செவிவழி பரவும் சுவாசம் நீ,
நாளம் நடமிடும் செவ்வணு நீ,
கருவிழிகொள்ளும் நாணம் நீ,
மூடிய விழி மறை பொருளும் நீ,
விரல்கள் வரையும் அலைகள் நீ,
இதயம் ஜனிக்கும் இருள் இம்சையும் நீ,
பெண் அவள் சொல்லாத சொற்கள் நீ,
ஆண் அவன் மறைத்த ஏக்கங்கள் நீ,
மழலை மனதின் புரிதல்கள் நீ ,
அண்டம் பேசும் அனைத்தும் நீ,
புலப்படாது உணர்ந்ததில் தலையாயது நீ,
நீ..
இசை..
Friday, July 15, 2011
Posted by Aishwarya Govindarajan at 8:50 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment