BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, October 9, 2010

நீயற்ற என் நொடிகள் ..

காபிக்கள்...
எனக்கான,
உன் முத்தங்களாய்

என் எழுத்துக்கள்..
உன்னுடன்,
நேரிடை எண்ணப்பகிர்தல்

லயித்திருக்கும் இசைக்கணங்கள் 
என் இறுதிவரை.. 
எனக்குள் ஒன்றிவிட்டாய்..
நீயும் அவ்வாறே..

உன்னால்..
என்னின்று பிறக்கும் கவி வரிகள்,
நமக்காய்..
நமதான பிள்ளைகள்.. 

அனைத்தும் கலந்த இயற்கை வாசம்,
நீயறியா உன்வாசம்..
உன் அருகாமை..

எனை வருடும் தென்றல்,
நீ  ஸ்பரிசிக்கும் நொடிகள்.. 

என்னுள் இறங்கும் மழைத்துளிகள்,
உன் காமக்கணங்கள்..

வாதிடும் தருணம்,
உன்னை வெறுப்பேற்றும் நொடிகள்..

தலையணை ஈரங்கள்,
உன் மடி சாய்ந்து கண்ணீர்..
நீ அரவணைக்காவிடினும்.. 

நட்பிற்கான அக்கறையில் ,
நீ எந்தன் குழந்தையடா..

என்னிலிருந்து உந்தன் வெளிப்பாடு
என் குரலாய்..
என் அலைபேசி சிணுங்கல்களில்,    
உன் பெயர்..


விரல் தீட்டும் ஓவியங்கள்
உன் மன வண்ணங்கள்..

என் சிரிப்புகள்,
நம் மகிழ்ச்சிகள்.. 

என் கண்ணீர்த்துளிகள்,
நம்மிடை சிறு சண்டைகள்..

என் குறும்புகள்,
உனதருகே சிறு பிள்ளையாய்..

என் புத்தகங்கள்...
நீ அறியாது,
உனை வியக்கும் நான்.

என் நட்புகள்  வட்டாரம்,
நாம் நம் குடும்பத்துடன்..

இசைக்கும் வரிகள்,
நம் வாழ்க்கை..   

வாழ்கிறேன்,
நீ அறியாமல்..
உன்னுடன் நான்.

நீயற்ற என் நொடிகள்..
தலைப்பு பொய்த்ததோ?!

0 comments: