வள்ளுவமும் வால்மிகியும்
புரிந்த எனக்கு
புரியவில்லை
நட்பிலக்கியம்...
எனை அறியாத
பீத்தோவனை
பலமுறை புகழ்ந்தேன்,
புகழத்தெரியவில்லை எனக்கு,
உனது கடைசிபக்க கிறுக்கல்களை.
கடவுளிசமும் மார்க்சிசமும்
புலப்பட்ட எனக்கு
புலப்படவில்லை,
உனது அன்பீசம்.
உயிரற்ற லட்சிய குதிரைகளை விவரித்த நான்
கேட்டதில்லை
உன் நாய்குட்டியின்,
நிலை பற்றி..
இருப்பினும் ஏன் இந்த கரிசனம் உனக்கு
ஒருவேளை இதுதான்
நட்பீசத்தின் நியதியோ..
மனமுவந்து செய்கிறாய்
பலனைஎதிர்பாராமல்..
திருப்பிட மறுக்கிறேன்
அது எனக்கு கடமையாய் தெரிவதால்..
புரியவில்லை எனக்கு
நட்பிலக்கியம்.. !!!
Thursday, October 29, 2009
நட்பீசம்
Posted by Aishwarya Govindarajan at 4:24 AM 0 comments Links to this post
Sunday, October 25, 2009
தனிமை எனது உறவு..
Posted by Aishwarya Govindarajan at 4:36 AM 0 comments Links to this post
Wednesday, October 21, 2009
தனித்துவம் நீ
உனக்கென்று ஒரு செயல்,
உனக்கென்று ஒரு மனம்,
உனக்கென்று ஒரு குணம்,
தனித்துவம் ஆகிறாய்
இதனால்..
அரைக்கோப்பை காபி,
கூட்டநேரிசலுடன் கூடிய
அதிநவீனப்பேருந்து பயணம்,
சிறுகவள மதியசோறு ,
இன்விசிபில் பவர்களை உள்ளதென்று நம்பும்
பல்லாயிரத்தில் ஒருத்தி,
என்னை போல்...
ஆனால்,
நட்பு எனும் ஒரு சொல் காட்டுகிறது
உனை எனக்கு
தனித்துவமாய்..!!!
->happieeeeee b'day charu ;)
Posted by Aishwarya Govindarajan at 9:30 AM 0 comments Links to this post
Friday, October 9, 2009
நானுமென்ன பாரதியோ
உலகம் உணராததால் ,
அன்று..
காணி நிலம் பாடியவன்,
மண் மறைந்த மழைத்துளியாய்
மக்கிப்போனான்..!!
உறவுகள் உணராததால்,
இன்று..
கடல்மனர்க் கானல் நீராய்
மறைந்து போகிறேன் நானும்..
நானுமென்ன,
தற்கால பாரதியோ...!!!
Posted by Aishwarya Govindarajan at 10:48 AM 0 comments Links to this post
Labels: fall