தனக்குப் பிடித்ததில்தான்
அதன் உலகம் சுற்றுமாம்,
உலகை உணராச் சிறுபிள்ளைகளுக்கு
விருப்பம் வெறுப்பு என
அதற்கு அனைத்தும் அதனுள்ளே
நெருக்கமாய் தான் உணரும்
உள்ளத்துடன்,
சொல்லாமல் தானே
நெருங்கிவிடும் அவ்வுள்ளம்.
கோபம் வந்தால்,
மௌனம் கொள்ளும்
கொஞ்சல் புரிந்தால்,
சிரித்து நகரும்
தான் பிடித்த முயலுக்கு
மூன்று கால் என்றால்,
முயலே அது அல்ல
மூஞ்சூறு என்றிடும்.
சுற்றங்கள் வியந்திடக் கதைகள் பல பேசும்,
அச்சுற்றமே கோபிக்கும்,
கருப்பொருளும் அச்சிசுவாகும்.
தன் பொருள் தமதென்ற,
எண்ணம் கொள்ளும் சில நேரம்.
பிறர் மகிழப் பகிர்ந்தளிக்கும்,
உள்ளம் உண்டு சில நேரம்.
யாரும் தேவை இல்லை என,
உடல்மொழி கூறினாலும்.
எவரும் அல்லாது இயங்காது,
அதன் மனமொழி.
பொதுவரிகள் இவை யாவும்,
சிறுபிள்ளைகளுக்கு மட்டுமல்ல.
அவரும் அப்படித்தான்.
1 comments:
கலக்கிட்டீங்க Aishu :)
Post a Comment