BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, February 11, 2010

சிம்போனிகளின் சங்கமத்தில்...!!

என்ன மாயம் இது, 
காற்றில் விரல்கள் சிம்போனி இசைக்க..
வைரவரிக்கவிஞன் சிலைவடித்த வரிகளுக்கு..
உயிரோட்டமாய் நீயும் நானும்..!!
கண்டது ஓர் கனவாகி,
செல்லமாய்  எனையே  நான் தட்டிக்கொள்ள...
இதழோரம் வளையும்
அந்த சிறுஅசைவு,
இவள் என்ன பித்தோ?
என ஐயமுற... 
நடனம் புரிகிறேன் நான்
கனவுலகில் நீ மீட்டிய
நரம்பிசைக்கு...!!!