BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, June 29, 2010

கடவுளர்

                       ஒரு  வாதத்தின்பொழுது  எழுந்து கேள்வி இது..“உனக்கு ரஜினி பிடிக்குமா?! ,கமல்  பிடிக்குமா ?!”.நான்  கூறிய  பதில்  “ரெண்டு  பேருமே ..”எனது  விடை  கேள்வி  கேட்டவருக்கு  ஒரு  சமாளிப்பாக  தோன்றலாம் .ஆனால்  அது  எனது  மனதில் ஆணித்தரமாக தோன்றிய ஒரு விடை.இருவரும்  அவர், அவர் வழியில் தனித்து  தோன்றுபவர்கள் .இதே  கேள்வியை  நான்  என்னை  வினவியவரிடம் திருப்பி கேட்டேன். “கமல் ஆ!!  ச்ச! எனக்கு  பிடிக்கவே  பிடிக்காது ..அவன்  படம்னாலே  அதுல  எதாவது  கன்றாவியான  சீன்  தான்  வரும் ,கமலோட  எதாவது  ஒரு  படம்  சொல்லு  மினிமம்   ஒரு  கிஸ்ஸிங் சீன்  இல்லாம?!”.அந்த  நபர்  மட்டும்  அல்ல  இந்த  தமிழகத்தில்  பலரின்  கோணத்திலும்  கமல் என்ற ஒரு பாத்திரம் அவ்வாறானதே.ஒரு  வேளை  அவரது  சொந்த  வாழ்க்கை  அதற்கு  காரணமாக  இருக்கலாம் . பெண்களை  சுற்றியே  அவரது  சொந்த  வாழ்கையின்  கருக்களம்  வெளி உலகிற்கு தோன்றுகிறது .முதல்  முறையாக  குருதி  புனல்  படம்  பார்த்த  பொழுது . பின்னிருந்து  படத்தை  பார்த்து  கொண்டிருந்த   என் பாட்டியின்  கமல்-இன்  மீதான  சரமாரி  சொல்  தாக்குதல்  இன்னமும்  என்  நினைவில்  உள்ளது.”எப்ப பாத்தாலும்  அசிங்கமா படத்துல  காமிச்சுண்டு ,அவ  கூட  இவ  கூட  சுத்தறது ..சென்சர் போர்டு  எதுக்கு  இருக்குனே தெரியலே!!”.அவள் பாவம் அக்காலத்து ஒன்பதாம் வகுப்பு, "அ" என்னும் வார்த்தையை முழுதாய் கற்கும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டவளுக்கு எந்த ஒரு பொருள் பற்றியும் குடும்பம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க பழகிவிட்டது.ஏன், கமலின்  மீதான  எனது  பார்வையும்  அவ்வாறே  இருந்தது  எனது  சிறுபிள்ளை  நாட்களில்,அப்பொழுது  எனக்கு  யோசிக்க  தோன்றியதில்லை .மாலை  நேரத்தில்  மைதானத்தில்  அமரும்பொழுது  தோன்றும்  “வெட்டி  நேர  யோசிப்புகளில் ” தோன்றியதுதான்  இங்கே  நான்  கூற  இருப்பது .பாலகுமாரன்  நாவல் -களில்  வரும்  பாத்திரங்களை  ஏற்று  ரசிப்பவர்களுக்கு  அந்த  பாத்திரங்களில்  ஒன்று  பரமக்குடி  அய்யர்வாளின்  மகனாக பிறந்ததும்  ஏன்  அதை  ஏற்க  மறுக்கின்றனர்.எனக்குள்  தோன்றிய  ஒரு  கேள்வி , நம்மில்  எத்தனை  பேர்  நாம்  வாழ்க்கை   இவ்வாறாக  அமைய  வேண்டும்   இவ்வாறாக  இருக்க  வேண்டும்  ,இவ்வாறாக  வாழ  வேண்டும்  என்று  பல  திட்டங்களை  வகுத்திருப்போம்? .விரல்  விட்டு  எண்ணி  விடலாம்?!.அது  போகிற  போக்கில் போவோம் ,நமக்கு தேவை உணவு உறக்கம் உறைவிடம் என்று எண்ணுபவரே இங்கு அதிகம்.சரி, அவ்வாறேயாயின் நாம்  எண்ணியபடி நம்மில் எத்தனை பேர் வாழ்ந்திருப்போம்?!..என்னை கேட்டால் “பூஜ்ஜியம்”  என்றுதான் சொல்லுவேன்.ஒன்றுமில்லை சார்,சாதாரண கண் தானம், அதற்கே இங்கு  தயங்குபவர் எத்தனை பேர்?!,என்  நண்பர்களில் சிலரையே  உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், “என் அம்மா  அப்பா  கிட்ட  கேட்டுட்டு  சொல்றேண்டி..” என்பர் , விடை கண்டிப்பாக “இல்லை'’ என்றுதான் இருக்கும்,அவர்களின்  பெற்றோர்  மறுத்திருப்பர் ,இவர்களுக்கு அந்த எண்ணம்  இருந்தாலும் பெட்ட்றவர்  கூறினர் என்ற  காரணத்திற்க்காக அந்த  எண்ணத்தை  ஒதுக்கி இருப்பர்!..விதிகளை மீற முடியாதவர்களிடயே ஒருவன் புது சாத்திரம் கூறினால் அது நக்கீரரின் "குற்றம் குற்றமே"க்களில் பட்டியலிடப்பட்டு விடுகின்றன.'face book' விளையாட்டுகளில் என் தோழியிடம் கேட்கப்பட்ட கேள்வி “pick out a friend of yours he/she is living life to the fullest (தன் வாழ்க்கையை நிறைவுடன் வாழும் ஒருவரை உன் நட்பு வட்டத்திலிருந்து தேர்ந்தெடு )” இந்த  கேள்விக்கு அவள் என் பெயரை பதிலாக அளித்திருந்தால், ஆனால் அந்த கேள்வியை படித்ததும் எனக்கு கமலஹாசனை பற்றிதான் எண்ணத்தோன்றியது( ஏன் என்று கேட்காதீர்கள்,என்னிடம் பதில் இல்லை)  நடிகனாக அல்ல, தன் எண்ணங்கள் படி தன் வாழ்வின் ஒவ்வொரு பாகமும் வாழும் ஒரு மனிதனாக,அந்த பாகங்களில் ஒன்று நடிப்பு,அவ்வளவே.அவ்வாறெனில்,சொந்த வாழ்க்கையில் மனைவி என்ற பந்தத்திற்கு  முக்கியத்துவம்  தராததிற்கு பெயர்தான்  கொள்கையா?!,என்ற குதர்க்கவாதிகளின்  கேள்வி  கண்டிப்பாக  எழும்,உண்மையை  சொல்லப்போனால் நம்மில் பலர்,நமக்கு  பிடித்தவர்களுக்காக நம்மையே மாற்றிக்கொண்டுதான் வாழ்கிறோமே தவிர,நமது  எண்ணமும் பிறருடயதும் ஒத்துபோகிறதா  என்று  எவரும் சிந்திப்பதில்லை.மைக்கேல் ஜாக்சன் மட்டுமே பிடித்த நான் அவளால் "ச ரி  க ம" க்களை பழகிக்கொண்டேன் என்பதும், எனக்கு ச ரி க ம க்களும் பிடிக்கும் ஆதலால் அவளுடன் பழகினேன் என்பதற்கும் முற்றிலுமே பொருள் மாறுபடும்.”Adjustment” என்ற  வார்த்தைக்கு அதிக  இடமளித்து  பழக்கப்பட்டவர்கள்  நாம்.அதனால்தான் நம்மவர்களுக்கு கமல் போன்ற நிலை  ஏற்படவில்லை.யதார்த்தமாக யோசித்தால் அன்பு,காதல் என்பது அளவற்றது,எல்லை இட முடியாதது.”உன்  பிள்ளையிடம் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும் என்று எந்த தாய்க்கும் எவரும் கட்டளை இட்டதில்லை“. அதை போன்று இதுவும் ஒன்று என்று  நான் கூறவரவில்லை,இது சற்று காமத்துடன் பின்னப்பட்டது..ஆனால் அதற்கு  ஆணையிடாதவர்கள் இதற்கு மட்டும் ஏன் கருப்பு கொடி ஏற்றுகின்றனர்.அந்த  அன்பு,காதல் என்பது நம்மை பொறுத்த வரை ஒரு லிமிடெட் சர்வீஸ்.  லிமிடெட் சர்வீஸ் மேல் மோகம் கொண்டவர்களுக்கு,அன்லிமிடெட் என்பது  நரிக்கு எட்டாத ஒரு புளிப்பு திராட்சையே.அதை புரிந்தும்,உணர்ந்தும் ஏற்க மறுக்கும் ரகம் நாம்.சற்று  யோசியுங்கள் உலகில் “first crush” என்ற வார்த்தை எதனால் வந்ததென்று? .நாட்குறிப்புகளிலும்,பிறந்த முதல் குழந்தைக்கு பெயர் இடுவதிலும் மறைமுகமாக  தோன்றும் அந்த “first crush”.இந்த மறைமுக வாழ்வை அங்கே ஒருவன் வெளி உலகிற்கு தெரியும் படி வாழ்கிறான் அவ்வளவே.நாம் நினைப்பது போல் "பெண்கள் மட்டுமே வாழப்போதும் என்று  எண்ணுபவனுக்கு,இசை,எழுத்து,கலை,நடனம்,நடிப்பு,சிந்தனை,வேதம் தேவையில்லை,அவனுக்கு ஒரு ப்ளேபாய்  புத்தக மர்லின் மன்றோ போதும்.மனித நேயம்  பற்றி  மனம் திறந்து பேச தேவையில்லை,மாறாக  மனித சதை பிண்டம் போதும் .இதையும் மீறி அவன் இ.பி.கோ 294உம் 509-இலும் போடப்படவேண்டியவன் என்று கூறுபவருக்கு,ஒரு படத்தில் நான் மிகவும் ரசித்த வசனம்,
 “I am Dishonest,because a dishonest person you can always believe to be dishonest,it’s the honest one you will never know,when they will do something incredibly stupid”.
வாழ்க்கையை இவ்வாறு என வகுத்துகொண்டான்,அவ்வாறே வாழ்கிறான்,"அட்ஜஸ்ட்மென்ட்" என்ற வார்த்தைக்கு சிறிதே இடம் கொடுத்துக்கொண்டு..இறை எனலாமா இவனை?!இவன் பாதைக்கு?!..நாமும்  அவ்வாறுதான் ,நமக்கென்று பல எண்ணங்கள்,ஆனால் வாழத்துனிவில்லை,அதனால் பத்தோடு பதினொன்றாய் நிற்கும் ஹைவேஸ் கடவுளர்களாகிவிடுகிறோம்.

