BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, May 24, 2010

பெயரிடத்தேவையில்லை

உன்காமங்களுக்கு  நான்  இறை(ரை)யாக...  
என்  பாதைகளில் நீ  ஒரு  துணையாக.. 
கண்வழி  நீ  உன்  மனம்  சொல்ல.. 
இசையாய்  அதை  நான்  உணர்ந்திருக்க.. 
கள்வனே.. 
நீ  கவர்ந்தது  என்  மனமன்று..  
என்  வாழ்வின்  எழுதா பக்கங்களை.. 
நான்  ஏங்கிக்கிடந்த  தருணங்களை.. 
எனக்கென்றே  அவன்  படைத்த  நினைவுகளை.. 
கள்வனே… 
உனதாக்கிக்கொண்டாய்   இவை  அனைத்தையும், 
உனை  எனதாக்கிகொண்டேன்  நான்..
இதை காதல் என்பர்  கவிதையர்,  
காமம்  என்பர்  வேறு  பலர்..
இனக்கவர்ச்சி  என்னும் இந்த கற்றோர்  உலகம்.. 
கடவுளின்  புதுக்குழந்தை  இது என்பேன்.. 
நமதென்று  ஜனித்தது  நமக்குள்ளே..
உனை  நானும்  எனை  நீயும்,
மனம் அறிந்த நொடிப்பொழுதில்....
                                                    

0 comments: