BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, June 29, 2010

கடவுளர்

                       ஒரு  வாதத்தின்பொழுது  எழுந்து கேள்வி இது..“உனக்கு ரஜினி பிடிக்குமா?! ,கமல்  பிடிக்குமா ?!”.நான்  கூறிய  பதில்  “ரெண்டு  பேருமே ..”எனது  விடை  கேள்வி  கேட்டவருக்கு  ஒரு  சமாளிப்பாக  தோன்றலாம் .ஆனால்  அது  எனது  மனதில் ஆணித்தரமாக தோன்றிய ஒரு விடை.இருவரும்  அவர், அவர் வழியில் தனித்து  தோன்றுபவர்கள் .இதே  கேள்வியை  நான்  என்னை  வினவியவரிடம் திருப்பி கேட்டேன். “கமல் ஆ!!  ச்ச! எனக்கு  பிடிக்கவே  பிடிக்காது ..அவன்  படம்னாலே  அதுல  எதாவது  கன்றாவியான  சீன்  தான்  வரும் ,கமலோட  எதாவது  ஒரு  படம்  சொல்லு  மினிமம்   ஒரு  கிஸ்ஸிங் சீன்  இல்லாம?!”.அந்த  நபர்  மட்டும்  அல்ல  இந்த  தமிழகத்தில்  பலரின்  கோணத்திலும்  கமல் என்ற ஒரு பாத்திரம் அவ்வாறானதே.ஒரு  வேளை  அவரது  சொந்த  வாழ்க்கை  அதற்கு  காரணமாக  இருக்கலாம் . பெண்களை  சுற்றியே  அவரது  சொந்த  வாழ்கையின்  கருக்களம்  வெளி உலகிற்கு தோன்றுகிறது .முதல்  முறையாக  குருதி  புனல்  படம்  பார்த்த  பொழுது . பின்னிருந்து  படத்தை  பார்த்து  கொண்டிருந்த   என் பாட்டியின்  கமல்-இன்  மீதான  சரமாரி  சொல்  தாக்குதல்  இன்னமும்  என்  நினைவில்  உள்ளது.”எப்ப பாத்தாலும்  அசிங்கமா படத்துல  காமிச்சுண்டு ,அவ  கூட  இவ  கூட  சுத்தறது ..சென்சர் போர்டு  எதுக்கு  இருக்குனே தெரியலே!!”.அவள் பாவம் அக்காலத்து ஒன்பதாம் வகுப்பு, "அ" என்னும் வார்த்தையை முழுதாய் கற்கும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டவளுக்கு எந்த ஒரு பொருள் பற்றியும் குடும்பம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க பழகிவிட்டது.ஏன், கமலின்  மீதான  எனது  பார்வையும்  அவ்வாறே  இருந்தது  எனது  சிறுபிள்ளை  நாட்களில்,அப்பொழுது  எனக்கு  யோசிக்க  தோன்றியதில்லை .மாலை  நேரத்தில்  மைதானத்தில்  அமரும்பொழுது  தோன்றும்  “வெட்டி  நேர  யோசிப்புகளில் ” தோன்றியதுதான்  இங்கே  நான்  கூற  இருப்பது .பாலகுமாரன்  நாவல் -களில்  வரும்  பாத்திரங்களை  ஏற்று  ரசிப்பவர்களுக்கு  அந்த  பாத்திரங்களில்  ஒன்று  பரமக்குடி  அய்யர்வாளின்  மகனாக பிறந்ததும்  ஏன்  அதை  ஏற்க  மறுக்கின்றனர்.எனக்குள்  தோன்றிய  ஒரு  கேள்வி , நம்மில்  எத்தனை  பேர்  நாம்  வாழ்க்கை   இவ்வாறாக  அமைய  வேண்டும்   இவ்வாறாக  இருக்க  வேண்டும்  ,இவ்வாறாக  வாழ  வேண்டும்  என்று  பல  திட்டங்களை  வகுத்திருப்போம்? .விரல்  விட்டு  எண்ணி  விடலாம்?!.அது  போகிற  போக்கில் போவோம் ,நமக்கு தேவை உணவு உறக்கம் உறைவிடம் என்று எண்ணுபவரே இங்கு அதிகம்.சரி, அவ்வாறேயாயின் நாம்  எண்ணியபடி நம்மில் எத்தனை பேர் வாழ்ந்திருப்போம்?!..என்னை கேட்டால் “பூஜ்ஜியம்”  என்றுதான் சொல்லுவேன்.ஒன்றுமில்லை சார்,சாதாரண கண் தானம், அதற்கே இங்கு  தயங்குபவர் எத்தனை பேர்?!,என்  நண்பர்களில் சிலரையே  உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், “என் அம்மா  அப்பா  கிட்ட  கேட்டுட்டு  சொல்றேண்டி..” என்பர் , விடை கண்டிப்பாக “இல்லை'’ என்றுதான் இருக்கும்,அவர்களின்  பெற்றோர்  மறுத்திருப்பர் ,இவர்களுக்கு அந்த எண்ணம்  இருந்தாலும் பெட்ட்றவர்  கூறினர் என்ற  காரணத்திற்க்காக அந்த  எண்ணத்தை  ஒதுக்கி இருப்பர்!..விதிகளை மீற முடியாதவர்களிடயே ஒருவன் புது சாத்திரம் கூறினால் அது நக்கீரரின் "குற்றம் குற்றமே"க்களில் பட்டியலிடப்பட்டு விடுகின்றன.'face book' விளையாட்டுகளில் என் தோழியிடம் கேட்கப்பட்ட கேள்வி “pick out a friend of yours he/she is living life to the fullest (தன் வாழ்க்கையை நிறைவுடன் வாழும் ஒருவரை உன் நட்பு வட்டத்திலிருந்து தேர்ந்தெடு )” இந்த  கேள்விக்கு அவள் என் பெயரை பதிலாக அளித்திருந்தால், ஆனால் அந்த கேள்வியை படித்ததும் எனக்கு கமலஹாசனை பற்றிதான் எண்ணத்தோன்றியது( ஏன் என்று கேட்காதீர்கள்,என்னிடம் பதில் இல்லை)  நடிகனாக அல்ல, தன் எண்ணங்கள் படி தன் வாழ்வின் ஒவ்வொரு பாகமும் வாழும் ஒரு மனிதனாக,அந்த பாகங்களில் ஒன்று நடிப்பு,அவ்வளவே.அவ்வாறெனில்,சொந்த வாழ்க்கையில் மனைவி என்ற பந்தத்திற்கு  முக்கியத்துவம்  தராததிற்கு பெயர்தான்  கொள்கையா?!,என்ற குதர்க்கவாதிகளின்  கேள்வி  கண்டிப்பாக  எழும்,உண்மையை  சொல்லப்போனால் நம்மில் பலர்,நமக்கு  பிடித்தவர்களுக்காக நம்மையே மாற்றிக்கொண்டுதான் வாழ்கிறோமே தவிர,நமது  எண்ணமும் பிறருடயதும் ஒத்துபோகிறதா  என்று  எவரும் சிந்திப்பதில்லை.மைக்கேல் ஜாக்சன் மட்டுமே பிடித்த நான் அவளால் "ச ரி  க ம" க்களை பழகிக்கொண்டேன் என்பதும், எனக்கு ச ரி க ம க்களும் பிடிக்கும் ஆதலால் அவளுடன் பழகினேன் என்பதற்கும் முற்றிலுமே பொருள் மாறுபடும்.”Adjustment” என்ற  வார்த்தைக்கு அதிக  இடமளித்து  பழக்கப்பட்டவர்கள்  நாம்.அதனால்தான் நம்மவர்களுக்கு கமல் போன்ற நிலை  ஏற்படவில்லை.யதார்த்தமாக யோசித்தால் அன்பு,காதல் என்பது அளவற்றது,எல்லை இட முடியாதது.”உன்  பிள்ளையிடம் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும் என்று எந்த தாய்க்கும் எவரும் கட்டளை இட்டதில்லை“. அதை போன்று இதுவும் ஒன்று என்று  நான் கூறவரவில்லை,இது சற்று காமத்துடன் பின்னப்பட்டது..ஆனால் அதற்கு  ஆணையிடாதவர்கள் இதற்கு மட்டும் ஏன் கருப்பு கொடி ஏற்றுகின்றனர்.அந்த  அன்பு,காதல் என்பது நம்மை பொறுத்த வரை ஒரு லிமிடெட் சர்வீஸ்.  லிமிடெட் சர்வீஸ் மேல் மோகம் கொண்டவர்களுக்கு,அன்லிமிடெட் என்பது  நரிக்கு எட்டாத ஒரு புளிப்பு திராட்சையே.அதை புரிந்தும்,உணர்ந்தும் ஏற்க மறுக்கும் ரகம் நாம்.சற்று  யோசியுங்கள் உலகில் “first crush” என்ற வார்த்தை எதனால் வந்ததென்று? .நாட்குறிப்புகளிலும்,பிறந்த முதல் குழந்தைக்கு பெயர் இடுவதிலும் மறைமுகமாக  தோன்றும் அந்த “first crush”.இந்த மறைமுக வாழ்வை அங்கே ஒருவன் வெளி உலகிற்கு தெரியும் படி வாழ்கிறான் அவ்வளவே.நாம் நினைப்பது போல் "பெண்கள் மட்டுமே வாழப்போதும் என்று  எண்ணுபவனுக்கு,இசை,எழுத்து,கலை,நடனம்,நடிப்பு,சிந்தனை,வேதம் தேவையில்லை,அவனுக்கு ஒரு ப்ளேபாய்  புத்தக மர்லின் மன்றோ போதும்.மனித நேயம்  பற்றி  மனம் திறந்து பேச தேவையில்லை,மாறாக  மனித சதை பிண்டம் போதும் .இதையும் மீறி அவன் இ.பி.கோ 294உம் 509-இலும் போடப்படவேண்டியவன் என்று கூறுபவருக்கு,ஒரு படத்தில் நான் மிகவும் ரசித்த வசனம்,
 “I am Dishonest,because a dishonest person you can always believe to be dishonest,it’s the honest one you will never know,when they will do something incredibly stupid”.
வாழ்க்கையை இவ்வாறு என வகுத்துகொண்டான்,அவ்வாறே வாழ்கிறான்,"அட்ஜஸ்ட்மென்ட்" என்ற வார்த்தைக்கு சிறிதே இடம் கொடுத்துக்கொண்டு..இறை எனலாமா இவனை?!இவன் பாதைக்கு?!..நாமும்  அவ்வாறுதான் ,நமக்கென்று பல எண்ணங்கள்,ஆனால் வாழத்துனிவில்லை,அதனால் பத்தோடு பதினொன்றாய் நிற்கும் ஹைவேஸ் கடவுளர்களாகிவிடுகிறோம்.

1 comments:

Unknown said...

"to speak their heart" is not everyone's ability for that i will also appreciate kamal but my idea is very simple, he has his right to express his views unless it affects someone else and people have their right to criticize him because the crude ideas that are planted in the late two centuries regarding these things the idea of morality that eludes reality is so strong and has deep roots....it takes time...