BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, February 1, 2012

கண்டேன் கண்டேன்..

நீண்ட நெடுஞ்சாலை இல்லை,
பூத்திருக்கும் கிளைகள் இல்லை,
செவியனைக்கும் அமைதி இல்லை,
கண்டதெல்லாம் 
பல உருவம்,
பல நிறங்கள்,
இரயிலடியின் சலசலப்பு ,
இருப்பினும் அதில் கண்டேன்
நிறமொத்த கரம் இரண்டில்,
பிணைவு மொழியை.  
அவன் நோக்கி அவள் நிமிர்ந்தும்,
அவள் பார்த்து அவன் சாய்ந்தும்,
புன்னகை மட்டும் முகம் பூக்க,
பேசின யாவும் கரங்கள் மட்டுமே.
இல்பொருளாய் அங்கு கண்டேன்,
நெடுஞ்சாலையும்,
பூமரமும்,
கரங்கள் நமதும்,
காதல் அதிலும்.

1 comments:

SowmiyaNarayanan said...

வாழ்த்துக்கள்...

முடிந்தால் என்ன வலைப்பதிவை பார்க்கவும்\
WWW.SOWMI-
KATTRADHUTAMIL.BLOGSPOT.COM.