BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, July 24, 2011

           "நீங்க வாழ்க்கைல இது வரைக்கும் உருப்படியா என்ன சார் செஞ்சுருக்கீங்க?!".இதைத் தான் கேட்டேன்,அவரிடம்.உறவினர் வீட்டு வைபவம் ஒன்றிற்க்கு நானும் என் தந்தையும் சென்றிருக்கையில்தான் இது நிகழ்ந்தது.சிறு பிள்ளை ஒருவனின் பூனூல் வைபவம்.நெருங்கிய உறவினர்தான்,ஆனால் காலமாற்றத்திற்கேற்ப,ஆசாரம்,சூழல் என்னும் பெயரால் நாங்கள் அவர்களிடமிருந்து தூரமாகிவிட்டோம்.அந்த சிறுவன் எப்போது பிறந்தான் என்று தெரியாத அளவு தூரம்.குடும்பத் தலைவர் என்ற மட்டில் உறவுகளை எங்களுக்காய் வலுப்படுத்தித் தருவது அப்பாவின் பொறுப்பு என்று அவர் கருதியதால்,என்னையும் அவருடன் அங்கு அழைத்துச் சென்றிருந்தார்.நன்றாகத்தான் இருந்தது,இதுவரை நான் பார்த்தே இராத தூரத்து உறவினர்களும்,இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையினால் பார்க்க முடிந்திராத சில நெருங்கிய உறவினர்கள் என அனைவரையும் அங்கு சந்திக்க முடிந்தது.வயதான முதியவர்கள் முதல் நேற்று கல்லூரிப் படிப்பை முடித்த ஒருவர் என அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தோம்.இதற்க்கிடையே விழா வீட்டார்க்கு வேலைகள் இருந்ததால் அவர்களுக்கு உதவுவதற்க்கு சென்றுவிட்டேன்.ஒரு அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்த பொழுது,அப்பா நான் இதுவரை பார்த்தேயிராத யாரோ ஒரு உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார்.உன் தாத்தாவின் அத்தான் பிள்ளை என்று அப்பா கூறினார்.புன்னகைத்துவிட்டு அப்பாவின் அருகில் அமர்ந்தேன்.
அவர்,"என்னடா பண்றா உன் பொன்னு?!"
நானே பதிலளித்தேன், பயோடெக் முடிச்சுருக்கேன்,இப்பொதைக்கு ஜாப் கிடைச்சுருக்கு,கால் லெட்டர்க்கு காத்துண்டு இருக்கேன், ஃபர்தர் படிக்கனும்.
அவர் அப்பாவிடம்,"எப்போ பையன் பாக்கபோறே?!கைவசம் ஜாதகம் இருக்கு ஃபர்ஸ்ட் க்லாஸ் பையன் நாலஞ்சு பேர் இருக்கா?!,பொன்னும் பாந்தமா இருக்கா,முடிக்சுடலாம் என்ன சொல்லறே?!,
அப்பா,"அவ இஷ்டத்துக்கு விட்டுட்டோம்,படிக்கனும்னு ஆசைப்படறா!",என்றார்.
அவர்,"இல்லடா!நான் என்ன சொல்லறேன்னா?!"
நான் இடையே குறுக்கிட்டு,"இல்ல uncle நான் ஃபர்தர் ஸ்டடிஸ் பண்றதாதான் இருக்கேன்,ம்யுஸிக் எனக்கு இன்டிரஸ்ட் ஆக அதுல எதாவது செய்யனும்,வேற எதுவும் இப்போதைக்கு மைண்ட்ல இல்ல".
நான் ஏன் என்னைப் பற்றி அவரிடம் கூறினேன் என்று மனதிற்க்குள் என்னையே வைதுகொண்டேன்.
பிறகு அவரிடம் எனக்குத் தெரிந்தே இராத அவரது குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.
அடுத்தது அப்பாவின் அக்கா முறை என்று ஒருவரை சந்தித்தோம்.'என்னடா பொன்னு புடவைலாம் கட்டிண்டு வளர்ந்துட்டா?! இதுக்கு காது குத்தச்சே பார்த்தது",என்று கூறிக்கொண்டிருந்தார்.அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு 12த்து படிக்கவிருக்கும் அவர்களது பிள்ளை பற்றிய அவரது அங்கலாய்ப்புகளையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.இடையே அவர்,"கல்யான சாப்பாடு எப்படா போடபோறே உன் அக்காக்கு என்று என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு கேட்டார்.அப்பாவிற்கே உண்டான அந்த ஆர்வம் பொங்கும் சமயங்களில் அதிகப்படியாய் பேசும் இயல்பு அங்கே மீண்டும் உதித்தது "அப்படி ஏதாவதுனா,கண்டிப்பா உங்களுக்குத்தான் முதல் பத்திரிக்கை சந்தேகமே வேண்டாம்",என்று விஜய் பாணியில்,தானே பல வருடங்களுக்கு ஒருமுறை பார்க்கும் அந்த தூரத்து அக்காவிடம் ,எக்கச்சக்க பிட்டுகளை சேர்த்து போட்டுவிட்டு நகர்ந்தார்.
"கடவுளே!நான் எங்க போயி முட்டிக்கறது!",என்று மனதில் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு அவருக்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தேன்.
அடுத்து,பாட்டி வழி உறவு என்று ஒருவரை சந்திக்க நேர்ந்தது,அந்தக் குட்டிச் சிறுவனுக்கு ஒன்று விட்ட பெரியப்பா என்னும் பெயரில் அந்த மண்டபத்தையே ஒரு வழி செய்துகொண்டிருந்தார்.
"ஏன்னடா கோவிந்தா?! பொன்னு நன்னா சமைக்கறாளா,என்ன பாக்கலாமா சொல்லு?!காலாகாலத்துல இதெல்லாம் செஞ்சுடனும்",என்று. ஒருபடி மேலே சென்று என் ஜாதக விபரம் என அனைத்தையும் கேட்கத் துவங்கிவிட்டார்.எழுந்த எரிச்சலில் "நீங்க இதுவரைக்கும் வாழ்க்கைல உருப்படியா என்ன சார் செஞ்சுருக்கீங்க!".என்றேன்.சற்றும் அவர் அதை எதிர்ப்பார்க்கவில்லையோ தெரியவில்லை.
அப்பா உடனே,"ஜில்லு!,அங்க போ,அத்தை ஹெல்புக்கு கூப்பிடறா பாரு",என்று நகர்த்திவிட்டார்.நானும் நகர்ந்துவிட்டேன் ,அப்பா அவரிடம் என் ஜாதகம் பற்றிய விவரங்களை தந்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்.
"என்னடா! உன் பொன்னு இப்படி பேசறா?!" என்று கூறியது என் காதில் மெலியதாய் வந்து சேர்ந்தது.
வைபவம் முடிந்து விடைபெற்றுக் கொண்டு ரயிலிற்க்காக காத்திருந்தோம்."என்ன பாத்துடலாமா?!" என்றார் அப்பா என்னை வெறுப்பேற்றுவதற்க்காகவே.
ஏற்கனவே கோபத்தில் இருந்த நானோ "பா!சொல்லிட்டேன் கேட்டுக்கோ,இனிமே அந்த கேஸையெல்லாம் எங்கையாவது பார்த்தேன்னா உன்னோட சேர்த்து இந்த தண்டவாளத்துல தள்ளிவிட்டுடுவேன்".
தெரியாம கேட்கறேன்,சீரியஸ்லி!இவங்களலெல்லாம் வாழ்க்கைல என்ன சாதிச்சுட்டாங்கன்னு இந்த கல்யாணம்,குடும்பம்,குழந்தைங்கனு அதே லைஃப்?!.அப்பா அதற்கு பதில் அளிக்கவில்லை.பேச்சும் வேறு ஏதோ ஒன்றைப் பற்றி மாறிவிட்டது.
ஆனால்,கல்லூரிக் சென்றுவிட்டு சான்றிதழ்கள் சிலவற்றை பெற்றுக் கொண்டு வருகையில். ஒருவர் பெண் என்னைக் கேட்ட கேள்வி,வைத்தீஸ்வரன் கோவிலில் இறங்க வேண்டியவர் அந்த இடம் வரும் வரை என் வாழ்வு திருமணம் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.எப்படி இருந்தாலும் நீயும் அந்த வட்டத்தில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பது போன்ற அவரது ஏளனமான பார்வை வேறு.சென்ற வாரம் வீட்டிற்க்கு வந்திருந்த வேறு ஒரு உறவினரின் அதே போன்ற பேச்சு என மீண்டும் அந்த கேள்வி மனதுள் எழுந்தது.நமது வாழ்வை நாம் முடிவு செய்யாது நமது பெற்றோர் முடிவு செய்யாது யாரோ ஒருவர் அமர்ந்து முடிவு செய்து கொண்டிருக்கிறாரே என்ன இது என்று?!.
      ஒருவேளை திருமணம்,பிள்ளைகள் என்பதுதான் வாழ்வின் தலையாய குறிக்கோளோ?.அப்படியாயின்,"நான் டாக்டராக வேண்டும்,நான் பொறியியல் வல்லுனர் ஆக வேண்டும்",என்பது போன்று அதுவும் ஒன்று அவ்வளவுதானே.ஆனால் சிறு மாற்றம் இது பலரால் அவர்களே விரும்பியும் விரும்பாமலும் அடையப்படும் குறிக்கோள்.உன் குறிக்கோள் அதுவாயின் நான் அதை எதுவும் தடுக்கவில்லை.மாற்றிக் கொள்ளவும் சொல்லவில்லை.ஆனால் எனைப் பொருத்தவரை அது ஒரே சக்கரத்தில் உழல்வது போன்று,அபத்தம்.என் குறிக்கோள் வேறு,அதே சக்கரத்தில் தானும் சுழல்வதாயின்,தன் ஆன்மா,தன் வாழ்வு என்று ஒன்றிர்க்கு அர்த்தமே இல்லாது போய்விடும்.ஏதோ ஒரு ஆன்மாவின் குறிக்கோளை நீ சாதிக்க முற்படுகிறாய்,அவ்வளவே.தான் பிறந்ததிலிருந்து வாழ்வில் என்ன செய்தோம் என்று யோசித்தால்
1.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,பள்ளி சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.
2.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,கல்லூரி சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.    
3.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,வேலைக்குச் சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.
4.நாம் ரேஷன் கார்டில் ஒரு பெயராக இருந்தது மாறி நாம் ஒரு ரேஷன் கார்டில் தலைவர்/தலைவி என்று முன்மொழியப் பட்டிருப்போம்.
இதையேதான் 6000 சம்பளத்திற்கு வேலை செய்பவனும் செய்கிறான்.60000 சம்பளத்திற்கு வேலை செய்பவனும் செய்கிறான்.இருவருக்கும் என்ன வேறுபாடு,டி.என்.ஏ-க்களைத்தவிர.
நட்பு ஒருத்தியின் வலைப்பூவில் அவள் அன்மையில் பதிவிட்ட ஒன்றைப் படித்தேன் நேற்று,சிறு சிறு ஆசைகள்,எண்ணங்கள் என்றுதான் அதைப் படிக்கும்ச்ச்ச் எவருக்கும் முதற்கண் தோன்றும்.ஆனால் அப்படித் எண்ணும் எவருக்கேனும் அவ்வாறு சிந்திக்கத் தோன்றி இருக்குமா?!,என்பது சந்தேகமே.என் இந்த எண்ணம் பற்றி சொன்னபொழுது தோழி ஒருத்தி நீ சாதிக்க நினைப்பதை அவர்கள் சொல்வது போல் மணம் செய்துகொண்டபின் செய்யலாமே என்றால்.
ஆம் செய்யலாம்தான் ஆனால்,அவர்களதும் நமதும் எண்ணம் ஒத்ததாக இருக்கும் அல்லது அவர்களால் அதை அனுமதிக்க முடியும் எனும்பட்சத்தில் மட்டுமே,அது சாத்தியம்.
ஒரு ச்சாரிட்டி துவங்க சிறுவயதிலிருந்து ஆசை,பெயர் கூட முடிவு செய்துவிட்டேன் ஆறு மாதங்களுக்கு முன்பு,"கரு அல்லது கருவறை"என்று.ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க எண்ணம்,என சிறு சிறு விருப்பங்கள்.இதெல்லாம் நிறைவேற்ற முடியுமா?!ஒரு வட்டத்தினுள் தானும் சுழலத்துவங்கியபின்.நான் அன்று கோபப்பட்டு அந்த பெரியவரிடம் அவ்வாறு கேட்டதாகத்தான் அவரும் எண்ணி இருப்பார்,அது அவர்களது இயல்பே.ஆனால் அவராய் என்றோ தனக்குக்தானே  கேட்டுக் கொண்டிருக்கவேண்டிய கேள்விகளையே நான் கேட்டென்.முதலில் வாழ்வதற்கான அர்த்தத்தை தேடு அதில்தான் உனது இயல்பும் உள்ளது உனது இயல்பு வாழ்க்கையும் உள்ளது,திருமணம்தான் உன் வாழ்வின் அர்த்தமென்றால் அதை செய் ஆனால் அதை உன் போல் அதே எண்ணம் கொண்டவருடன் மட்டுமே செய்.நம் எண்ணப்படி நாம் வாழ வேண்டும் அதை நாம் மட்டுமே வாழ வேண்டும்,பிறர் மீது தினித்தல் தவறு என்று அனைவ்ரும் தாமாக உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.சுதந்திரம் என்ற ஒரு வார்த்தை அதில்தான் எங்கோ உள்ளது.லைஃப்னா,சும்மா இல்ல சார்!. 

0 comments: