BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, January 3, 2011

மழைக்காலச்சிதறல்கள்,
சில்லென்று சாளரத்தை  
தொட்டுவிட்டு சரிந்தோட...
புத்தகத்து நடுப்பக்கமாய், 
உனக்குள் நான் குறுகிய   
நம் ஜன்னலோரங்கள்..
வலுநரம்புக்கரங்களவை, 
விரல்களதை களைந்தபடி
சிறிதாய் பருகல்கள்..
அரைக்கோப்பை காபி தனை,
சுவைக்கும் சிறுநொடியில்
எண்ணங்கள் பலதோடும்,
இருவர் எண்ணமதில்...
சிறுதுளிகள் வெறித்தபடி,
விழிகள் எனதும்..
விரல்களதை வெறித்தபடி,
உனதும்..
நிலவும் அமைதிதனை..
மறைவாய் தோற்கடிக்கும்,
திமிர் தொலைக்கும் தற்காலிகத்தில்.. 
மனதோடும் எண்ணங்கள்,
ஏனோ முகம் பார்க்க..
திரும்பி உனை நோக்க,
ஏதோ உணர்ந்தது போல்..
சட்டென்று எதிர்பாரா,
உன்,
முன்னெற்றி முத்தங்கள்..
அதில்,
சரிந்தே மார் முகம் புதைக்கும்,
திமிர் தொலைக்கும் தருணங்கள்...
நம் திமிர் தொலைக்கும்,
தற்காலிகத்தருணங்கள்...

0 comments: