BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, October 16, 2010

இசை..
வியக்கின்றோம் 
உருவற்ற, 
அதன் வடிவை..
என்ன ?
உனக்கும் எனக்குமான, 
நமது மறைமுக அன்போ?!       


உணர்கின்றோம் அதனை,  
நாடி நரம்புகளினூடே.. 
என்ன? 
நாம் இணையும் தருணங்களோ?!  


ரசிக்கின்றோம் 
அதன் நடையை.. 
இருவருமாய்,  
என்ன? 
நம் மகவோ? 

இன்னும் பல உண்டு இவளுள்ளே..
ஆழ்கடல் ஆழம்தாண்டி, 

என்ன?
இதுதான், 
வியத்தலும்..
உணர்தலும்.. 
ரசித்தலும் கடந்து,  
பல நிறைந்த.. 
நம் வாழ்க்கையோ?!

0 comments: