BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, December 12, 2009

இசைத்தகடு..


உலகை வசியமிட்டவள்
உனக்குள் இன்று அடிமையாய்..
சுதந்திரம் இன்றி.. 
எனினும்,
நீ தீண்டவே  அவள் இசைக்கிறாள்..!!

அறுபது வரை.. !!

இதோ அறுபது
ஆனால்,
கரை தொடும் அலைக்கு
ஏது எண்ணிக்கை
 சின்ன குழந்தைகள் அல்ல,
சிலைகளும் கூறும் உன் பெயரை
சூரியனுக்கு பிரதி இல்லை
உன் வாய் பிறக்கும் சொற்களுக்கும் கூட
சுகாயின் அதிவேகம்
உன் நடை வேகத்துக்கு  தலைவணங்கும்
ஓய்விற்கு எதிர்ச்சொல் உன் உழைப்பு
இரும்புதோல் போர்த்த எந்திரன் நீ.. 
ஆம்..!!
மனிதம் மிக மிக்க எந்திரன் நீ


->பிறந்தநாள் நல வாழ்த்துக்கள்