BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, May 13, 2010

உன்னை  ஏறிட்டும்  கண்டதில்லை...  
வாய் சொல்லும் கேட்டதில்லை..
அலைபேசியின் சிணுங்கல்களில் நீ  இருந்ததில்லை..  
பாட்டி சொல்லும் கதை போல் அறிந்துள்ளேன்..
ஆங்காங்கு உனைபற்றி ..
ஆனால் இவர்களின் நையாண்டி பார்வைக்கு,
நான் உந்தன் சரிபாதி,
கேட்க பிடித்ததில்லை..!!
பாடல் வரிகளை யான் ரசித்தால் ,
கனவில் சஞ்சாரமாம்..
அறியாது உன் பெயர் சொன்னால்
அன்றோடு முடிந்தது என் சரிதை,
வராத நாணத்திற்கு வருகைப்பதிவு,
என்னுள் எதுவும் மாறாதபொழுது,
இவர்களுள் ஏன் இந்த இரசாயன மாற்றம்
நினைக்கையில்,
புன்னகையை தவிர வேறு பதில் இல்லை...
இதை என்னவென்று கூற
கண்டதும்...?!!
இல்லை காணாமலே...
ஆனால் இதில் சிறுமாற்றம்,
காதல் இல்லாமலே நான் கவிதை வரைவது,
இதிலும் நான் சற்று வித்தியாசமானவள்  :)

0 comments: