BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, January 18, 2012

காத்தோட தூத்தலப் போல..

                உலக அளவில் கொலவெறியை வெறியோடு ரசித்துக்கொண்டிருப்பவர்களிடையே ,அதே உலகில் அதே வெறி கருவான நாட்டில் உள்ள அதே ஊரில் அக்கொலையை வெவ்வேறு கொலைகளத்தில் வெவ்வேறு ஆயுதங்களுடன் நிகழ்த்தியவர்களிடையே அமைதி தேடி அமர்ந்தபோது இந்த இரு பாடல்களும் கிடைத்தன.அவ்வாறு கேட்டுக்கொண்டிருந்த ஒரு விடுமுறை நாள் மதியத்தில் அருகில் வந்து அமர்ந்தான் என் குட்டித் தம்பி.எப்போதும் அவனைத் தூங்க வைப்பதற்காக அவனுக்குப் பிடித்த பாடல்வரிகளை முனுமுனுப்பது வழக்கம்.இல்லையெனில், ஐபாடின்  செவிப்பொறிகளை நான் ஒன்றும் அவன் ஒன்றுமாக காதினில் அணிந்துகொண்டு உறங்குவதும் உண்டு.அன்று மதியம் நான் கேட்டுக்கொண்டிருக்க எதேச்சையாக அவனாகவே காதினில் ஒரு பக்கத்துச் செவிப்பொறியை எடுத்து அணிந்துகொண்டு  கேட்கத்துவங்கினான்.அன்றிலிருந்து இரவு நேரங்களில் பெரும்பாலும் இவ்விருபாடல்கள்தான் அவனுக்கு "ஆரிராரோ!".நான் இங்கு ஒரு பக்கம் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்க பின்னிரவு வாக்கில் அவன் பக்கம் நோக்கினால் அந்த பிஞ்சுக் கரத்தில் இந்த ஐபாடினை கரத்தில் அடக்கமாய் வைத்தபடி உறங்கிவிட்டிருப்பான்.கேட்டபொழுதுகளில் அவனுக்கு ஒரு சில வரிகள் கற்றுத்தர அழகாய் பாடவும் முயற்சிக்கிறான் மழலைத்தமிழில்.அந்த மழலையின் தமிழ் கூட காற்றோடு
தூறலைப் போலத்தான் இருக்கின்றது  பாடிக் கேட்கும் ஒவ்வொரு முறையும்.  மனதிற்கு மகிழ்ச்சி தரும் குளுமை,காற்றாலா? நீர்த்தூறலினாலா?! என்பது போல. அழகு,மழலையாலா?! அல்லது அந்த பாடல்களினாலா?!  எனப்புரியாமல்.
  

0 comments: