BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, November 5, 2013

நீ! நான்! நிமிடங்கள்..-1

இந்த இயற்கையின் ஒவ்வொரு பருவமும்  தன் துவக்கத்தில் ஏதோ ஒன்றை உடன் அழைத்து வருகிறது,முந்தைய பருவத்தின் தேய்பிறையில் மறைந்த உன் நினைவுகள் மீண்டும் வளர்ந்தபடியாய்,இதோ இந்த இலையுதிர் காலத்தின் சாலைகளில் கீழே உதிர்ந்து கிடக்கும் சருகுகளின் மெல்லிய உரசல்கள்,சில நேரங்களில் நம் பேச்சுகளிடையே நிலவிய மௌனங்களும் இவ்வாறுதான் இருந்தன. ஆனால் அது என்ன சட்டென இலைகள் வெவ்வேறு திசை நோக்கி நகர அங்கு ஒரு சஞ்சலம் மிக்க அமைதி நிலவுவது ஏன்?.இந்த இலையுதிர்வுகளுக்கு நடுவே அங்காங்கே முகம் கவனிக்கபடாத மனிதர்களின் குரல்களும் ஒலிக்கின்றது.எனோ உன்னைப் பற்றிய சிந்தனைகள் அவர்களது குரல்களையும் கவனிக்கத் தவிர்க்கிறது.அந்த குரல்களுக்கும் என் சிந்தனைகளுக்கும் இடையேதான் எங்கோ தொக்கி நிற்கிறது சிறு அமைதியும்.விளக்கமளிக்க முடியாத கேள்விகள் போல் விவரிக்க முடியாத இந்த அமைதி.அந்த அமைதியை தாங்கியபடி நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,இந்த சாலையில் என் கண்முன்னே சருகுகள் உதிர்ந்தபடி.  

0 comments: