ஒரு நாள் உன் வாழ்வென்றால்
என்ன வரம் கேட்பாய்?
என்றது கனவில் உதித்த இருள்தோற்றக் கடவுள்
என்னவனுடன் எந்நொடியைக் கழித்திட விருப்பமென்றேன்
உச் கொட்டி
முகம் சுருக்கி
எனை நோக்கி இருள்தோற்றம்
தனித்துவம் சிலாகிக்கும் நீயும் அவ்வாறுதானா?
என்றே பொறுமையற்று
கேள்வி ஒன்றை போர்தொடுக்க
புன்னகையை உதிர்த்துவிட்டு
கால் அனைத்து அமர்ந்திருந்தேன்
இதற்கான பொருள் என்னவோ புரியாத புதிர்ப்பெண்னே?,என
நன்றாய்த்தான் இருக்கிறது
இறையின் தமிழ் இலக்கணமும் என்றேன்
அதுகிடக்க ஒரு புறம்
அது என்ன அனைவரும் ஒரு போல ஒரே பதில்?!
துணையுடன் தன் நொடியைக் கழித்திட விருப்பம் கோரி
என கேள்விக்கனை மற்றொன்றைத் தொடுக்க
இருளுக்கு வெளிச்சம் விடையில் விளைந்தது
அவன் வரை அவன் அன்னை
பாசம் தருபவள்
பணிவிடை செய்பவள்
உதவும் நட்பு போல்
அவள் வரை அவன் என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்
அவன் வரை அவன் தந்தை
தாயின் நிலைகூட
இல்லாத கனவான்
மரியாதை என்பதொன்றே
இவ்வுறவிற்க்கான அவன் பாலம்
அவர் வரை அவன் என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்
அவன் வரை அவன் தம்பி
செல்லபிராணி என்பான்
தீராத இம்சை என்பான்
எலியும் எலியும் மோதக் கண்டால்
இவர்களின் இரு உருவே பிரசன்னமாகும்
அவன் வரை அவன் உறவு என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்
அவன் வரை அவன் நட்பு
நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
நட்பென்று வந்துவிட்டால் அவன் நிலை அவ்வாறே
கனநேர நெருக்கங்கள் கனத்துவிடும் சில நேரம்
யாவர் இவர்கள் வரை அவன் உறவு என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்
அவன் வரை அவன் காதல்
சில நேரம் அவள் என்பான்
சில நேரம் இவள் என்பான்
எந்நேரமும் எனக்கெந்தன் இசை என்பான்
அவள் வரை இசை வரை அவன் உறவு என்னவென்று அருகமர்ந்து உணர எண்ணம்
இருளே விடை புலர்ந்ததோ உமக்கங்கு? என்றேன்
இருள் சிரிக்க
துயில் புலர்ந்தது எந்தன் இளங்காலை
கடவுள்
இருள் விலக்கி போர்த்தியிருந்தான்
படர் மணலும் பசுமையையும்
மணல் மீது நீர் மகரந்தங்களையும்.
என்ன வரம் கேட்பாய்?
என்றது கனவில் உதித்த இருள்தோற்றக் கடவுள்
என்னவனுடன் எந்நொடியைக் கழித்திட விருப்பமென்றேன்
உச் கொட்டி
முகம் சுருக்கி
எனை நோக்கி இருள்தோற்றம்
தனித்துவம் சிலாகிக்கும் நீயும் அவ்வாறுதானா?
என்றே பொறுமையற்று
கேள்வி ஒன்றை போர்தொடுக்க
புன்னகையை உதிர்த்துவிட்டு
கால் அனைத்து அமர்ந்திருந்தேன்
இதற்கான பொருள் என்னவோ புரியாத புதிர்ப்பெண்னே?,என
நன்றாய்த்தான் இருக்கிறது
இறையின் தமிழ் இலக்கணமும் என்றேன்
அதுகிடக்க ஒரு புறம்
அது என்ன அனைவரும் ஒரு போல ஒரே பதில்?!
துணையுடன் தன் நொடியைக் கழித்திட விருப்பம் கோரி
என கேள்விக்கனை மற்றொன்றைத் தொடுக்க
இருளுக்கு வெளிச்சம் விடையில் விளைந்தது
அவன் வரை அவன் அன்னை
பாசம் தருபவள்
பணிவிடை செய்பவள்
உதவும் நட்பு போல்
அவள் வரை அவன் என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்
அவன் வரை அவன் தந்தை
தாயின் நிலைகூட
இல்லாத கனவான்
மரியாதை என்பதொன்றே
இவ்வுறவிற்க்கான அவன் பாலம்
அவர் வரை அவன் என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்
அவன் வரை அவன் தம்பி
செல்லபிராணி என்பான்
தீராத இம்சை என்பான்
எலியும் எலியும் மோதக் கண்டால்
இவர்களின் இரு உருவே பிரசன்னமாகும்
அவன் வரை அவன் உறவு என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்
அவன் வரை அவன் நட்பு
நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
நட்பென்று வந்துவிட்டால் அவன் நிலை அவ்வாறே
கனநேர நெருக்கங்கள் கனத்துவிடும் சில நேரம்
யாவர் இவர்கள் வரை அவன் உறவு என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்
அவன் வரை அவன் காதல்
சில நேரம் அவள் என்பான்
சில நேரம் இவள் என்பான்
எந்நேரமும் எனக்கெந்தன் இசை என்பான்
அவள் வரை இசை வரை அவன் உறவு என்னவென்று அருகமர்ந்து உணர எண்ணம்
இருளே விடை புலர்ந்ததோ உமக்கங்கு? என்றேன்
இருள் சிரிக்க
துயில் புலர்ந்தது எந்தன் இளங்காலை
கடவுள்
இருள் விலக்கி போர்த்தியிருந்தான்
படர் மணலும் பசுமையையும்
மணல் மீது நீர் மகரந்தங்களையும்.
2 comments:
Awesome poem... :) Like it a lot... :)
Thanks Rachana.
Post a Comment