Thursday, June 10, 2010

இறைக்கும் எனக்கும் இடைப்பட்ட தூரம்...

                            ஆன்மீக உணர்வு..இதை பற்றி விவரிக்க எனக்கு வயதும் இல்லை, அனுபவமும் இல்லை.ஆனால் கூட்டத்தினூடே " கோவிந்தாக்களையும்,பரலோகத்தில் இருக்கும் பரமபிதா"வையும் கடமைக்கென்று அழைப்பவர்களை  நினைக்கையில் என்னுள் தோன்றிய கேள்வி இது.சொந்த ஊர் சிதம்பரம் , சோழ மன்னர்கள் பலரால் கட்டப்பட்ட கோவில் எமது ஊரின் சிறப்பு ,இரு "ராசர்"களுக்கு பெயர் போன ஊர் ,நால்வர் பாடிய ஸ்தலம். இப்படிப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு ஏன் எனக்கு இந்த வேண்டாத கேள்விகள்?!,எனக்கும் அது தோன்றியது உண்டு .ஞாயிறுகளில் கோவில் சண்டி ஈஸ்வரரின் வருகை பதிவேட்டை நிரப்புபவர்கள் பட்டியலில் என் குடும்பமும் ஒன்று.எனக்கும் கோவிலுக்கு செல்ல பிடிக்கும்,காரணம் அதன் பிரம்மாண்டம்,கலையழகு,கோபுரவாசல் தென்றல் காற்று.அவ்வாறு  கோபுரவாசலில் அமர்ந்திருக்கையில் தம் கரங்களை குவித்தபடி வாயில் ஏதோ ஒன்றை முனுமுனுத்தபடி செல்லும் பலரை நான் கண்டுள்ளேன்.பத்து நிமிடங்களில் சென்ற அதே வேகத்தில் அவர்கள் திரும்பிவிடுவர்.உண்மையில் ஆன்மீகம்   என்பது இவர்களுக்கு ஒரு வாடிக்கை போலவே என்று நமக்கு தோன்றும்,அத்தகைய ஆன்மீகத்தில் உணர்தல் என்ற வார்த்தை கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் ஒளிவது போல் ஒளிந்துகொண்டுவிடுகிறது.கருவறையில் இருக்கும் சிலை முன் தோப்புகரனங்களும், கை மட்டும் இறையை நோக்கி,மனம் அன்றைய "சரவணா பவன் ஸ்பெஷல் மீல்ஸ்"-ல் நிலைத்திருக்க அவரையே ஒரு சில நிமிடங்கள் உற்றுநோக்குவது, "கடவுளே நான் இன்னிய பரீட்சையில எப்படியாவது பாசாகிட்டா உனக்கு தேங்கா உடைக்கறேன்" என்று கடவுளர்களையே நமது கம்பெனியில் சேர்ப்பது,"எனக்கு என் வீட்டு  பக்கத்திலேயே மாற்றலாகி வந்துட்டா  உனக்கு வெள்ளி காசு மாலை போடறேன்" என்று கலெக்டரிடம் முறையிடுவது போல விண்ணப்பம் வைப்பது.இவைதான் ஆன்மீகம் என்றால் "தம்பி நீங்க இன்னும் வளரனும்,காம்ப்ளான் குடிங்க!!" என்றுதான் சொல்லத்தோன்றும்.ஆனால் காம்ப்ளான் குடிக்கும் நானும் இதைத்தான் பின்பற்றுகிறேன்.                                                                        

          அவ்வாறெனில், "ஆன்மீக உணர்வு" என்பது என்ன?,எங்கோ படித்தது"ஆன்மீகம்-உன் ஆன்மாவை உணர்தல்" என்று அந்த புத்தகத்தில் இருந்தது.ஆனால் பிரம்மாண்டங்களையும், கலையழகையும் என்னால் ரசிக்க முடிந்ததே தவிர ஆன்மாவை என்னால் உணர முடிந்ததில்லை.அவையனைத்தும் என்னுள்ளே இருக்கும் வரலாற்றின் மீதான ஆர்வத்தைதான் தூண்டியதே தவிர வேறு எந்த உணர்வுமன்று.நாகூர் தர்காவும்,வேளாங்கண்ணி அன்னையும்,இஸ்கான் கிருஷ்ணரும்   இதற்கு விதிவிலக்கன்று.அவ்விடங்களில் எமக்கு பக்தி என்ற ஒன்று தோன்றியதில்லை என்னை நான் உணர்ந்ததும் இல்லை.ஆனால் என்னை உணர்திருக்கிறேன்..எங்கு என்று கேட்கிறீர்களா?
            சாலையில் சிறு குழந்தையை தூக்கிகொண்டு நடக்கும் சமயத்தில் எதிர்பாராவிதமாக அக்குழந்தை என் தோள் மீது சாய்ந்து உறங்க எத்தனிக்கும் தருணங்களில், சிறு புன்னகையுடன் அக்குழந்தை எனக்கு முத்தமிடுகையில்,எமக்குள் தாயன்பு என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.
           சாலையை கடக்கும்பொழுது ,அருகில் நிற்கும் முதியவரும் கடப்பதற்காக தானாகவே மெதுவாய் நடக்கும் கால்களில் ,எனக்குள் கருணை என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.
            நண்பர்களுடன் ஏற்படும் சண்டைகளையும் ,நிரந்தரப்பிரிவுகளையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தலையணையை நனைத்த தருணங்களில் ,உணர்ச்சி மிக்க என்னை .
           இசையை என் செவிக்குள் சிறைபிடித்து வைத்த நிமிடங்களில், என்னையும் அறியாது சில வரிகளை உச்சரிக்கும்பொழுது.
           மழைச்சாரல்களினுடே நடந்து செல்லுகையில், என்னுள் காதல் என்ற ஒன்று இருந்தால் அது எவ்வாறானது என்பதை.    
           நான் நோயுற்றபொழுது எமைக்கண்டு கண்ணீர் சிந்திய தந்தைக்கு தைரியம் கூறுகையில் யதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் தரும் என்னை .  
        "மனப்பாடக்கல்வி ",விதியை நாம் ஏன் மாற்றக்கூடாது ?,என்று வினவியபொழுது,எம்முள் இருக்கும் "மாற்றம் விரும்பியை".
         என் எண்ணங்களுக்கு எழுத்தாய்  உயிர் கொடுக்கும்பொழுது தோன்றும் ஆக்கம் மிக்க என்னை. 
        இன்னும் உணர்தலின் தேடல்கள் ஏராளம்.
                 இவைகளினுடே என் மனம் ஒன்றி இருத்தலை என்னால் உணரமுடிகிறது .இவ்வாறே  என்னால் அவ்வுணர்வை வர்ணிக்கவும் இயலுகிறது .என் ஆன்மாவும் ஏதோ ஒரு இனம் புரிய மாற்றத்தை அன்நோடிகளில்தான் உணருகிறது.
இது ஆன்மீகமா?.உணர்ந்தவர்கள் கூறுங்களேன்.

   ( பி.கு )நான் இரு "ராசர்"கள் என்று கூறினேன் ஒன்று நம் "நடராசர்",மற்றொன்று "கோவிந்தராசர்" .வரலாறு இதை படிக்கும் எவருக்கேனும் பிடிக்குமென்றால் நான் கேட்கப்போகும் கேள்விக்கு விடை எளிதில் அளிக்கலாம்.தற்போது அந்த கோவிந்தராசர் சன்னிதியில் கருவறையில் இருக்கும் சிலையை நீங்கள் கண்டோ,புகைப்படத்தில் பார்த்தோ இருப்பீர்கள்.ஆனால் அது உண்மையான சிலை அன்று.அப்படியாயின் உண்மைசிலை  எங்குள்ளது?அது அவ்விடத்திலிருந்து அகற்றப்படக்காரணம் என்ன? 

Wednesday, June 9, 2010

இந்த புன்னகை எதற்கு?
தென்றலின் வருகையில்,
இந்த ஆனந்தம் எதற்கு?
சிறு சந்தங்களை ரசிக்கையில்,
இந்த சிலிர்ப்புகள் எதற்கு?
உன் பெயரை சொல்லுகையில்,
இந்த நெருக்கங்கள் எதற்கு?
இடைவெளிகள் அதிகரிக்கையில்,
இந்த மௌன மொழி எதற்கு?
பால் வண்ண நிலவுடன்,
விடையை தேடுகிறேன்..
அதை உணர்ந்தும் உணராதவள்/ன் போல்..