BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, January 28, 2012

முற்றில் பாதை..

முற்றற்று இருக்கலாம், 
தொடுதல் தீண்டலன்றி,
கதை பிறக்கும் கணங்கள்.
விழிமை மலர,
செவிமடுத்த சேதிகள்.

பேச்சற்ற பொழுதில்,
பாடலாய்,
உரை நிகழ்வாய்,
தமிழ் வரியாய்,
நீளம் கொள்ளும்
நம்மிடை இழைகள்.

முற்றற்று இருக்கலாம்,
அப்புறம் என்று சொல்லி,
அக்கம்பக்கம் பார்க்கையில்,
நமக்காய் கிடைத்துவிடும்
பேசுபொருள்.

முற்றற்று இருக்கலாம்,
வயலின் தந்திகளை,
இசைக்காய் கரம் இசைத்திருக்க,
இதழோரம் மென்னகைத்து,
காதலின் மேல் எழும் காதல்.

முற்றற்று இருக்கலாம்,
நீயும் நானும்,
நமது என்றான எதுவும்.