இது மழைப் பருவம்.இப்போது நம் குரல்களுக்கிடையே நிலவும் அமைதியை,
மழைத்துளியின் சிதறல்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.இந்த மழைதான் எவ்வளவு
அழகானது, இசை போல.இசையும் இசை சார்ந்தும் தன பிள்ளைகளுக்குப் பெயர்
வைக்கின்றனர் பலர்.'மழை' என்று ஏன் எவரும் பெயர் வைப்பதில்லை?.எனக்கு
என்னவோ இசையும் ,மழையும் ஒரே பெயர் போல்தான் ஒலிக்கும் என்று தோன்றுகிறது
.இலையுதிர் காலங்களில் நான் நடந்து சென்ற அதே பாதையில் எனக்கும் உன்
நினைவுகளுக்கும் குடை பிடித்தபடி நான்.குடையின் மேல் பட்டும் படாமல்
துளிர்த்திருக்கும் அந்த மழைத்துளிகளும் உன் போல்தான்,பட்டும்
படாமல்.துளிகள் ஒவ்வொன்றும் என் சிறு சிறு உலகங்களாக.மழை நின்றது.குடைமீது
துளிர்த்திருந்த என் உலகங்களும் நழுவிச் சென்று விழுகின்றன,இலையுதிர்
காலத்துச் சருகுகளின் மேல்.
Tuesday, November 5, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment