BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, May 3, 2010

அவன் ,அவள், ஆனால்... அது?!!


 மனிதன் தசையுள்ள எந்திரம் என்று ஆன இவ்வுலகில் காதல் என்பது வெறும் எஸ்.எம்.எஸ்-களிலும் ,"  ஐ லவ் யு செல்லம்"-களிலும் ,ஏர்செல், ஏர்டெல் நிறுவனங்களை இரவு பத்து மணிக்கு மேல் கடின உழைப்பாளிகளாக ஆக்குவதை மட்டுமே வரையரையாகக்கொண்டுள்ளது,இரண்டு நாள் பார்த்து பேசியதும், மூன்றாம் நாள் "டியர்"-களிலும்,நான்கு நாட்களில் இரு கோப்பை தேநீரும் ,இரண்டு வாரங்களில் ஒரு பிளேட் பாவ் பாஜிக்களாக மாறி ,நான்கே வாரங்களில் "சற்றே பெரிய சிறுகதை" போல முடிந்துவிடுகிறது.வளர்ந்து வரும் வளை உலகம் தரும் அறிமுகங்களும் சில நேரங்களில்  இது போன்ற சிறுகதை காதல்களாகவே முடிகின்றன.கண்ணோடு கண் நோக்கிய அக்காலம் போய் ,செல்லோடு செல் நோக்கி நோக்கியாகளிலேயே  சுபம் போடப்பட்டுவிடுகிறது.கடலோர மணல்களை ஆக்கிரமிக்கும் அனைவரையும் நான் இதற்காக சாடவில்லை.ஆனால் காரணம்,மனிதனின் மனோதத்துவரீதியாக பார்த்தால் ,தனிமை(யும்) ஒரு முக்கிய காரணமாக தோன்றுகிறது.அவர்கள் காதல் என்பதன் பல்வேறு பரிமாணங்களை மறந்து வெறும்  "ஹார்மோன்" கடவுளர்களை நோக்கியே கடிவாளமிட்ட குதிரை போல் பயணிக்கத்துவங்கிவிடுகின்றனர்.
                      எம் தந்தையுடன் நிகழ்த்திய சிறு விவாதம் இது ."தனிமையும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது என் வாதம்.என் தந்தை ஒரு உதாரணத்தை கூறி அவ்வாறில்லை  என மறுத்தார்.ஆனால் மனிதனின் மனம் என்பது அவன் வாழும் சூழல்,சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மிகவும் மாறும் தன்மையது."அமெரிக்காவில் இருப்பவன் எவனும் வெள்ளையர் பெண்ணுடன் வந்து பெற்றோர் காலில் விழுவதில்லை,அதே சமயம் சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் பெற்றோரை பிரிந்து வேலை செய்பவன் உத்தமனும் இல்லை" என்பது அவர் கூற்று.ஒரு வேளை அந்த "அமெரிக்க எவனி"ன் வாழும் சூழலை அறிந்திருந்தால் இதற்கு என்னால் பதிலளித்திருக்க முடிந்திருக்கலாம்.ஆனால் அமெரிக்காவில் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தால் அவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாய சட்டம் மட்டும் இல்லை என்பது யாம் அறிந்ததே.
                தனிமையை ரசிப்பவர்களை இந்த ஈர்ப்பு நோய் பெரிதும் பாதிப்பதில்லை மாறாக அந்த சூழலுக்கு புதிதாக தள்ளப்பட்டவர்களுக்கு பெற்றொரிடம் இருந்த நெருக்கமும்,நட்பின்  நினைவுகளும் ஒரு மனோரீதியான அழுத்தத்தை தருகிறது நாளடைவில் அந்த அழுத்தம் தாங்காமல் உறவுகளிடம்  இருக்கும் அந்த நூலிழை பந்தம் பலவீனமடைகிறது.இந்நிலையில் இந்த தனிமை அவர்களை பெரிதும் மாற்ற வாய்ப்புகள் ஏராளம்.மற்ற ஒரு பிரிவு அதாவது "பெற்றோருடன் இருந்தும்.." என்ற பிரிவை  சார்பவர்கள்  .இவர்களின் மனநிலைக்கு பல காரணங்களை கூறலாம்.பெற்றோரிடையே  ஏற்படும் சண்டை சச்சரவு,இந்நிலையில் வாழ்க்கையையே வெறுக்கத்துவங்கும் இளைஞருக்கு சிறு மரம் தரும் காற்று கூட ஈர்ப்பயே ஏற்ப்படுத்தும். பழகப்பழக பாலும் புளிக்கும் என்பதில் ஒரு சிலர் அடங்குகிறார்கள்,என்னதான் தந்தையுடன் தோள் மேல் தோள் போட்டு நடக்கும் பிள்ளையாக இருந்தாலும்.ஒருசிலவற்றை தமது எதிர்பாலிடம் கூறும் திருப்தி அவர்களுக்கு  தம் பெற்றொரிடம் கூறும்போது வருவதில்லை.அது ஏன் என்று என்னிடம் கேட்டால் "கடலின் ஆழத்தை அறிந்து வா" என்று கூறுவேன்.மூன்றாவது,அவர்களின் பெற்றோரே ஒரு "அலைகள் ஓய்வதில்லை" பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பர்,இதற்கு காரணமே தேவையில்லை.இன்று இருப்பது போல் அக்காலத்தில் இல்லையே என்று யாராவது வினவினால் சிரிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.அக்காலத்தில் வீட்டை தாண்டி வெளியூர் சென்று வசித்து வேளை செய்த பிள்ளைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அப்படியானால் அவர்கள் வீட்டை விட்டு சென்றது தவறு என்று அதிரடி முடிவெடுப்பது அடிமுட்டாள்தனம்.வீட்டில் இருந்தாலும் அவர்கள் எதிர் வீட்டு  இருபதுகளை ஏறிட்டேனும் கண்டிருப்பர். இந்த "ஈர்ப்பு" என்பது ஆதாம் காலத்திலிருந்து வழிமுறையாக வருவதே,அவ்வாறு நான் இருந்ததில்லை என்று யாரேனும் கூறுவீர்களா?! அவ்வாறெனில்  அவர்களுக்கு எனது  பதில் "இந்த பொய்க்கு நெக்ஸ்டு ஜென்மத்துல சாப்பாடு இல்ல சார் ,சிங்கிள்  டீ கூட கெடைக்காது".இது எக்காலத்திலும் இருந்ததே, இருப்பதே,இருக்கப்போவதே ஆனால் அக்காலங்களில் முன்பு கூறியது போல இந்த வெளியூர் வேளை தனிமை இவ்வாறான சூழல் மிகமிகக்குறைவு,முக்கியமாக அக்காலங்களில் பாரதியையும் பாரதிதாசனையும் விடைத்தாள்களில்  ஒக்காளமிடப்படித்தவர்களே அதிகம்.இன்று அதனை உயிராகப்படிப்பவர்களும் இருக்கின்றனர்,நாகரிகத்திற்க்காக படிப்பவர்களும் இருக்கின்றனர்,ஒக்காளமிடும் கூட்டணியினரும் ஆங்காங்கே இருக்கின்றனர்.அவர்களின்  பார்வைக்கு ஏற்ப அவர்களின்  அந்த "அதுவும்" .அவர்கள் அதற்க்குத்தரும்  விளக்கங்களும் மாறுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.                                                            

0 comments: