BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, September 4, 2009

கடவுள் இருக்கிறாரா...??!!

சூரியன் உன் கைவசம்..
பொதி மேகம் விலக்கும்,
சக்தி உன்னில் இருந்தால்..!!
காற்றையும் தடுக்கலாம்..
வலுவுள்ள மரம் நீயானால்..!!
கடல் ஆழம் அறியலாம் ,
நங்கூரம் ஒத்த மனம் இருந்தால் ..!!
உயிர் நின்றும் உயிர் வாழ்வாய்,
பிறர் வாழ நீ விழைந்தால்..!!
இவை அனைத்தும் எட்டிடுவாய்;
உன் கனவு உயிர் பெற்றால்..
கனவுக்கு உயிர் கொடு..
உயிர் கொடுத்தால்,
நீயும் கடவுளே..!!
மனிதா..
நீயும் கடவுளே...!!

Wednesday, September 2, 2009

காதலிக்க மறந்தாய் காதலிக்காக...!!!

மாலை நேரம்..
மழை மேகமும் ,
மண் வாசமும்,
காதல் பேசி கரைய
நான் எண்ணியிருந்தேன் உன்னை
என் மனதில்..
ஜன்னலிடை அமர்ந்தபடி..
தொட்டு சென்ற தென்றல் சொன்னது..
மிகவும் அவனை நினையாதே
என்று !
உனக்கு விக்கல் வருமாம் ஆதலால்..
தவிர்த்தேன் ..
உன்னை நினைப்பதை,
மறக்கவில்லை..
என் மனதை அறிந்தவன் ஆயிற்றே நீ ,
செய்தாய் அங்ஙனம்..
தவிர்க்கவில்லை..
மறந்திட்டாய்,
எனை நினைப்பதை,
முற்றிலுமாய்..