் அதை பொறுத்துதான் எல்லாமே இருக்கு.புரிஞ்சு என்ன பயன்,என் வரையில் எனக்கு அந்த சமயத்துல அப்படி ரியாக்ட் பண்ண தெரியலயே.. நீங்க என்கிட்டக்க அன்னிக்கு பேசி இருக்கவே கூடாது.எப்போதும் போலவே பேசாமயே போயிருந்துருக்கலாம். ஒதுக்கறது எனக்கு ஒன்னும் புதுசு கிடையாது பழக்கப் பட்ட விஷயம்தான் ஆனா அந்த நட்புக்கு அப்படி கிடையாது இல்லையா ?!கார்த்திக்.பேசாம  இருந்திருந்தா  என்கிட்டே எதையும் சொல்லி இருக்க நேர்ந்திருக்காது.
நானும் அப்படி சுபிரியாரிட்டி,இன்பிரியாரிடி-னு சொல்லி இருக்க மாட்டேன்.நீங்களும் அப்படி யோசிச்சு இருக்கும் வேண்டியதில்ல, திடீர்னு உங்க பழைய  பிரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் பேசறத நிறுத்தி இருக்க மாட்டீங்க இல்லையா.புரிஞ்சும் ரியாக்ட் பண்ண தெரியாம நான் அன்பை எதிர்பார்க்கறது தப்புதானே,எனக்கு அந்த தகுதியே இல்லைன்னு தோணுது கார்த்திக்.infact எனக்கு அன்பு செய்யத் தெரியலையோ? அப்படிங்கற மாதிரி தாட் எல்லாம்  மைன்ட்ல  வர ஆரம்பிச்சுடுத்து   கார்த்திக் .அது உண்மையாவே கூட இருக்கலாம்  தெரியல. ஆனா  அழகான ஒரு விஷயம் பாழ் படறதுக்கு எனக்கே தெரியாம நான் காரணமா இருந்துருக்கேனே ,ரொம்பவே கஷ்டமா இருக்கு,அவ சொன்னதுக்குப் பிறகு என்னால அழாம இருக்க முடியல  .லைப்ல ஒவ்வொன்னும் ஒவ்வோருத்தவங்களாவே புரிஞ்சுட்டு வளரனும் கார்த்திக்,அதனால எனக்கு இந்த அட்வைஸ் பண்றது சுத்தமா பிடிக்காது .ஆக நான் இப்போ சொல்லறத பஸ் இல்ல ட்ரைன்ல  போகறப்போ பாக்கற ஒரு பாஸ் பை  செண்டன்சா   எடுத்துக்கோங்களேன். " காதல்ங்கறது மட்டும்தான் வெளில நான் உன்னை நீயாவே விரும்பறேன்னு சொன்னாலும் 
மனசுக்குள்ள நீ எனக்காக இப்படி மாறினா நல்ல இருக்கும் அப்படி மாறினா நல்ல இருக்கும்-னு நினைக்கும்,உதாரணத்துக்கு-அழகு எனக்கு முக்கியம் இல்லை மனசதான் பாக்கறேன்னு சொன்னாலும் ,மைண்ட்ல ஏதோ ஒரு கார்னர் அந்த அழகதான் முதல்ல தேடும் .நட்பு அப்படி இல்லை ,அது நாம எப்படி இருந்தாலும்  நம்ம மனசு எப்படி இருந்தாலும் அப்படியே ஏத்துக்கறது  , கார்த்திக். பிரெண்ட்ஸ்ல  ஒருத்தருக்கு ஒரு விஷயம் நமக்கு முன்னாடியே தெரியுமா / தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்கா அதை சொல்லவே தேவை இல்லை .அப்படி நமக்கு தெரிஞ்ச விஷயத்த நமக்கு பிரெண்ட்ஸ் யாராவது சொல்லறாங்களா,சரி அப்படின்னுட்டு போயிடலாம்,எனக்கும் தெரியும்னு காட்டிக்கவேண்டிய அவசியம் இல்லை. 
ஈகோ ,அட்டிட்யுட் தாராளமா இருக்கலாம் கார்த்திக் யாருக்கிட்ட வேண்டுமானாலும் காமிக்கலாம்,நானும் அதற்கு விதி விலக்கு இல்லை,  ஆனா அதை பிரெண்ட்ஸ் கிட்டக்க காமிக்கறது   யோசிச்சு பார்த்தா ரொம்பவே  தேவை இல்லாத விஷயம்,காமிச்சா அது முதலில் பிரென்ஷிப்பே கிடையாது,என்னைப் பொருத்தவரைக்கும் .இது உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துதான் சொல்லறேன் .

take care ,
வைஷு
.


  
கடிதத்தை படித்துமுடித்ததும் ஒரு பெருமூச்சு,மீண்டும் அதை மடித்து நாட்குறிப்புப்  பக்கங்களுள் வைத்துக் கொண்டாள். ரயில் புறப்படத் தொடங்கி இருந்தது. அதிகாலையில் சென்று சேர்ந்தால் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு இல்லையெனினும் ஒரு பத்து நிமிடம் தாமதமாகவாவது சென்று சேர்ந்து விடலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.கையில் எப்பொழுதுமே தன் கூட வைத்திருக்கும் பாரதியார் கவிதைகள்.பிரித்தாள்,
விட்டுவிடுதலை ஆகி நிற்ப்பாய் ,
         இந்த சிட்டுக் குருவியைப் போலே...   

என்னும் வரிகள் சிரித்துக் கொண்டே,"சொல்லுவது எளிதடா பாரதி ,செயல்படுத்தல் மிகக் கடினம் என்றுமே". என எண்ணிக் கொண்டும் நாட்குறிப்பில் இருக்கும் அக்கடிதத்தினை பார்த்துக்கொண்டும் அவ்வரிகளைப் பாடுவதற்கு ஏதுவாய் மெட்டமைத்துக் கொண்டிருந்தாள். இடையிடையே எங்கிருந்தோ கலந்திவிடும் பழைய பாடல் வரிகளுக்கான மெட்டுகள்.சிறு வயதுப் பழக்கம்!,சுடுகாடு வரைக்குமோ?! என்று சிறிதாக தன்னைத்தானே திட்டிக் கொண்டு வரிகளிடையே கண்கள் மேய்ந்தன..
                                 மற்ற பொழுது கதை சொல்லி  
துயில் கொண்டு,

                                            பின் வைகறை முன் பாடி விழிப்புற்று ,
சுதந்திரம் என்பதன் எல்லை அதுவரைதானா? ,ஏன் அதில் ஏதோ ஒரு இடுக்கில் சுயம் என்னும் வார்த்தையும் ஒளிந்து ஒலிக்கிறது.புரிதல் திறன் அத்துடன் முடக்கி முடிச்சுப் போடப்பட்டுவிட்டதா?,எதிலுமே புரிதல் என்பதின் எல்லை ஏன் ஒரு வரையறையோடு நின்றுவிடுகிறது.அந்த எல்லையினை தாண்ட ஏன் மனதிற்கு தயக்கம்?பயம்?.தாண்டினாலும் தவறுகளில் அல்லது தவறான கோணங்களில்.புரிதல் என்ற பாதை எங்கிருந்து தோன்றியது?!.   
                                   விட்டுவிடுதலை ஆகி நிற்ப்பாய் ,
                                   இந்த சிட்டுக் குருவியைப் போலே...
முனுமுனுத்துக்கொண்டாள்.

0 comments: