BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, July 21, 2010

சில்லென்ற காற்றை..
சிறுநடை இட்டு ரசித்தபடி,
"சின்னஞ்சிறுகிளியே"விற்கு..
"ஆஹா"ரம் செய்திருந்தேன்,
முன்சென்ற தமிழச்சியின்,
குறுக்கிட்ட குரல் இது..
"வாகா, வாகா, வாவ்!! வாவ்!!"
பத்தே நாட்களில் பிரபலமானது,
எண்ணினேன்,
நூற்றுப்பதினேழு அகவையாய்,
நாம் "வாவ்!!" சொல்ல காத்திருக்கும்,
கவியவன் வரிகளை

Friday, July 16, 2010

பக்..

           கப் என்று சொல்ல வராத ஒரு சிறு மழலையின் வாய்ச்சொல் அது.சுமார் ஒன்றரை வயது இருக்கும்."ஜான்வி!!அண்ணா கிட்டே போ,அண்ணா கூப்பிடறான் பாரு" என்றார் அக்குழந்தையை அழைத்து வந்திருந்த அவளது அன்னை ,அதுவும் என் தம்பியிடம் சென்று அழகாக அவனருகில் அமர்ந்துகொண்டது, என் பெரியம்மா என்னை அவர்களுக்கு அறிமுகபடுத்தியவுடன், "ஓ! நானும் இன்ஜினியர் தான் மா!" என்று கூறிக்கொண்டிருந்தார்.நான் அதை மறுத்து  இன்ஜினியர்க்கும் தொழிற்நுட்ப  வல்லுனருக்குமான   என் வழக்கமான விளக்கத்தை அளித்துகொண்டிருந்தேன்,என் நா அவருக்கு விளக்கமளித்துகொண்டிருந்தாலும் என் எண்ணம் அந்த சிறு குழந்தையிடமே இருந்தது.இதை உணர்ந்த ஜான்வியின் அம்மா!! "ஜானு!! அக்கா இருக்கா பாரு ..அக்கா கிட்டே போ..அக்கா பாரு!! என்றார்.அது மெதுவாக என்னை நோக்கி சோபாக்களின்மேல் கையூன்றி தத்தி தத்தி வந்தது. மற்றொரு சோபாவின் மீது அமர்ந்திருந்த என் கால்களினூடே புகுந்து என் மீது தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.நான் அதனிடம்,"குட்டி பொண்ணு பேர் என்ன?!" என்றேன் அழகாய்  "jaaaaani" என்றது.மற்ற குழந்தை கள் போல் அது என் முகம்  பார்த்து சிரிக்கவில்லை.சிரித்தது ஆனால் வேறெங்கோ பார்த்து சிரித்துகொண்டிருந்தது.என் கைகளை அழகாய் அதான் பிஞ்சு விரல்களால் தொட்டு பார்த்து கொண்டிருந்தது .இது வழக்கமான குழந்தையின் செயல் என்று நானும் அதை பொருட்படுத்தவில்லை .இன்னும் சொல்லப்போனால் அது குழந்தைகளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.சிறிதுநேரம் கழித்து என் தம்பியிடம் திரும்பவும் சென்றது,ஆனால் அதன் நடை சாதாரண குழந்தையினும் சற்று வித்தியாசமாக எனக்கு தோன்றியது. என் தம்பியும் அதனுடன் விளையாட துவங்கினான். அவன் திடீரென்று என்னிடம் "பாவம் ஜில்லு இந்த கொழந்த பொறந்ததுலேர்ந்தே ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்ல. அவாளுக்கே 22  டேஸ் கழிச்சுதான் தெரியவந்துது !!" , என்றான்.  நான் என் பெரியம்மாவிடம் "எதனால இப்படி?,டாக்டர் கிட்டே போனாலா?!" என்றேன். பெரியம்மா " போனா, ஏதோ ரெட்டினால் டிடாச்மெண்டாம் (retinal detachment) ,கடைசி ஸ்டேஜ் அதனால டாக்டர் எதுவும் பண்ண முடியாது சொல்லிட்டா !!..".எனக்கு அப்பொழுது , மனதில் ஏதோ ஒரு வலி தோன்றியது போல் இருந்தது,இனம் தெரியாத ஏதோ ஒன்று மனதை இறுக அழுத்துவதுபோல் ,ஏனோ கண்ணில் சிறு துளிகூட வரவில்லை  நான் அக்குழந்தையின் செயலையே கவனித்து கொண்டிருந்தேன்..  என் தம்பி அதனை " ABC.." கூற சொன்னான் அழகாக மழலை maaraadhu கூறியது, என் பேர் சொல்லு "அரபு!! சொல்லு,அரபு!!". அது அழகாக "அப்பு" என்றது.."மிக்கி எங்க?"  என்றான்,அதன் கையில் இருந்த சிறு பொம்மையை காண்பித்து.."மிச்சி!!" என்றது.  .சிறிதுநேரம் விளையாடிகொண்டிருந்த அர்விந்த் முன்தினத்து கால்பந்தாட்டத்தின் மறுஒளிபரப்பை காண அமர்ந்துவிட்டான். அக்குழந்தை தரையில் அமர்ந்து அந்த மிக்கி பொம்மையை தடவி பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து கொண்டிருந்தது.அவளையே நோக்கி கொண்டிருந்தேன். "இம்மி..ம்ம்ம்ம்.. issskkh " என்று அழகாய் அந்த பிஞ்சு தான் மட்டுமே பொருள் உணர்ந்த ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தது.நான் அமர்ந்து இருப்பது தெரியாமல் என் அருகில் வந்து அமர்ந்தது.நான் பொறுமையாய் அதன் அருகில் சென்று "ஜானுமா!!" என்றேன் மெதுவாக , அதற்கு என்ன தோன்றியதோ!! மெதுவாக என்னிடம் வந்து என் முகத்தை தடவியது, சட்டென்று குத்துக்காலிட்டு அமர்திருந்த என் மீது பாய்ந்து வந்து என் கால்களின் மேல் படுத்துக்கொண்டது.நானும் அதனிடம் அந்த "பக்" விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன்.என்னிடம்  ஒரு விளையாட்டான பழக்கம் உண்டு எந்த குழந்தையாக இருந்தாலும் அதன் உள்ளங்கையை மெதுவாக வருடிக்கொடுப்பேன்.கெளதம் முதன்முதலில் சிரித்ததே அவ்வாறுதான்.அந்த mudhal  புன்னகைக்கு இவ்வுலகில் வேறு ஈடு இணை இல்லை ,எந்த குழந்தையும் அதற்கு அழகாய் புன்னகைக்கும். ஜானவியும் அழகாய் புன்னகைத்துகொண்டே மருதாணி இடுவதற்கு கரம் காண்பிப்பது போல் காட்டிக்கொண்டிருந்தது.பிறகு எல்லா குழந்தைகளிடமும் நாம் அனைவரும் விளையாடும் "முட்டு முட்டு"க்கள். நான் குத்துக்காலிட்டிருந்ததால்  என் முட்டியின்  மீது தலைவைத்து படுத்திருந்தாள்.,அதனிடம் பொறுமையாக "முட்டு முட்டு முட்டு முட்டு முட்டு முட்" என்று அதன் நெற்றியில் அதற்கு வலிக்கதவாறு இடித்தேன்.. இடித்ததும்தான் தாமதம் அதுவரை அமைதியாய் இருந்த குழந்தை வாய்விட்டு "ஹி ஹி" என் சிரிக்கத்தொடங்கியது..நான் மீண்டும் அவ்வாறு முட்டு முட்டு என்றேன் மீண்டும் அழகாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த பெரியம்மா.. "ஜில்லு இது இதுவரைக்கும் இப்படி சிரிச்சதே இல்லேடி!!,என்னமோ இப்படி சிரிக்கறது பாரேண்டா அர்விந்த் "..என்றார், நான் மீண்டும், மீண்டும் அவ்வாறு செய்தேன்,அழகாய் வாய்விட்டு சிரித்துக்கொண்டே இருந்தது. அதுவரை மனதுள் அடக்கிவைத்திருந்தது இப்பொழுது கண்ணீர் துளியாய்   என் கண்களை மறைக்கத்துவங்கியது,கண்ணீரை துடைத்துக்கொண்டு "கப்" என்றேன், "பக்" என்றது அக்குழந்தை.ஏன் என்று தெரியவில்லை, இதை எழுதும்பொழுதும் கண்ணீர். மனிதம் புதைந்தது என்கிறோம் நாம், அதைப்போல் கடவுளிடமும் கடவுள் இல்லையோ...!!

Thursday, July 15, 2010

என் நாசிக்குள்,
நம் இரவின் பதிவுகள்,
உன் ஆடைகாற்று  வாசமாய்..

சாருகேசியினும் மோகமிக்க,
பொழுதுகள் அவை...

 உன் தீண்டல்களில்,

உன் கெஞ்சல்களில்,

உன் கொஞ்சல்களில்,         

என் மிஞ்சல்களுக்காய் பிறந்த
உன் வலிமைகளில்,

மோகம் ஒரு நெருப்பாய்..

நல்ல சந்தங்கள் சேர்ந்ததுபோல்,
என் இடதில் நீ நெடுக, 
உன் வலதில் நான் குறுகி,

சிறு மோகனத்தில் முடிந்தது
நம் சாருகேசி..

Monday, July 5, 2010

எண்ணச்சிதறல்..

ஒரு பாடல் வரியை கேட்டுகொண்டிருந்தபோது தோன்றியது, இசையை உணர்ந்து "நாம் அதற்கு அடிமை" என்று கூறும் சொற்கள் பொய்யோ ?!,நாம் அடிமை படுபவைகளை உணர்த்த அது ஒரு கருவியாக நமது அடிமையாக மாறிவருகிறதோ?! என்று தோன்றுகிறது,யோசித்தேன் இசையும் இயற்கைதானே.. நமக்குத்தான் தெரியுமே மனிதத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான பந்தம்...

Saturday, July 3, 2010

ரயில் பயணத்தில் யோசித்தது..

 கற்கள் கரைந்திடாதென்றார்கள்..
இதோ காண்கிறேன்,
மண்ணாய் போகும் மனிதர்களை..