BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, May 1, 2011

வளைந்து கிடந்து
வலக்கரம் நீட்டி
உந்தன் விரல் அதைத்
தீண்டத் தேடி..

கூந்தல் புரண்டபடி
அது தலையணையில் படர்ந்தபடி
முகம் புதைத்து
கரைந்திருக்க
உன் நெஞ்சத்தைத் தேடி..

சட்டெனச் சிணுங்கும் 
பாதத்துச்  சுட்டு விரல்
இதழோரம் மெலிதாய்  
புன்னகையும் மௌனமும் 
நாணமோ?
அதில் ஒளிந்திடும் மோகமோ?
நீதான் சொல்லவேண்டும்..  

 

2 comments:

JaY Reborn @ Jaes said...

// புன்னகையும் மௌனமும்
நாணமோ?
அதில் ஒளிந்திடும் மோகமோ? //

மிக அருமையான வரிகள் ஐஸ்வர்யா அவர்களே !!!!
தொடரட்டும் . . .
அன்புடன்.....
~ ஜெய்
www.kavithainila.Blogspot.com

Aishwarya Govindarajan said...

nandri j! :-)