BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, May 19, 2010

ரொமேரோ தருணங்கள்....

அது ஒரு அழகிய இரவு நேரம் ,ஆனால் அழகியது என்று கூறலாகாது, இயற்கையும்  நவரசங்கள் நிறைந்தது,இன்று அது தன் ஆனந்த களிப்பின் உச்சநிலையில் இருந்தது,இயற்கை மட்டும் அல்ல அதன் ஒவ்வொரு படைப்பையும் வியக்கும்,ரசிக்கும்,அதனுடன் ஒட்டி உறவாடும் , அவளும்தான். ஆனால் அவளது இந்த மகிழ்ச்சி அவளது கூந்தலை தன் கரங்களால் வருடிச்சென்ற தென்றலால் ஏற்பட்டது.அவள் அமர்திருந்த இடம் ஒரு அழகிய நந்தவனம் பூக்கள் மிகக்குறைந்தே மலர்ந்தாலும்,அங்கு அடர்ந்து இருக்கும் மரங்களும்,அவை உதிர்க்கும் இலைகளும்,அங்கு நிலவும் அழகிய மௌனமும் அவற்றிடையே அவள் தனிமைகளும் அவள் வாழ்வின் மிகப்பசுமையான பகுதிகள்.இன்றைய பொழுதும் அவள் பசுமைபக்கங்களில் பதிவாகபோகும் பகுதியாக மாறும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.ஆனால் அவளை வருடிச்சென்ற தென்றல் தூதின் செய்தி அவள்  இதழோரத்தில் ஒரு மெல்லிய புன்னகையை விட்டுச்சென்றது.மரங்களின் அடியே இசையின் ஏற்ற  இறக்கங்களை ரசித்தபடி அமர்ந்திருந்த அவள் ,அந்த தென்றலின் ஈர்ப்புவிசையுடன் இணங்கி அதனுடன் மெல்ல நடையிட துவங்கினாள்.காற்றில் அவள் கூந்தல் கடலிற்கு போட்டியாய் அலைபாய்ந்துகொண்டிருந்தது.நெற்றியில் விழும் சிருகீற்று கூந்தல்களை காதருகே ஒதுக்கியபடி அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தாள் ,அவளின் நடையில் பெண்மையின் அழகு என்பதை விட அதன் கம்பீரம் தனித்து தெரியும்.பெண்மைக்கே உரிய கம்பீரம்.இதுதான் ஒருவேளை அந்த மழை மேகத்தை ஈர்த்ததோ?!.இதோ அதன் முதல் துளி சீராய் இறங்கி நந்தவனத்தில் பூத்திருந்த மலர்களை வருடிக்கொண்டிருக்கும் அவள் கரங்களின் மேல் உதிர்ந்தது.அதன் வருகையும் அவள் அறிந்திருக்கவே வேண்டும்.இல்லையெனில் ஏன் இந்த ஆனந்த களிப்பு அவளிடத்தில்.அது ஒரு காதலும் காமநிலையும் கலந்த களிப்பு.அவள் மேல் விழுந்த மழை அமுதினை எதிர்நோக்கியிருந்த  அவள் காதல்,மனதை வருடும் மெல்லிய கிட்டார் இசையை செவிக்குள் சிறையிட்டு ஸ்பரிசம் செய்துகொண்டிருந்தது  அவள் காமம்.அந்த இசைக்கு இந்த சிறைவாசம் புதிதல்ல.ஆனால் நீண்ட நாள் கழித்து சந்தித்த உறவுபோல்,அவள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கேட்ட பகுதி.ஆனால் இது போன்ற அரிய பகுதிகளை  அவள் அரிதாகவே கேட்பாள்.இது அவளுக்கு நீண்ட நாளைய வெறுமைக்குப்பின் தன் காதலை சந்திப்பது போன்று,அவளும் அதை அவ்வாறே விரும்புவாள் .அவள் கண்கள்மூடி அந்த இசையுடன் அந்தரங்கப்பயணம் செய்துகொண்டிருந்தாள்.இப்போது மழைத்துளி அவள் மேல் விழுந்ததும் அவளையும் அறியாது ஒரு கிளர்ச்சி அவளுக்குள்.அந்த கிளர்ச்சியை தனக்காய் பயன்படுத்திக்கொண்டு மழைத்துளி ஒன்றிலிருந்து நூறாய் ஆயிரமாய் அவள் மேல் விழுந்துகொண்டிருந்தது.அது அவளை மொத்தமாய் ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தது.இசை அவள் ஆன்மாவுடனும்,மழை அவள் மெல்லுடல் உடனும்,இரண்டற கலந்துகொண்டிருந்தது.காதல் காமத்தின் முடிவதும் காமம் காதலில் முடிவதும் இயற்கை விதைத்திட்ட நியதி.இயற்கையின் ஒரு பகுதியான அவள் அதற்கு விதிவிலக்கன்று .இப்பொழுதும் அவள் நிலை அவ்வாறே .ஆண் தொடாத பாகம் தன்னில்  இறங்கி அவளின் பெண்மையை அவளுக்கு உணரச்செய்து அவள் நாணத்தை  மெருகேற்றிக்கொண்டிருந்தது.மறுபுறம் இசையும், அவள் ஆன்மாவும் நிகழ்த்திக்கொண்டிருந்த ஸ்பரிசம் உச்சத்தை அடைந்துகொண்டிருந்தது,நரம்பினூடே பாய்ந்து சென்றுகொண்டிருந்த அந்த ச ரி க ம- க்களுக்கு ஏற்ப அவள் விரல்கள் ஆனந்தத்தில் அபிநயம் செய்துகொண்டிருந்தன,அந்த அபினயத்திர்க்கேற்ப அவளதுகால்கள் நடந்துகொண்டிருந்தன.சக்கரவாகம் போல் அவள் அருந்திய மழை நீர், இசைக்கு போட்டியாய் அவளை தமதாக்கிக்கொள்ள யத்தனித்தது.இசையோ காமத்தின் உச்சமான காதலில் அவளின் நரம்புகளை இசையால் பின்னிக்கொண்டிருந்தது .அட! இது என்ன மழைக்கும் இசைக்கும் அவளிடம் அப்படி ஒரு ஈர்ப்பு.யாருக்கும் இதுவரை அவளிடம் ஏற்படாத ஒரு ஈர்ப்பு. ஒருவேளை அவள்  இந்த இயற்கைக்காகவே  படைக்கபட்டவளோ?.இது அவளுக்கும் அவ்விரண்டிடம் உண்டு,சற்று அதிகமாகவே.இசை அவளது வாழ்க்கை ,பரிவுகளில் தாய் போல், அவள்தனிமைகளில் காதல் போல்,இரவுகளில் சரிபாதிபோல்,வெளி உலக தேடல்களில் அவளுக்கு தோள் கொடுக்கும் நட்பு போல் ,மழை அவளது அன்பு,காதல்,காமம்,பரிவு,ஊடல்,சலனம் அனைத்தும். அவளுக்கு அவ்விரண்டும் ஒரு ரகசிய உறவு போல.சிறிதுநேரம் தோன்றினாலும் அவளை முழுதாய் ஆக்கிரமிக்கும் தன்மையது இரண்டும்இது என்ன இவளுக்கு இவ்வாறு ஒரு உறவு?!.இது எது போன்று?!.புரிந்ததில்லை அவளுக்கும்,.அவைகளிடமும் அவள் வினவியதில்லை.ஹெமிங்க்வேயின்
"சம்மர் சான்-பிரான்சிஸ்கோ" வரிகள்  போன்று.மிகவும் அரிதான ஒன்று.யாருக்கும் கிடைக்காத ஒன்று.கிடைத்தாலும் நெருங்கத்தயங்கும் ஒன்று.இவள் தயங்கவில்லை நெருங்கினாள்.அதன் விளைவு இதோ, பேரானந்தத்தில் அவள்.பிறர் உணர இயலாததை ஸ்பரிசித்துக்கொண்டு.        

                                                           
  

0 comments: